மேலும் அறிய

ஜீன்ஸ் ஐஸ்வர்யாராய் என நினைப்பு - ‛நானே அக்கா; நானே தங்கை’ : ஃபேஸ்புக்கில் கவர்ச்சியாக பேசி மோசடி செய்த பெண்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (25).

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவர், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்தார். தற்போது, இவர் கடந்த 3 மாதமாக சென்னை, திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவர், சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். 

அந்த புகார் மனுவில், “கடந்த ஜனவரி மாதம் எனது ஃபேஸ்புக்கில் ஆவடி, ஆனந்தம் நகர், பாரதிதாசன் தெருவைச் சார்ந்த ஐஸ்வர்யா (26) என்ற இளம்பெண் நட்பானார். அவர், தான் டாக்டருக்கு படிப்பதாகவும், தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி செல்போனில் அடிக்கடி கவர்ச்சிகரமாக பேசியும் வந்தார். திருமணம் தொடர்பாக பூஜை செய்யவும், நகைகள் வாங்கவும் பணம் வேண்டும் என ஐஸ்வர்யா என்னிடம் கூறினார். அதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதல் தவணையாக 4 லட்சம் கேட்டார். இதனையடுத்து, அந்த பணத்தை ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தேன். 


ஜீன்ஸ் ஐஸ்வர்யாராய் என நினைப்பு - ‛நானே அக்கா; நானே தங்கை’ : ஃபேஸ்புக்கில் கவர்ச்சியாக பேசி மோசடி செய்த பெண்!

அதன் பிறகு, அவர் கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்சம் என மொத்தம் 14 லட்சம் வரை என்னிடம் பணம் வாங்கி உள்ளார்.  இதற்கிடையில், ஐஸ்வர்யா தனக்கு ஒரு  தங்கை இருப்பதாக கூறியதால் அவரை, எனது பெரியப்பா மகன் மகேந்திரனுக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு தங்கை என்று யாரும் கிடையாது. அவரே தான் இரு ஃபேஸ்புக் கணக்கு மூலமாக இருவரிடமும் மாறி மாறி பேசி ஏமாற்றி வந்துள்ளார்.  மேலும், ஐஸ்வர்யா மகேந்திரனையும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.  இதனை நம்பி அவரும் கடந்த 6 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக 20  லட்சம் வரை வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், அவர் ஜஸ்வரியாவுக்கு ஒரு சவரன் தங்க சங்கிலி, ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை வாங்கி   கொரியர்  மூலம் அனுப்பி வைத்து உள்ளார். அதன் பின்பு, கடந்த ஒரு மாதமாக ஐஸ்வர்யா இருவரின் தொடர்பையும் துண்டித்துள்ளார்.  இதனையடுத்து, நாங்கள் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

கமிஷனர் சங்கர் ஜீவால் புகாரை ஆவடி காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், போலீசார் ஐஸ்வர்யா மற்றும் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், ஐஸ்வர்யா டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் +2வரை படித்து உள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவருக்கு திருமணமாகி சரண்குமார் என்ற கணவரும் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும் உள்ளார். 

ஐஸ்வர்யா தனது அக்கா வைத்திருக்கும் ஃபேன்ஸி ஸ்டோரில் ஊழியராக பணியாற்றி வருவதோடு, தற்போது, ஐஸ்வர்யா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் தனது இரு ஃபேஸ்புக் கணக்குகளில் அழகான ஒரு பெண்ணின் படத்தை வைத்து பாரதிராஜா, மகேந்திரன் இருவரையும் தனது கவர்ச்சியான பேச்சால் ஆசைவார்த்தை கூறி பண மோசடி செய்துள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

மேலும், ஐஸ்வர்யா பண மோசடி செய்ததையும், அந்த பணத்தை ஆடம்பரமாகவும் செலவும் செய்ததாக போலீசாரிடம்  ஒப்புகொண்டார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஜஸ்வர்யாவை நேற்று மாலை கைது செய்தனர். மேலும், போலீசார் ஐஸ்வரியா வேறு யாரிடமும் முகநூல் மூலம் பழகி பண மோசடி செய்து உள்ளாரா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மூலம் இளம்பெண் பழகி திருமண ஆசை காட்டி கவர்ச்சிகரமாக பேசி போலீஸ்காரர், அவரது சகோதரர் ஆகியோரிடம் 34 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் ஆவடியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீன்ஸ் படத்தில் அண்ணன் பிரசாந்தை திருமணம் செய்ய ஐஸ்வர்யாராய் நானே அக்கா, நானே தங்கை எனக்கூறி தம்பி பிரசாந்திடமும் அல்லல் படுவார். ஆனால் இங்கு கொஞ்சம் மாற்றம். அண்ணனையும் தம்பியையும் சேர்ந்து ஏமாற்றி அவர்கள் அளித்த பணத்தில் உல்லாசமாக இருந்துள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா என பெயர் வைத்ததால் தன்னை ஐஸ்வர்யாராய் என்றே எண்ணிவிட்டார் போலும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
Crime: அச்சச்சோ.. கிரிக்கெட் போட்டியில் தகராறு.. ஒரு ரன்னால் பறிபோன உயிர்..
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் - நீதிபதி வேதனை !
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
அதிர்ச்சி !! தனியாக இருந்த 83 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை !! 9 - ம் வகுப்பு மாணவன் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
Embed widget