மேலும் அறிய

பொத்தேரியில் 1000 போலீசார் கஞ்சா வேட்டை... சிக்கிய பிரபல ரவுடி.. கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் நடைபெற்ற போலீசாரின் கஞ்சா வேட்டையில், ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா, பாங்கு, போதை சாக்லேட்டுகள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், இளைஞர்கள் ஆகியோர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது.

 


பொத்தேரியில் 1000 போலீசார் கஞ்சா வேட்டை... சிக்கிய பிரபல ரவுடி.. கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல்

தப்பித்து செல்லும் முக்கிய ரவுடிகள்..

தொடர்ந்து போதைப்பொருள் விற்கும் கும்பல்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வந்தாலும், போதைப் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் முக்கிய ரவுடிகள் சிக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.  

 


பொத்தேரியில் 1000 போலீசார் கஞ்சா வேட்டை... சிக்கிய பிரபல ரவுடி.. கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல்

 

சென்னை பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இவ்வாறு தனிமையில் இருக்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. 

திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்

இன்று காலை தாம்பரம் கமிஷனர் உத்தரவின் பெயரில், தாம்பரம் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீரென பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். 

 

 


பொத்தேரியில் 1000 போலீசார் கஞ்சா வேட்டை... சிக்கிய பிரபல ரவுடி.. கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல்

காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு வகையான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அரை கிலோ கஞ்சா, 6 கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா ஆயில், பாங்கு, ஹுக்கா இந்திரம், 6 கிலோ ஹுக்கா பவுடர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒரு மாணவி உட்பட 19 மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

பல்வேறு கோணங்களில் விசாரணை 

மாணவர்களுக்கு போதை பொருட்கள் எப்படி கிடைக்கிறது?. போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார் ?. போதைப்பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

போதைப் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் என்பதால் அவர்களுக்கு, கவுன்சிலிங் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நலன் கருதி அவர்கள் மீது, எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிக்கிய பிரபல ரவுடி

மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி (29) மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஏ ப்ளஸ் ரவுடியாக வலம் வந்த செல்வமணியை கைது செய்த போலீசார். செல்வமணியிடம் இரண்டு கால் கிலோ கஞ்சா மற்றும் 5 கத்திகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து, நடைபெறும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget