மேலும் அறிய

Crime: அமமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

ஆரணியில் அமமுக கட்சி பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழனிஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பரசுராமன் மகன் கோதண்டம். இவருக்கு குமாரி என்ற மனைவியும் பாஸ்கர் சுரேஷ் என்ற 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். மேலும் கோதண்டம் என்பவர் பட்டு சேலை வியாபாரம் மற்றும் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் உள்ளிட்டவைகள் தொழில் செய்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் மாவட்ட அவைத் தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி செய்யார் சென்று விட்டு வருவதாக கோதண்டம் தனது குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பி வரவில்லை என்பதால் ஜனவரி 7ம் தேதி ஆரணி நகர காவல் நிலையத்தில் கோதண்டம் மகன் பாஸ்கர் என்பவர் தனது தந்தை கோதண்டம் காணவில்லை என புகார் அளித்தார்.

 


Crime: அமமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

இதன் பேரில் ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து ஆந்திரா சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். இதனையொடுத்து ஆந்திரா மாநிலம் சத்தியவேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட தெலுங்கு கால்வாயில் ஆண் சடலம் இருப்பது தெரிய வந்தன. இதனை விசாரணை செய்த போலீசார் இறந்தது கோதண்டம் என்பவர் தான் என்றும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளது தெரியவந்தன. மேலும் கோதண்டம் என்பவருக்கு ஆரணி அருகே ஆகாரம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் உதவியாளராக இருந்தவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரும் சரணவன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு கிடுக்கிடுபிடி விசாரணை செய்தனர்.

 


Crime: அமமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

 

இதில் சரவணனின் டிரைவர் குமரன் என்பவர் ஆரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரணடைந்தார். பின்னர் குமரன் மற்றும் சரவணனை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சரவணன் அளித்த வாக்குமூலத்தில், சரணவனின் சொத்தான 6 ஏக்கர் நிலத்தை கோதண்டத்திற்கு கிரையம் உரிமையை தந்து அதற்காக 1 கோடி ரூபாய் பணமாக சரவணன் என்பவர் பெற்றுள்ளார். நாளடைவில் இருவருக்கும் நட்பு தொடர்ந்த காரணத்தினால் 6 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனை பட்டா போட்டு விற்பனை செய்ய முயன்றனர். இதனால் கோதண்டம் மீது உள்ள கிரையம் உரிமையை ரத்து செய்து கொடுக்குமாறு கோதண்டனிடம் சரவணன்  கேட்டு உரிமத்தை ரத்து செய்து பணத்தை தர மறுத்துள்ளதாக தெரிகின்றன.

 


Crime: அமமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

 

மேலும் தொடர்ந்து தொந்தரவு செய்த கோதண்டம் என்பவரை தீர்த்து கட்ட சரவணன் முடிவு செய்து தன்னுடைய நண்பனும் ஓட்டுனருமான ஆரணி டவுன் அருணகிரி சத்திரம் பகுதியை சேர்ந்த குமரன் என்பவரை அணுகி உள்ளார். குமரன் என்பவர் சென்னை குன்றத்துர் பகுதியை சேர்ந்த குட்டி (எ) தணிகாசலம் தொடர்பு கொண்டு கொலை செய்ய திட்டம் தீட்டி கொலைக்காக 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி முதல் கட்டமாக 6 லட்சம் ரூபாய் கூலிபடைக்கு சரவணன் வழங்கியுள்ளதாக தெரிகின்றன. இதனையொடுத்து கோதண்டம் என்பவரை பின் தொடர்ந்து சரவணன் குமரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த குட்டி (எ) தணிகாசலம் நேருஜி ஸ்ரீதர் வினோத் வீரமணி உள்ளிட்ட 7 பேர் செய்யார் தாலுகா அலுவலகத்தில் வெளியே வந்த கோதண்டத்தை சென்னை படப்பை பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் இடம் சம்மந்தமாக பார்த்து விட்டு வரலாம் என்று கூறி காரில் கடத்தி கொண்டு செய்யார் சென்னை சாலையில் செல்லும் போது திடீரென குட்டி (எ) தணிகாசலம் ஆகியோர் கோதண்டத்தை கழுத்து நெரித்து கொலை செய்துள்ளனர்.

 


Crime: அமமுக பிரமுகர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

பின்னர் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு கிராமத்தில் உள்ள தெலுங்கு கங்கை ஆற்று கால்வாயில் சடலத்தை போட்டுவிட்டு சென்று விட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, சரவணன், குமரன், நேருஜி குட்டி (எ) தணிகாசலம் ஆகிய 4 பேர் மீது கொலை வழக்கு பதிந்து கொலைக்காக பயன்படுத்திய 2 கார்களை பறிமுதல் செய்து செய்யார் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கூலிப்படையாக செயல்பட்ட ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் வயது (34) சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரமணி வயது (31) கும்மிடிப்பூண்டி தாலுகா தானிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் வயது (24) ஆகிய மூவரும் தலைமறைவாக இருந்தனர். தனிப்படை போலீசார் அவர்களது செல்போன் உரையாடல்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஆரணி பகுதியில் வழக்கு நடந்து வருவதால் முக்கிய பிரமுகரை சந்திக்க அவர்கள் வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ஆரணி - சேவூர் பைபாஸ் சாலை அருகே 3 பேரையும் மாலை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் ஆரணி கோா்ட்டில் ஆஜர்படுத்தினர். மூவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Embed widget