மேலும் அறிய

ரூ.70 லட்சம் கொள்ளை... ரூ.1 லட்சம் செலவில் பேஷியல்... குதூகலித்த ‛ரிட்டயர்ட்’ திருடரை குண்டுகட்டாக தூக்கி்ய போலீஸ்!

மாஜி திருடர்... நீண்ட இடைவெளிக்குப் பின் ‛அப்டேட்’ இல்லாமல் களத்தில் இறங்கி சிக்கியுள்ளார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஆஷிஸ் பன்சால். இவருக்கு பேட்டரிகளுக்கான அலுமினிய லெட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆந்திரா மற்றும் ஸ்ரீபெரும்பதூரில் உள்ளன. ஒட்டு மொத்த தொழிற்சாலைகளுக்கான தலைமை அலுவலகம், சென்னை சேத்துப்பட்டுவில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் நான்காவது மாடியில், ‛பாண்டி ஆக்ஸைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிட்.,’ என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த அக்டோபர் 10 ம் தேதி, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த 72 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆஷிஸ் பன்சால் அளித்த புகாரின் பேரில், கீழ்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் படலம் தொடங்கியது. சம்மந்தப்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் 50 வயதை கடந்த ஒரு நபர், பையுடன் அங்கிருந்து புறப்படுவதும், சாலையில் ஆட்டோ ஒன்றை பிடித்து அங்கிருந்து புறப்பட்டதும் தெரியவந்தது. 


ரூ.70 லட்சம் கொள்ளை... ரூ.1 லட்சம் செலவில் பேஷியல்... குதூகலித்த ‛ரிட்டயர்ட்’ திருடரை குண்டுகட்டாக தூக்கி்ய போலீஸ்!

அந்த ஆட்டோ சென்ற சாலை வழி முழுவதிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலீசார், இறுதியில் திருவல்லிக்கேணியில் அந்த ஆட்டோ சென்றது தெரியவந்தது. இறுதியில் திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அந்த நபர் தங்கியிருந்தது தெரியவந்தது. விடுதி நிர்வாகத்திடம் விசாரித்ததில் அன்று முதல் நாள் இரவு தான், அந்த நபர் அங்கிருந்து காலி செய்தது தெரியவந்தது. அதன் பின் சம்மந்தப்பட்ட நபர் விடுதி நிர்வாகத்திற்கு வழங்கிய மொபைல் போன் எண்ணை பெற்ற போலீசார், அந்த நெட்வொர்க் மூலம் சிக்னலை ஆராய்ந்தனர். 

தியாகராயர் நகரில் உள்ள பிரபல சொகுசு ஓட்டல் அமைந்திருக்கும் பகுதியில் அவரது மொபைல் போன் சிக்னல் இருப்பது தெரியவந்தது. அப்போது இரவு நேரம் என்றாலும், போலீசார் உடனே அங்கு விரைந்தனர். சம்மந்தப்பட்ட விடுதியின் உள்ள விருந்தினர் பட்டியலை சரிபார்த்த போது, சம்மந்தப்பட்ட நபர் உள்ளே இருப்பது உறுதி செய்யப்பட்டது. நள்ளிரவாக இருந்ததால், அந்த நேரத்தில் அவரை கைது செய்து பதட்டத்தை ஏற்படுத்த விரும்பாத போலீசார், சம்மந்தப்பட்ட நபர் தங்கியிருந்த அறைக்கு அருகில் மற்றொரு அறையில் தங்கினர். காலை விடிந்ததும், சம்மநத்பட்ட நபர் தங்கியிருந்த தளத்தின் மின்சாரத்தை துண்டித்த போலீசார், ஓட்டல் ஊழியரிடம் காபி கொடுத்து அனுப்பினர். 

ஓட்டல் ஊழியர் வெளியிலிருந்து அழைக்க, உள்ளே இருந்து அழைப்பது ஊழியர் தான் என்பதை உறுதி செய்த அந்த நபர், கதவை திறந்ததும், மறைந்திருந்த உதவிஆணையர் தலைமையிலான போலீசார், சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர். மேலும் அவரது அறை லாக்கரில் இருந்து 61 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், சம்மந்தப்பட்ட நபர் நெல்லை மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பதும், 57 வயதான் இவர், முன்னாள் ‛திருடர்’ என்பதும், 1981ல் சென்னை எழும்பூரில் இவர் மீது 16 வழக்குகள் இருந்ததும், கோவை மாவட்டத்திலும் சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. 


ரூ.70 லட்சம் கொள்ளை... ரூ.1 லட்சம் செலவில் பேஷியல்... குதூகலித்த ‛ரிட்டயர்ட்’ திருடரை குண்டுகட்டாக தூக்கி்ய போலீஸ்!

ஒரு கட்டத்தில் திருட்டு தொழிலை விட்டுவிட்டு ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்த பாண்டுரங்கனுக்கு இடையில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் கடனாளியாக மாறிய அவர், அதிலிருந்து மீண்டு வர இறுதியாக ஒரு திருட்டை செய்து செட்டில் ஆகலாம் என்ற நினைத்திருக்கிறார். இதற்காக சென்னை வந்த அவர், விடுதியில் தங்கி சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் கொள்ளையடித்ததும், பணத்துடன் ஊர் திரும்ப தயாராகும் முன், தனது அடையாளத்தை மறைப்பதற்காக ரூ.1 லட்சம் செலவு செய்து பேஷியல் செய்ததும் தெரியவந்தது. பேஷியல் உள்ளிட்ட சில ஆடம்பர செலவுகளை செய்த வகையில் கொள்ளையடித்த பணத்திலிருந்து 11 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததும் தெரியவந்தது. 

மாஜி திருடர்... நீண்ட இடைவெளிக்குப் பின் ‛அப்டேட்’ இல்லாமல் களத்தில் இறங்கியதும், திருடிய இடத்திலிருந்த வீடு வரை மிளகாய் பொடி தூவி வரும் வடிவேலு போல, சிசிடிவி கேமராக்கள் தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை பின்தொடர்ந்து வந்து காட்டிக்கொடுத்ததை அறியாமல் அகப்பட்டு, தற்போது சிறையில் அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget