மேலும் அறிய

Crime: ஓடும் ஆட்டோவில் பாலியல் சீண்டல்....சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்த ஜர்னலிசம் மாணவி..!

தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவ பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊபர் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தனது தோழியுடன் சென்ற பொழுது மாணவப் பத்திரிகையாளர் பெண் ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுனர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சமூக வலைதளம் மூலம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். மேலும் அப்பெண் தனது சமூக வலைதள பதிவில், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்த பொழுது, பெண் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளித்தால் பெண் போலீசாரை அனுப்பாமல்,  மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு ஆண் போலீஸ் ஒருவரை அனுப்பியுள்ளனர். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் வகையிலேயே காவலர்கள் பேசியதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். காவல் நிலையம் வெளியிலேயே நின்று கொண்டு காவல் நிலையத்தில் மனுவை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும், சம்பந்தப்பட்ட ஊபர் ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம், ஆட்டோவின் புகைப்படம் உள்ளிட்டவைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகார் தெரிவித்தார்.

Crime: ஓடும் ஆட்டோவில் பாலியல் சீண்டல்....சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்த ஜர்னலிசம் மாணவி..!
 
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தனது சமூகவலைதள பக்கங்களில், ஊபர் ஆட்டோ நிறுவனத்தை மற்றும் காவல் துறையினரை tag செய்து புகார்  பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக அந்தப் பெண் பதிவு செய்திருந்த  பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பலர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரை tag செய்து தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.

Crime: ஓடும் ஆட்டோவில் பாலியல் சீண்டல்....சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்த ஜர்னலிசம் மாணவி..!
 
இதனை அடுத்து இந்த பதிவு சம்பந்தப்பட்ட ஊபர் நிறுவனம் கவனத்திற்கு சென்றது, ஊபர் நிறுவனமே ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாணவியின் ட்விட்டர் பதிவுக்கு கமெண்டில் கருத்து தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணக்கில் காவல்துறையினரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்தனர்.  தாம்பரம் காவல் ஆணையரகத்தின் ட்விட்டர் பதிவில், ஆட்டோ ஓட்டுநர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்பொழுது காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!
புதுச்சேரியில் பயங்கரம்: செல்போனுக்கு வந்த ஒரு குறுஞ்செய்தி... ஒரே நாளில் 10 பேரிடம் ரூ.3 லட்சம் சுருட்டல்...!
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharathiraja: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குநர் இமயம்.! மாய உலகை நிஜத்திற்கு மாற்றிய பாரதிராஜா.!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
Bharathiraja: காலையிலேயே அதிர்ச்சி செய்தி.. இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
US Attack Iran: பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
பயந்தது நடந்துடுச்சே.! ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா; ஹார்முஸில் நடந்தது என்ன.?
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 3,200 ரூபாய் சரிந்தது- இன்றைய விலை நிலவரம் இதோ..
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
தொடங்கப்பட்ட குறுவைப்பணிகளை நிறுத்திய தஞ்சாவூர் விவசாயிகள்?
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
சாலைதான் எங்களுக்கு களம்... சோதனைகள் மத்தியில் எள் அறுவடை செய்த விவசாயிகள்: நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி
Embed widget