மேலும் அறிய

Crime : கொலைக்கு காரணமான ஆட்டோ! சிறைக்கு சென்ற ரவுடி...! காத்திருந்து கொலை செய்த இளைஞர்..!

சென்னை, புஷ்பா நகரில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை முன்விரோதம் காரணமாக இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது புஷ்பா நகர். இங்கு வசித்து வருபவர் குமார் என்ற குள்ள குமார். இவருக்கு வயது 21. குமார் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது சகோதரர் தாமோதரன்.

தாமோதரன் சொந்தமாக தொழில் செய்ய நினைத்ததால், ஆட்டோ வாங்கி ஓட்ட நினைத்தார். இதற்காக தனசேகர் ( வயது 26) என்பவர் தாமோதரனுக்கு தவணை முறையில் ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். ஆட்டோ வாங்கிய சில மாதங்களுக்கு தாமோதரன் முறையாக தவணைப் பணத்தை செலுத்தி வந்துள்ளார். ஆனால், அதன்பின்பு கடந்த சில மாதங்களாக தாமோதரன் தவணைப் பணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.


Crime : கொலைக்கு காரணமான ஆட்டோ! சிறைக்கு சென்ற ரவுடி...! காத்திருந்து கொலை செய்த இளைஞர்..!

இதுதொடர்பாக, தாமோதரனுக்கும், தனசேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாமோதரன் தனது சகோதரர் குமாரிடம் இதுதொடர்பாக கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த மே மாதம் புஷ்பா நகரில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின்போது தனது சகோதரரை மிரட்டிய தனசேகரை குமார் கத்தியால் குத்தினார்.

இந்த கத்திக்குத்து சம்பவத்தில் தனசேகர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இந்த குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், சிறையில் இருந்த குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குமார் நேற்று புஷ்பா நகரில் உள்ள டேங்க்பங்க் சாலையில் உள்ள ஒரு கடை வாசலில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கே ஆட்டோ ஒன்றில் தனசேகர் மற்றும் அவரது 2 நண்பர்கள் வந்தனர். அவர்கள் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குமாரும் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாய்த்தகராறு முற்றவே தனசேகரும், அவரது நண்பர்களும் ஏற்கனவே தாங்கள் தயாராக வைத்திருந்த கத்தியால் குமாரை சரமாரியாக குத்தினர்.


Crime : கொலைக்கு காரணமான ஆட்டோ! சிறைக்கு சென்ற ரவுடி...! காத்திருந்து கொலை செய்த இளைஞர்..!

குமாரை கத்தியால் சரமாரியாக குத்திய பிறகு, தனசேகரும் அவரது நண்பர்களும் அந்த இடத்தில் இருந்து தப்பியோடினர். இந்த சம்பவத்தால் குமார் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குமார் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், குமாரை கத்தியால் குத்திய தனசேகர் மற்றும் அவரது நண்பர்களான புஷ்பா நகரைச் சேர்ந்த ராஜா (வயது 33), ஒக்கியம் துரைப்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த பார்த்திபன் ( வயது 30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க : Watch video: மலைவாழ் மக்களுக்கு அமைக்கப்பட்ட புதிய தார் சாலை; கையால் பெயர்த்து எடுக்கும் அதிர்ச்சி வீடியோ

மேலும் படிக்க : Crime: வேளாங்கண்ணியில் பிரபல பைனான்சியர் வெட்டி படுகொலை - ஏராளமான போலீசார் குவிப்பு

 

தலைப்பு செய்திகள்

மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget