மேலும் அறிய

Crime: ஓடும் ஆட்டோவில் பாலியல் சீண்டல்....சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்த ஜர்னலிசம் மாணவி..!

தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவ பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊபர் ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தனது தோழியுடன் சென்ற பொழுது மாணவப் பத்திரிகையாளர் பெண் ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுனர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சமூக வலைதளம் மூலம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். மேலும் அப்பெண் தனது சமூக வலைதள பதிவில், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்த பொழுது, பெண் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளித்தால் பெண் போலீசாரை அனுப்பாமல்,  மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு ஆண் போலீஸ் ஒருவரை அனுப்பியுள்ளனர். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் வகையிலேயே காவலர்கள் பேசியதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். காவல் நிலையம் வெளியிலேயே நின்று கொண்டு காவல் நிலையத்தில் மனுவை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும், சம்பந்தப்பட்ட ஊபர் ஆட்டோ ஓட்டுநரின் புகைப்படம், ஆட்டோவின் புகைப்படம் உள்ளிட்டவைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகார் தெரிவித்தார்.

Crime: ஓடும் ஆட்டோவில் பாலியல் சீண்டல்....சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்த ஜர்னலிசம் மாணவி..!
 
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தனது சமூகவலைதள பக்கங்களில், ஊபர் ஆட்டோ நிறுவனத்தை மற்றும் காவல் துறையினரை tag செய்து புகார்  பதிவு செய்திருந்தார். இதுதொடர்பாக அந்தப் பெண் பதிவு செய்திருந்த  பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பலர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினரை tag செய்து தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.

Crime: ஓடும் ஆட்டோவில் பாலியல் சீண்டல்....சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்த ஜர்னலிசம் மாணவி..!
 
இதனை அடுத்து இந்த பதிவு சம்பந்தப்பட்ட ஊபர் நிறுவனம் கவனத்திற்கு சென்றது, ஊபர் நிறுவனமே ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாணவியின் ட்விட்டர் பதிவுக்கு கமெண்டில் கருத்து தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணக்கில் காவல்துறையினரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்தனர்.  தாம்பரம் காவல் ஆணையரகத்தின் ட்விட்டர் பதிவில், ஆட்டோ ஓட்டுநர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தற்பொழுது காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget