மேலும் அறிய

இன்ஸ்டா பெண் பிரபலம் கொடூர கொலை! தூக்கில் தொங்கிய கணவன் - சென்னையில் நடந்தது என்ன?

சென்னையில் இன்ஸ்டாகிராம் பிரபலமான மனைவியை கணவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நங்கநல்லூரில் வசித்து வருபவர் நாகலட்சுமி. இவருக்கு வயது 42. இவரது கணவர் சுப்பிரமணியன். இவருக்கு வயது 52. இந்த தம்பதியினருக்கு ஹரிஷ் பரத்வாஜ், சைலாஷ் என இரு மகன்கள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பிரபலம்:

நங்கநல்லூர் மற்றும் அண்ணாநகரில் நாகலட்சுமி பட்டுப்புடவை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கணவர் சுப்பிரமணியனுக்கு வேலை இல்லை என்றும், போதிய வருமானம் இல்லை என்றும் கூறப்படுகிறது. பட்டுப்புடவை விற்பனை நிலையம் நடத்தி வருவதுடன் இன்ஸ்டாகிராமில் பட்டுப்புடவை பற்றி ஏராளமான வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வந்துள்ளார். இதனால், அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

குடும்பத் தகராறு:

இதனால், நாகலட்சுமிக்கு வருவாய் போதுமான அளவு இருந்து கொண்டே இருந்துள்ளது.  இவர்களின் முதல் மகன் ஹரிஷ் பரத்வாஜ் ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருகிறார். 2வது மகன் சைலாஷ் சென்னையில் பல் மருத்துவம் படித்து வருகிறார். ஆனால், சுப்பிரமணியன் வேலைக்குச் செல்லாததால் கணவன் - மனைவிக்கு இடையே சண்டை அவ்வப்போது ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், சுப்பிரமணியன் தனது மனைவியிடம் கோபித்துக் கொண்டு மதுரையில் தனியாக வசித்து வந்துள்ளார். ஆனாலும், அவருக்கு தேவையான பணத்தை நாகலட்சுமி தொடர்ந்து அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுப்பிரமணியன் சென்னைக்கு வந்துள்ளார். சென்னை திரும்பியது முதலே நாகலட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவி கொலை - கணவன் தற்கொலை:

இந்த சூழலில், நாகலட்சுமியின் 2வது மகன் சைலாஷிற்கு சுப்பிரமணியன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதில் அவர் நானும் அம்மாவும் இனி இருக்கமாட்டோம். உனக்கு சாப்பாடு வைத்திருக்கிறேன் என்று இருந்துள்ளது. இதனால், பதற்றம்  அடைந்த சைலாஷ் உடனடியாக போன் செய்துள்ளார். ஆனால், இருவரும் போன் எடுக்கவில்லை.

இதையடுத்து, பதறியடித்து வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கழுத்து, தலை மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டப்பட்டு நாகலட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். மற்றொரு அறையில் சுப்பிரமணியன் சடலமாக தொங்கியுள்ளார். இதைக்கண்ட சைலாஷ் அலறியடித்து துடித்துள்ளார்.

போலீஸ் விசாரணை:

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக சுப்பிரமணியனுக்கும் நாகலட்சுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சுப்பிரமணியன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்து அரிவாளால் நாகலட்சுமியை கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!
விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!
மதுப்பிரியர்களே எச்சரிக்கை! மயிலாடுதுறை டாஸ்மாக் கடையில் ₹10 எக்ஸ்ட்ரா தரலைன்னா உங்களுக்கும் இதே கதிதான்!
மதுப்பிரியர்களே எச்சரிக்கை! மயிலாடுதுறை டாஸ்மாக் கடையில் ₹10 எக்ஸ்ட்ரா தரலைன்னா உங்களுக்கும் இதே கதிதான்!
எலும்புக் கூடாக மீட்கப்பட்ட வாலிபர் ! பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம் ! சிக்கிய சிறுவர்கள்
எலும்புக் கூடாக மீட்கப்பட்ட வாலிபர் ! பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம் ! சிக்கிய சிறுவர்கள்
காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!
Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
Leema Rose Martin : ‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
MK Stalin Vs Vijay: “தவெக ஆட்சி நடத்த தொந்தரவாக இருக்கப் போவதில்லை, ஆனால்..“ ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?
“தவெக ஆட்சி நடத்த தொந்தரவாக இருக்கப் போவதில்லை, ஆனால்..“ ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட் என்ன தெரியுமா.?
Embed widget