![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: இன்ஸ்டாகிராம் பழக்கம்.. காதல் என்னும் பெயரில் டார்ச்சர்.. 15 வயது மாணவியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது
சென்னையை அடுத்த மதுரவாயலில் 15 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
![Crime: இன்ஸ்டாகிராம் பழக்கம்.. காதல் என்னும் பெயரில் டார்ச்சர்.. 15 வயது மாணவியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது chennai Police arrested a college student under the POCSO Act for threatening and sexually assaulting a 15-year-old schoolgirl Crime: இன்ஸ்டாகிராம் பழக்கம்.. காதல் என்னும் பெயரில் டார்ச்சர்.. 15 வயது மாணவியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/1c0b8f577f66338cfcb340d929eafab61659808733_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையை அடுத்த மதுரவாயலில் 15 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அமைந்தகரையில் உள்ள அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா சமயத்தில் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன் ஒன்றை இவரது பெற்றோர் வாங்கித் தந்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை அந்த மாணவி பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம்பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவரான ஜார்ஜ் என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவியை காதலிப்பதாக ஜார்ஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்ததாக வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவி தனியாக வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஜார்ஜ், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், இந்த ரகசியத்தை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டி, பலமுறை அந்த மாணவியை வன்கொடுமை செய்தும், மிரட்டி அடிக்கடி பணம் வாங்கி மகிழ்ச்சியாக செலவு செய்து வந்துள்ளார்.
மாணவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மாணவியின் தாயார் என்னவென்று கேட்டு தகவலை அறிந்துள்ளார். இதையடுத்து அவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் ஜார்ஜ் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜார்ஜ் அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் பலமுறை வன்கொடுமை செய்ததுடன் பணம் பறித்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக மாணவியிடம் ரூ. 15 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போதுதான் அந்த மாணவி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு வந்த ஜார்ஜ், அந்த மாணவியின் தாயார் கண்முன்னே மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த தாயார் கல்லூரி மாணவனை தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து அவரையும் மிரட்டிவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோல ஜார்ஜ் வேறு பெண்களை மிரட்டி வன்கொடுமை செய்து பணம் பறித்துள்ளாரா என்பது குறித்தும் மகளிர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)