மேலும் அறிய

விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

முருகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்; தலைமறைவாக இருக்கு சுந்தர மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்

விழுப்புரம் பாக்கம் கூட்டுசாலையை சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் மகன் நெல் வியாபாரி முருகன் என்பவர் மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வருகிறார். இவர்களிடம் வேலை செய்யும்  கோண்டூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கெங்கமுத்துவிடம் நீங்கள் தீபாவளி சீட்டுக்கு 50 பேரை சேர்த்து விட்டால் உங்களுக்கு ஒரு சீட்டு இலவசம் என்று சுந்தரமூர்த்தி கூறினார். இதை நம்பிய கெங்கமுத்துவின் மனைவி மஞ்சுளா, கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 78 பேரை தீபாவளி சீட்டில் சேர்த்து விட்டதோடு ஒருவருக்கு மாதம் 200 வீதம் 78 பேருக்கு 15,600 ரூபாயை செலுத்தி உள்ளார். இவ்வாறாக 12 மாதத்திற்கு 1 லட்சத்து 87 ஆயிரத்து 200 ரூபாயை மாதந்தோறும் சுந்தரமூர்த்தியிடம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மஞ்சுளா கொடுத்து வந்துள்ளார். சில சமயங்களில் சுந்தரமூர்த்தி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மகன் முருகன், மருமகள் மகேஸ்வரி ஆகியோர் பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீது தராமல் ஒரு நோட்டில் வரவு வைத்துக்கொண்டு கையெழுத்து வாங்கி வந்துள்ளார்.


விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

மஞ்சுளாவை போன்று அதே கிராமத்தை சேர்ந்த அஞ்சலை என்பவர் தனக்கு தெரிந்த 50 பேரிடமும், வில்லியனூர் கீழுர் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தனக்கு தெரிந்த 54 பேரிடமும், ஆனந்தாயி என்பவர் தனக்கு தெரிந்த 63 பேரிடமும், மிட்டாமண்டகப்பட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவர் தனக்கு தெரிந்த 42 பேரிடமும் பணம் வசூலித்து  மொத்தம் 41 லட்சத்து 6 ஆயிரத்து 500 ரூபாயை சுந்தரமூர்த்தி, முருகன், மகேஸ்வரி ஆகியோரிடம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தேதியில் தருவதாக கூறினர். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். பணத்தை பறிகொடுத்தவர்கள், சுந்தரமூர்த்தி வீட்டிற்கு சென்று தங்களது பணத்தை திருப்பித்தரும்படி கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

விழுப்புரம் அருகே ஏலச்சீட்டு நடத்தி 41 லட்சம் மோசடி - தம்பதி கைது; ஒருவர் தலைமறைவு

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் மீதும் துணை காவல் கண்காணிப்பளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், அவரது மனைவி மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் சுந்தரமூர்த்தியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget