Kovilambakkam Accident: தண்ணீர் லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரம் - லாரி ஓட்டுநர் கைது
Kovilambakkam Accident: சென்னை கோவிலம்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோவிலம்பாக்கம் அருகே தண்ணீர் லாரி மோதி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகே கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்தி, தனது பத்து வயதான மகளை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சிறுமி நிலஒத்தடுமாறி இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாள்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. இந்த விபத்தில் சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தாள், இதனை பார்த்த தாய் கீர்த்தி கதறி அழுதார், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியுஇன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள் போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வது பறி பல செய்திகள் புகார்கள் வெளியான நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தாய் கண் முன்னே மகள் லாரியில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாரி ஓட்டுநர் கைது
இந்நிலையில், லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தண்ணீர் லாரி ஓட்டுநர் டேவிட் ராஜனிடம் விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் கவனக்குறைவாக விபத்தை ஏற்படுத்தியதாக 304 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.