மேலும் அறிய

Crime: 13 வயது முதல் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது

சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், பெண்ணிற்கு நீண்ட ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சிறுமிக்கு நீண்ட ஆண்டுகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்  பாண்டியராஜ்(50). இவர் சென்னை மாநகர காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் வில்லிவாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் நீண்ட ஆண்டுகளுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அந்தப் பெண் தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவரும் பாண்டியராஜும் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அடிக்கடி அந்த வீட்டிற்கு செல்லும் போது பாண்டியராஜ் அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 

தற்போது அந்தச் சிறுமி வளர்ந்து கல்லூரி படித்து வருகிறார். அத்துடன் அவருக்கு வேறு ஒரு நபர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. எனினும் பாண்டியராஜ் இப்போதும் அந்தப் பெண் தன்னுடைய தாய் வீட்டிற்கு செல்லும்போது பாலியல் தொந்தரவு அளித்துவந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் தாயும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

 

அந்தப் புகாரில் சிறு வயதில் பாண்டியராஜ் பல முறை அந்தப் பெண்ணை மிரட்டி பாலிய வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இந்தப் புகாரை வைத்து காவல்துறையினர் அந்த காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் பாண்டியராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியாக இருக்கும் போது முதல் பெண் ஒருவருக்கு காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமைக்கு இணங்காத சிறுமி! வாயில் ஆசிட் ஊற்றிய உறவினர்:

14 வயது சிறுமியை அவரது தாய் வழி மாமா பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, வாயில் ஆசிட் ஊற்றி கழுத்தை அறுத்து மிருகத்தனமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம்,  வேங்கடபுரம் கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் இந்த 14 வயது சிறுமி நேற்று முன் தினம் (செப். 05) இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய் வழி மாமா குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்க முயன்றுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி தன்னை பாதுகாத்துக் கொள்ள கழிவறைக்குள் ஓடியுள்ளார். அப்போது சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அங்கு கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவரது வாய் மற்றும் முகத்தில் அந்நபர் ஊற்றியுள்ளார்.

தொடர்ந்து சிறுமி வலியால் கத்தத் தொடங்கியதும் சிறுமியின் கழுத்தை அறுத்து விட்டு அந்நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.


மேலும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு இணங்காத சிறுமி! வாயில் ஆசிட் ஊற்றி, கத்தியால் தொண்டையைக் கிழித்த உறவினர்!

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget