மேலும் அறிய

Crime : அவர் என்கூட பேசல.. காதலன் பேசாததால், கணவருக்கு உருக்கமான கடிதத்தை எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை..

சென்னையில் கள்ளக்காதலன் பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தன்னுடைய கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி சாமியார் தோட்டம் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலு. இவருக்கு வயது 41. இவரது மனைவி வேதவல்லி. அவருக்கு வயது 33. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 ஆண்டுகளுக் முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், வேதவல்லியை பார்ப்பதற்காக அவரது அக்கா அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அங்கே வேதவல்லி சடலமாக வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வேதவல்லியின் அக்கா வேதனையில் கதறியுள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளித்து வேதவல்லியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.



போலீசார் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. போலீசார் வேதவல்லியின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கே வேதவல்லியின் டைரி கிடைத்தது. அந்த டைரியில் அவர் எழுதியிருப்பதாவது“ என் சாவுக்கு என்னுடன் வேலை பார்த்து வந்த தரணிராஜன் என்பவர்தான் காரணம்” என்று எழுதி வைத்துள்ளார். மேலும், தற்கொலை கடிதம் ஒன்றையும் வேதவல்லி எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அந்த கடிதத்தில், “ என்னுடன் அன்பாக பேசி பழகி வரும் எனது கணவருக்கு துரோகம் செய்துவிட்டேன். எனக்கு பிறந்த இரண்டாவது குழந்தை எனது கணவருக்கு பிறக்கவில்லை. என் சாவுக்கு காரணமான தரணிராஜனை விட்டுவிடாதீர்கள்” என்று எழுதியுள்ளார்.   


Crime : அவர் என்கூட பேசல.. காதலன் பேசாததால், கணவருக்கு உருக்கமான கடிதத்தை எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை..

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் வேதவல்லி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் தரணிராஜனும் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக வேதவல்லியுடன் தரணிராஜன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தரணிராஜன் பேசாமல் போனதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிய வேதவல்லி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. போலீசார் தற்போது திருவள்ளூரைச் சேர்ந்த தரணிராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் தரணிராஜன் அந்த குழந்தை தன்னுடைய குழந்தை இல்லை என்று கூறிவருவதால், இந்த வழக்கில் பரபரப்பு நீடித்து வருகிறது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது
சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
முன்னாள் பிரதமர் படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர் வழக்கறிஞராகப் பதிவா? இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால்: சுதா எம்.பி கண்டனம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN DMK : 3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
3 நாட்களில் நல்ல செய்தி வரும்.! ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை - அடித்து சொன்ன ஸ்டாலின்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்... மனமுருக கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் !
Edappadi Palanisamy: “திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
“திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
May Day 2026: உழைப்பாளர் தினம் இன்று.. உலகை இயக்கும் கரங்களுக்கான வாழ்த்துகள்..
TN Exit Polls 2026: அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
"QR கோட் இல்லையா? நோ என்ட்ரி!" – வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி வேலி
MK Stalin Alert : உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் தேவை- திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அலர்ட்
உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் தேவை- திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அலர்ட்
Embed widget