Crime : 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. மதுபோதையில் இளைஞர்கள் செய்த கொடூரம்....என்ன நடந்தது?
டெல்லியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime : 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. மதுபோதையில் இளைஞர்கள் செய்த கொடூரம்....என்ன நடந்தது? Crime 3 year old girl physically assault Delhi Fatehpur Beri 2 arrested Crime : 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. மதுபோதையில் இளைஞர்கள் செய்த கொடூரம்....என்ன நடந்தது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/eb07d39b73618114c1568af1286580cc1675567460896571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Crime : டெல்லியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பத்தேபூர் பேரி என்ற பகுதியில் வசிக்கும் ராணி என்பவருக்கும் மூன்று வயது பெண் குழந்தை உள்ளது. இவரின் வீட்டிற்கு அருகே இரு இளைஞர்கள் வசித்து வருகின்றனர். ராம்நிவாஸ் பனிகா (27), சக்திமான் சிங்(22) என்ற இருவரும் மத்திய பிரதேச மாநிலம் சித்தி பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வேலைக்காக டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், ராணியின் மூன்று வயது குழந்தை வீட்டில் நீண்ட நேரமாக இல்லை. இதனால் பதறிப்போன ராணி, அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர், இரண்டு பேர் காட்டு பகுதிக்கு குழந்தையை அழைத்து சென்றதாக கூறினர். இதனை அடுத்து பத்தேபூர் காட்டுப் பகுதிக்கு ராணி சென்றார். அங்கு அவரது குழந்தை அழுது கொண்டிருந்தது. மேலும், குழந்தையின் உறுப்பில் ரத்த காயம் இருந்துள்ளதை கண்டார்.
இதனை அடுத்து, அதிர்ச்சி அடைந்த ராணி, குழந்தையை வீட்டிற்கு தூக்கிச் சென்று கணவரிடம் கூறியுள்ளார். பின்னர், இருவரும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி ராம்நிவாஸ் மற்றும் சக்திமான் சிங்க ஆகிய இருவரையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மதுபோதையில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்சோ சட்டம்
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர்.
18 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக இந்த போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த தகவல்கள் பின்வருமாறு:
Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
Aggravated penetrative sexual assault - தீவிரமான பாலியல் தாக்குதல்
Sexual Assault - பாலியல் தொல்லை
Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
Sexual Harassment - பாலியல் தொந்தரவு
Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்
இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.
18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
12 வயதுக்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)