மேலும் அறிய

Crime :பகலில் கூலி வேலை.. இரவில் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் எரிசாராயம்.. மெரினாவில் மூன்று வடமாநில பெண்கள் கைது..

சென்னை மெரினா கடற்கரையில் எரிசாராயம் விற்பனை செய்த 3 வடமாநில பெண்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 40 பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து மெரினா கடற்கரை மணல் பரப்பில் புதைத்து வைத்து, விற்பனை செய்வதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் தலைமையிலான தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

அதன்அடிப்படையில், உதவி ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான தனிப்படையினர் மெரினா கடற்கரை பகுதியில் ரகசியமாக பொதுமக்கள் போல் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 3 வடமாநில பெண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மெரினா மணல் பரப்பில் புதைத்து வைத்திருந்த கேன் ஒன்றை வெளியே எடுத்தனர்.

இதை பார்த்து சந்தேகமடைந்த தனிப்படையினர் உடனடியாக விரைந்து சென்று மணல் பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட கேனை திறந்து பார்த்துள்ளனர். அப்பொழுது, அதில் 35 லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, தனிப்படையினர் உடனடியாக அந்த 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண்கள் மராட்டிய மாநிலத்தை 5 சேர்ந்த சுனந்தா, ஷில்பா போஸ்லே, ஜென்துஸ் கோஸ்லயா எனவும், இவர்கள் ஆந்திராவில் இருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் சாராயத்தை கடத்தி சென்னை கொண்டு வந்துள்ளனர் எனவும் தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட கள்ள சாராயத்தை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் புதைத்து வைத்து, இரவு நேரத்தில் மெரினா மணல் பரப்பில் தூங்கும் முதியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், இவர்கள் பகல் நேரத்தில் கூலி வேலைக்கு செல்வதும், இரவு நேரத்தில் சாராய விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், வெளியில் யாருக்கும் சந்தேகம் வராதபடி பழைய 'கூல் டிரிங்ஸ்' பாட்டில்களை விலைக்கு வாங்கிவந்து, அதில் சாராயத்தை நிரப்பி ஒரு பாட்டில் 750-க்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் சாராயம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர், 3 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 35 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget