மேலும் அறிய

விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

முருகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்; தலைமறைவாக இருக்கு சுந்தர மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்

விழுப்புரம் பாக்கம் கூட்டுசாலையை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் மகன் நெல் வியாபாரி முருகன் என்பவர் மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வருகிறார். இவர்களிடம் வேலை செய்யும்  கோண்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கெங்கமுத்துவிடம் நீங்கள் தீபாவளி சீட்டுக்கு 50 பேரை சேர்த்து விட்டால் உங்களுக்கு ஒரு சீட்டு இலவசம் என்று சுந்தரமூர்த்தி கூறினார். இதை நம்பிய கெங்கமுத்துவின் மனைவி மஞ்சுளா, கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 78 பேரை தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டதோடு ஒருவருக்கு மாதம் 200 வீதம் 78 பேருக்கு 15,600 ரூபாயை செலுத்தி உள்ளார். இவ்வாறாக 12 மாதத்திற்கு 1 லட்சத்து 87 ஆயிரத்து 200 ரூபாயை மாதந்தோறும் சுந்தரமூர்த்தியிடம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மஞ்சுளா கொடுத்து வந்துள்ளார். சில சமயங்களில் சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மகன் முருகன், மருமகள் மகேஸ்வரி ஆகியோர் பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீது தராமல் ஒரு நோட்டில் வரவு வைத்துக்கொண்டு கையெழுத்து வாங்கி வந்துள்ளார்.


விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

மஞ்சுளாவை போன்று அதே கிராமத்தை சேர்ந்த அஞ்சலை என்பவர் தனக்கு தெரிந்த 50 பேரிடமும், வில்லியனூர் கீழுர் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தனக்கு தெரிந்த 54 பேரிடமும், ஆனந்தாயி என்பவர் தனக்கு தெரிந்த 63 பேரிடமும், மிட்டாமண்டகப்பட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் தனக்கு தெரிந்த 42 பேரிடமும் பணம் வசூலித்து  மொத்தம் 41 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாயை சுந்தரமூர்த்தி, முருகன், மகேஸ்வரி ஆகியோரிடம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாக கூறினர். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். பணத்தை பறிகொடுத்தவர்கள், சுந்தரமூர்த்தி வீட்டிற்கு சென்று தங்களது பணத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் மீதும் துணை காவல் கண்காணிப்பளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் சுந்தரமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
Embed widget