மேலும் அறிய

முதல் கணவர் எண்ட்ரி... இரண்டாவது கணவர் சோகம்... மூன்றாவது நாள் மனைவி எஸ்கேப்! நீ வருவாய் என பார்ட் 2 க்ரைம்!

ரஞ்சனி யாருடைய மனைவி என்கிற போட்டி ஒருபுறம், மாயமான ரஞ்சனி... எங்கே நீ... என தேடுதல் மறுபுறம் என தற்போது இந்த பிரச்னை பந்தயசாலை போலீசார் தலையில் விழுந்திருக்கிறது.

 

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவாரெட்டியூரைச் சேர்ந்தவர் அருண்குமார். ‛தனக்கு தங்கமான மனைவி வேண்டும்... தன் குடும்பத்திற்கு அரணாக இருக்க வேண்டும்...’ என நீண்ட நாள் மணப்பெண் தேடலில் இருந்தவர். ‛பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்... நீ வருவாய் என,’ பாடலில் பார்த்திபன் போல, மகிழ்ச்சியோடு வருங்கால மனைவிக்கு காத்திருந்தார். இடைத்தரகர்கள் மூலம் தீவிர பெண் பார்க்கும் படலம் தொடர்ந்தது. இறுதியில் ரஞ்சனி என்ற பெண் பற்றி இடைத்தரகர்கள் கூற, ‛என் குடும்பத்திற்கு ஏற்ற குத்துவிளக்கு இது தான்...’ என அருண்குமாரும் டிக் செய்தார். எங்கே பெண் பார்க்கலாம் என பேசிய போது, ‛கோவை கோணியம்மன் கோயிலுக்கு வாருங்கள்...’ என, ரஞ்சனி கூறியுள்ளார். ‛என்னே ஒரு பக்தி... என்னே ஒரு அடக்கம்...’ என மெய்சிலிர்த்த அருண், கடந்த வாரம் ஞாயிறு அன்று குடும்ப சகிதமாக கோணியம்மன் கோயிலுக்கு புறப்பட்டார். ‛எனக்கென பிறந்தவ றெக்கை கட்டி பறந்தவ இவ தான்...’ என, உடனே முடிவு செய்த அருண் குமார், மறுநாளே திருமணத்திற்கு ஓகே சொல்ல, குருவாரெட்டியூர் கிராமத்தில் எளிமையாக நடந்து முடிந்தது அருண்குமார்-ரஞ்சனி திருமணம்.


முதல் கணவர் எண்ட்ரி... இரண்டாவது கணவர் சோகம்... மூன்றாவது நாள் மனைவி எஸ்கேப்! நீ வருவாய் என பார்ட் 2 க்ரைம்!

‛குத்துவிளக்காக குலமகளாக.. நீ வந்த நேரம்...’ என மனைவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அருண்குமார், தன் கனவு வாழ்க்கை நிறைவேறிவிட்டதாக இனிமையாய் வாழ்க்கையை துவக்கினார். மூன்று முடிச்சு போட்டதாலோ என்னவோ... மூன்று நாட்கள் தான் அந்த இன்பம் நிலைத்தது. நான்காவது நாள் காலை விடிந்தது. காலையில் காபி கொண்டு வரும் மனைவி ரஞ்சனியை காணவில்லை. தேடாத இடமில்லை... ஓடாத தடமில்லை... காபியும் வரலே... ரஞ்சனியும் வரலே! ‛டயர்டு’ ஆகி வீட்டுக்கு வந்த அருண்குமார், பீரோவை திறந்து பார்த்த போது தான், வீட்டுக்கு வந்த குத்துவிளக்கு, வீட்டிலிருந்த குத்துவிளக்கு உள்ளிட்ட அனைத்தையும் வாரி சுருட்டி எடுத்துச் சென்றது தெரிந்தது. 5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் முதற்கொண்டு அபேஸ்.


முதல் கணவர் எண்ட்ரி... இரண்டாவது கணவர் சோகம்... மூன்றாவது நாள் மனைவி எஸ்கேப்! நீ வருவாய் என பார்ட் 2 க்ரைம்!

‛எங்க வீட்டு குத்துவிளக்கு ... நீ கெடச்சா வாழ்க்கை கெத்து...’ என வெறியோட ரஞ்சனியை தேடி ஆரம்பித்தார் அருண். ‛தேடினாலும் கிடைக்காது...’ என்பதைப் போல், மாயமானார் ரஞ்சனி. ‛ரஞ்சனி தன் வாழ்வின் சனி...’  என அப்போது தான் அருணுக்கு தெரிந்தது. மாமியார் வீட்டுக்குச் செல்ல வேண்டிய புதுமாப்பிள்ளை அருண்குமார், அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு சென்றார். புகார் செய்தார். சரி, இனி அனைத்தையும் காவல்துறை பார்த்துக்கொள்ளும், நாம் வேறு மனைவி பார்ப்போம் என நினைத்தது தான் தாமதம், அருண் குமார் எண்ணுக்கு ஒரு அழைப்பு.... ‛யாரு... அருண் குமாரா.... நான் தான் ரஞ்சனி புருசன் பேசுறேன்....’ என்றது அந்த குரல். ‛ஹலோ.... நான் தாங்க அவ புருசன்...’ என, கடுப்பாகியுள்ளார் அருண். ‛தம்பி... நீ இரண்டாவது... நான் தான் முதல் புருசன்....’ என, அடுத்த குண்டை போட்டுள்ளார் அந்த பக்கம் இருந்து பேசிய நபர். தனது பெயர் கிருஷ்ணன் என்றும், எனக்கு தெரியாமல் எப்படி என் மனைவியை திருமணம் செய்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பியுள்ளார். அதுவரை நிலை குலைந்திருந்த அருண்குமாருக்கு, இப்போது தலை குலைந்து போனது. போதாக்குறைக்கு, தன் மனைவியை கடத்தி திருமணம் செய்ததாக அருண்குமார் மீது பந்தயசாலை காவல்நிலையத்தில் புகார் வேறு செய்தார் கிருஷ்ணன்.


முதல் கணவர் எண்ட்ரி... இரண்டாவது கணவர் சோகம்... மூன்றாவது நாள் மனைவி எஸ்கேப்! நீ வருவாய் என பார்ட் 2 க்ரைம்!

‛இடைத்தரகருக்கு ஒன்றரை லட்சம் கமிஷன் கொடுத்து, கடைந்தெடுத்து கண்டுபிடித்த மனைவி, கம்பி நீட்டியது மட்டுமல்லாமல், கம்பியும் எண்ண வைக்கப்போறாளே...’ என நொந்து கொண்டது அருண்குமார் குடும்பம். விசாரணைக்கு வந்த இடத்தில், ரஞ்சனி மீதும் இடைத்தரகர் மீதும் ஒரு புகாரை கொடுத்து விட்டு வந்திருக்கிறார் அருண்குமார். ரஞ்சனி யாருடைய மனைவி என்கிற போட்டி ஒருபுறம், மாயமான ரஞ்சனி... எங்கே நீ... என தேடுதல் மறுபுறம் என தற்போது இந்த பிரச்னை பந்தயசாலை போலீசார் தலையில் விழுந்திருக்கிறது. ‛பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்...’ நீ வருவாய் என,’ என்ற அதே பாடலின் ‛பேத்தாஸ்’ வெர்சனை தற்போது பாடிக்கொண்டிருக்கிறார் அருண். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget