மேலும் அறிய

Crime : கொலைக்கு காரணமான ஆட்டோ! சிறைக்கு சென்ற ரவுடி...! காத்திருந்து கொலை செய்த இளைஞர்..!

சென்னை, புஷ்பா நகரில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை முன்விரோதம் காரணமாக இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது புஷ்பா நகர். இங்கு வசித்து வருபவர் குமார் என்ற குள்ள குமார். இவருக்கு வயது 21. குமார் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது சகோதரர் தாமோதரன்.

தாமோதரன் சொந்தமாக தொழில் செய்ய நினைத்ததால், ஆட்டோ வாங்கி ஓட்ட நினைத்தார். இதற்காக தனசேகர் ( வயது 26) என்பவர் தாமோதரனுக்கு தவணை முறையில் ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். ஆட்டோ வாங்கிய சில மாதங்களுக்கு தாமோதரன் முறையாக தவணைப் பணத்தை செலுத்தி வந்துள்ளார். ஆனால், அதன்பின்பு கடந்த சில மாதங்களாக தாமோதரன் தவணைப் பணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.


Crime : கொலைக்கு காரணமான ஆட்டோ! சிறைக்கு சென்ற ரவுடி...! காத்திருந்து கொலை செய்த இளைஞர்..!

இதுதொடர்பாக, தாமோதரனுக்கும், தனசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாமோதரன் தனது சகோதரர் குமாரிடம் இதுதொடர்பாக கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த மே மாதம் புஷ்பா நகரில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின்போது தனது சகோதரரை மிரட்டிய தனசேகரை குமார் கத்தியால் குத்தினார்.

இந்த கத்திக்குத்து சம்பவத்தில் தனசேகர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இந்த குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையில் இருந்த குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குமார் நேற்று புஷ்பா நகரில் உள்ள டேங்க்பங்க் சாலையில் உள்ள ஒரு கடை வாசலில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கே ஆட்டோ ஒன்றில் தனசேகர் மற்றும் அவரது 2 நண்பர்கள் வந்தனர். அவர்கள் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குமாரும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாய்த்தகராறு முற்றவே தனசேகரும், அவரது நண்பர்களும் ஏற்கனவே தாங்கள் தயாராக வைத்திருந்த கத்தியால் குமாரை சரமாரியாக குத்தினர்.


Crime : கொலைக்கு காரணமான ஆட்டோ! சிறைக்கு சென்ற ரவுடி...! காத்திருந்து கொலை செய்த இளைஞர்..!

குமாரை கத்தியால் சரமாரியாக குத்திய பிறகு, தனசேகரும் அவரது நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தால் குமார் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், குமாரை கத்தியால் குத்திய தனசேகர் மற்றும் அவரது நண்பர்களான புஷ்பா நகரைச் சேர்ந்த ராஜா (வயது 33), ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த பார்த்திபன் ( வயது 30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க : Watch video: மலைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்ட புதிய தார் சாலை; கையால் பெயர்த்து எடுக்கும் அதிர்ச்சி வீடியோ

மேலும் படிக்க : Crime: வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியர் வெட்டி படுகொலை - ஏராளமான போலீசார் குவிப்பு

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
Youtube - பிரபலம் வைஷ்ணவிக்கு நேர்ந்த கொடூரம் !! கணவன் செய்த அதிர்ச்சி செயல் !!
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
சென்னை ; வியாபாரிகளிடம் 45.5 கிலோ வெள்ளி மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் கைது
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
Kerala: ஒரே வீட்டுக்குள் 5 பேர்.. இப்படி ஒரு நிலைமையா? - அலறிய கேபிள் ஆபரேட்டர்!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
பெங்களூர்-சென்னை பேருந்தில் அதிர்ச்சி! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: பயணிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Embed widget