மேலும் அறிய

விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

முருகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்; தலைமறைவாக இருக்கு சுந்தர மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்

விழுப்புரம் பாக்கம் கூட்டுசாலையை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் மகன் நெல் வியாபாரி முருகன் என்பவர் மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வருகிறார். இவர்களிடம் வேலை செய்யும்  கோண்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கெங்கமுத்துவிடம் நீங்கள் தீபாவளி சீட்டுக்கு 50 பேரை சேர்த்து விட்டால் உங்களுக்கு ஒரு சீட்டு இலவசம் என்று சுந்தரமூர்த்தி கூறினார். இதை நம்பிய கெங்கமுத்துவின் மனைவி மஞ்சுளா, கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 78 பேரை தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டதோடு ஒருவருக்கு மாதம் 200 வீதம் 78 பேருக்கு 15,600 ரூபாயை செலுத்தி உள்ளார். இவ்வாறாக 12 மாதத்திற்கு 1 லட்சத்து 87 ஆயிரத்து 200 ரூபாயை மாதந்தோறும் சுந்தரமூர்த்தியிடம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மஞ்சுளா கொடுத்து வந்துள்ளார். சில சமயங்களில் சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மகன் முருகன், மருமகள் மகேஸ்வரி ஆகியோர் பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீது தராமல் ஒரு நோட்டில் வரவு வைத்துக்கொண்டு கையெழுத்து வாங்கி வந்துள்ளார்.


விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

மஞ்சுளாவை போன்று அதே கிராமத்தை சேர்ந்த அஞ்சலை என்பவர் தனக்கு தெரிந்த 50 பேரிடமும், வில்லியனூர் கீழுர் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தனக்கு தெரிந்த 54 பேரிடமும், ஆனந்தாயி என்பவர் தனக்கு தெரிந்த 63 பேரிடமும், மிட்டாமண்டகப்பட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் தனக்கு தெரிந்த 42 பேரிடமும் பணம் வசூலித்து  மொத்தம் 41 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாயை சுந்தரமூர்த்தி, முருகன், மகேஸ்வரி ஆகியோரிடம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாக கூறினர். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். பணத்தை பறிகொடுத்தவர்கள், சுந்தரமூர்த்தி வீட்டிற்கு சென்று தங்களது பணத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் மீதும் துணை காவல் கண்காணிப்பளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் சுந்தரமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget