மேலும் அறிய

ஜீன்ஸ் ஐஸ்வர்யாராய் என நினைப்பு - ‛நானே அக்கா; நானே தங்கை’ : ஃபேஸ்புக்கில் கவர்ச்சியாக பேசி மோசடி செய்த பெண்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (25).

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் தாலுகா, மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (25). இவர், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணிபுரிந்தார். தற்போது, இவர் கடந்த 3 மாதமாக சென்னை, திருவொற்றியூரில் உள்ள கடற்படையில் பணியாற்றி வருகிறார். இவர், சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். 

அந்த புகார் மனுவில், “கடந்த ஜனவரி மாதம் எனது ஃபேஸ்புக்கில் ஆவடி, ஆனந்தம் நகர், பாரதிதாசன் தெருவைச் சார்ந்த ஐஸ்வர்யா (26) என்ற இளம்பெண் நட்பானார். அவர், தான் டாக்டருக்கு படிப்பதாகவும், தன்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி செல்போனில் அடிக்கடி கவர்ச்சிகரமாக பேசியும் வந்தார். திருமணம் தொடர்பாக பூஜை செய்யவும், நகைகள் வாங்கவும் பணம் வேண்டும் என ஐஸ்வர்யா என்னிடம் கூறினார். அதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு முதல் தவணையாக 4 லட்சம் கேட்டார். இதனையடுத்து, அந்த பணத்தை ஐஸ்வர்யாவின் தந்தை பழனியின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்தேன். 


ஜீன்ஸ் ஐஸ்வர்யாராய் என நினைப்பு - ‛நானே அக்கா; நானே தங்கை’ : ஃபேஸ்புக்கில் கவர்ச்சியாக பேசி மோசடி செய்த பெண்!

அதன் பிறகு, அவர் கொஞ்சம் கொஞ்சமாக 10 லட்சம் என மொத்தம் 14 லட்சம் வரை என்னிடம் பணம் வாங்கி உள்ளார்.  இதற்கிடையில், ஐஸ்வர்யா தனக்கு ஒரு  தங்கை இருப்பதாக கூறியதால் அவரை, எனது பெரியப்பா மகன் மகேந்திரனுக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால், ஐஸ்வர்யாவுக்கு தங்கை என்று யாரும் கிடையாது. அவரே தான் இரு ஃபேஸ்புக் கணக்கு மூலமாக இருவரிடமும் மாறி மாறி பேசி ஏமாற்றி வந்துள்ளார்.  மேலும், ஐஸ்வர்யா மகேந்திரனையும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.  இதனை நம்பி அவரும் கடந்த 6 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக 20  லட்சம் வரை வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், அவர் ஜஸ்வரியாவுக்கு ஒரு சவரன் தங்க சங்கிலி, ஒரு ஜோடி கொலுசு ஆகியவற்றை வாங்கி   கொரியர்  மூலம் அனுப்பி வைத்து உள்ளார். அதன் பின்பு, கடந்த ஒரு மாதமாக ஐஸ்வர்யா இருவரின் தொடர்பையும் துண்டித்துள்ளார்.  இதனையடுத்து, நாங்கள் இருவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

கமிஷனர் சங்கர் ஜீவால் புகாரை ஆவடி காவல் நிலையத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், போலீசார் ஐஸ்வர்யா மற்றும் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், ஐஸ்வர்யா டாக்டருக்கு படிக்கவில்லை என்பதும், அவர் +2வரை படித்து உள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவருக்கு திருமணமாகி சரண்குமார் என்ற கணவரும் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகளும் உள்ளார். 

ஐஸ்வர்யா தனது அக்கா வைத்திருக்கும் ஃபேன்ஸி ஸ்டோரில் ஊழியராக பணியாற்றி வருவதோடு, தற்போது, ஐஸ்வர்யா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் தனது இரு ஃபேஸ்புக் கணக்குகளில் அழகான ஒரு பெண்ணின் படத்தை வைத்து பாரதிராஜா, மகேந்திரன் இருவரையும் தனது கவர்ச்சியான பேச்சால் ஆசைவார்த்தை கூறி பண மோசடி செய்துள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

மேலும், ஐஸ்வர்யா பண மோசடி செய்ததையும், அந்த பணத்தை ஆடம்பரமாகவும் செலவும் செய்ததாக போலீசாரிடம்  ஒப்புகொண்டார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஜஸ்வர்யாவை நேற்று மாலை கைது செய்தனர். மேலும், போலீசார் ஐஸ்வரியா வேறு யாரிடமும் முகநூல் மூலம் பழகி பண மோசடி செய்து உள்ளாரா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மூலம் இளம்பெண் பழகி திருமண ஆசை காட்டி கவர்ச்சிகரமாக பேசி போலீஸ்காரர், அவரது சகோதரர் ஆகியோரிடம் 34 லட்சம் பண மோசடி செய்த சம்பவம் ஆவடியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜீன்ஸ் படத்தில் அண்ணன் பிரசாந்தை திருமணம் செய்ய ஐஸ்வர்யாராய் நானே அக்கா, நானே தங்கை எனக்கூறி தம்பி பிரசாந்திடமும் அல்லல் படுவார். ஆனால் இங்கு கொஞ்சம் மாற்றம். அண்ணனையும் தம்பியையும் சேர்ந்து ஏமாற்றி அவர்கள் அளித்த பணத்தில் உல்லாசமாக இருந்துள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா என பெயர் வைத்ததால் தன்னை ஐஸ்வர்யாராய் என்றே எண்ணிவிட்டார் போலும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்
200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Embed widget