மேலும் அறிய

Chennai News: தண்ணீர் பிடிக்க சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்

சென்னையில் நடைபெற்ற குற்ற செய்திகளை கீழே காணலாம்

இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்

சென்னை கொளத்தூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண்மணி ஒருவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுமார் 60 வயதுடைய ராமதாஸ் என்பவர் சுமார் 3 மாதத்திற்கு முன்பு அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

பின்பு , அப்பெண் 08.09.2025 அன்று மாலை அவரது வீட்டின் அருகிலுள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது , அதே ராமதாஸ் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கட்டிப் பிடிக்க முயன்றுள்ளார். அப்பெண் சத்தம் போடவே, ராமதாஸ் வீட்டிற்குள் சென்று மறைந்து கொண்டதாகவும் , தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்ற ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட அப்பெண் V-4 இராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர்.

V-4 இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட ராமதாஸ் ( வயது 61 ) சென்னை என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமதாஸ் விசாரணைக்குப் பின்னர் (13.09.2025) ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கஞ்சா மற்றும் பட்டா கத்தியுடன் சுற்றி திரிந்த நபர்கள் கைது.

சென்னை ஓட்டேரி பகுதியில் கஞ்சா மற்றும் கத்திகளை வைத்து கொண்டு சிலர் சுற்றி திரிவதாக , ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 07.09.2025 அன்று ஓட்டேரி டோபிகானா பகுதியில் கண்காணித்து அங்கு கஞ்சா மற்றும் பட்டா கத்தியுடன் இருந்த அருண் ( வயது 35 ) , நாகராஜ் ( வயது 40 )  ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா, 1 பட்டா கத்தி, பணம் ரூ.2,500 மற்றும் 1 எடை இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில் தலைமறைவான வசந்தகமன் மற்றும் பால் பிரவீன் ஆகியோர் வடமாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து , சிலரிடம் கொடுத்து பாக்கெட்டுகளாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

P-2 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய நரேந்திரன் ( வயது 33 ) இவரது தாயார் ஜான்சி ( வயது 57 ) அருண்குமார் ( வயது 19 ) , விமல்குமார் ( வயது 30 ) ஆகிய 4 நபர்களை (13.09.2025) கைது செய்தனர்.

விசாரணையில் விமல்குமார் P-2 ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் , இவர் மீது 3 - க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும் , நரேந்திரன் மீது 4 கஞ்சா வழக்குகளும் , ஜான்சி மீது 3 கஞ்சா வழக்குகள் உட்பட 7 குற்ற வழக்குகளும் , அருண்குமார் மீது கஞ்சா ஆயுத சட்டம் , திருட்டு உட்பட 5 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட நால்வரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவான நபர்களை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget