மேலும் அறிய

‛ஸ்வீட் ராஸ்கல்-எவரெஸ்ட் பாய்ஸ் மோதல்...’ கானாவில் வீணாய் சிக்கி தானாய் கக்கிய ரவுடி!

"திட்டம் போட்டு பண்ணிடுவேன் பெரிய மார்டரை" என பாடல் வெளியிட்ட அந்த கானா ரவுடி... போலீசிடம் சிக்கிய பின், ‛‛தப்பு மேல தப்பு, நான் பண்ணிட்டேன் பெரிய தப்பு’’ என திருத்த பாடலும் பாடியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சில இளைஞர்கள் ’ஸ்வீட் ராஸ்கல்’ எனும் குழுவை ஆரம்பித்து குழுவாக இயங்கி வந்தனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இவர்களிலிருந்து ’எவரெஸ்ட் பாய்ஸ்’ எனும் புது குழு உதயமானது. இதனையடுத்து இரண்டு குழு இளைஞர்களும் சூலூர் பகுதியில் வழக்கமாக நடைபெறும் பொங்கல் விழாக்கள் மற்றும் இதர சமய விழாக்களின் போது அவ்வப்போது மோதிக் கொள்வது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பொது மக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தன. சூலூர் காவல் துறையினர் ஏற்கனவே இரு வேறு மோதல் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சுமார் 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வந்த ஒருவரை மற்றொரு குழுவினர் ஆயுதங்களுடன் துரத்திச் சென்று கடுமையாகத் தாக்கினர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழு மோதல் வழக்கில் தலைமறைவாக இருந்த சூலூர் மதியழகன் நகரை சேர்ந்தவருமான ராம்ராஜ் மகன் அபிஸ் (18) என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் சூலூர் பகுதியில் இருந்த அபிசை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் குழு மோதலை ஏற்படுத்தும் வகையில் கொலை செய்து விடுவேன் என அபிஸ் என்ற இளைஞர் பாடிய கானா பாடல்@abpnadu pic.twitter.com/S2rwcxLmef

— Prasanth V (@PrasanthV_93) December 6, 2021

">

அபிஸ் 12ஆம் வகுப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஊர் சுற்றி திரிந்து வந்ததாகவும், அவ்வப்போது கானா பாடல்களை பாடி அப்பகுதி இளைஞர்களை உசுப்பேற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் பாடும் பாடல்கள் குறிப்பிட்ட குழு இளைஞர்களிடையே பிரபலமாவதால் அடிக்கடி இளைஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அபிசின் செல்போனை காவல் துறையினர்வ் ஆய்வு செய்த போது, பல்வேறு கானா பாடல்களை பாடி பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. கையில் கத்தியை வைத்துக் கொண்டு கொலை செய்து விடுவதாகவும், கொலை செய்து விடுவேன் எனவும் பல்வேறு பாடல்கள் இருந்தன. 

”திட்டம் போட்டு பண்ணிடுவேன் பெரிய மர்டரை
நீ கைவைச்சிட்டு தாண்ட மாட்டாய் சூலூர் பார்டரை”
”கத்தி, கத்தி ஸ்டிலு கத்தி வைச்சிருக்கேன் இடுப்பை சுத்தி
போட்டிடுவேன் உன்னை குத்தி”
“ஜெயிலுக்கு போயிட்டு வந்த ரவுடி நானு” என மோதலை ஏற்படுத்தும் வகையில் கானா பாடல்களை தொடர்ந்து பாடி பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்த அபிசிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே காவல் நிலையத்தில் தான் செய்தது தவறு என கானா பாடலை காவல் துறையினர் பாட சொல்லி செல்போனில் பதிவு செய்து வெளியிட்டனர். அதில்

”தப்பு மேல தப்பு
நான் பண்ணிட்டேன் பெரிய தப்பு
ஒரு கானா பாடலால 
நான் இங்க நிக்குறேன்
தப்ப நான் உணர்ந்திட்டேன்” என அபிஸ் பாடியுள்ளார்.

அந்த இளைஞர் கைது செய்யப்பட்ட பின்னர் தனது தவறை உணர்ந்து பாடிய கானா பாடல்@abpnadu pic.twitter.com/9QceRc6iHN

— Prasanth V (@PrasanthV_93) December 6, 2021

">

கானா பாடல் திறமையை வெளிப்படுத்தி மோதலை உருவாக்கும் வகையில் செயல்பட்ட அபிஸை காவல் துறையினர் கண்டித்து, அறிவுரை வழங்கியுள்ளனர். அபிஸ் கைதுக்கு முன்பும், பின்பும் பாடிய கானா பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Embed widget