மேலும் அறிய

திருமணமான 6 மாதத்தில் பிரிந்த மனைவி....கணவர் எடுத்த கொடூர முடிவால் அதிர்ச்சி

புருஷோத்தமன், மனைவி தன்னை விட்டு பிரிந்தது குறித்து கூறி வருத்தப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே பெரிய விஞ்சியம்பாக்கம் ஏரிக்கரை அமைந்துள்ளது. இங்கு இரவு நேரங்களில், இளைஞர்கள் மது குடிப்பது வழக்கம். இந்தநிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் ஏரிக்கரை ஓரம் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். அப்பகுதி மக்கள் இது குறித்து , காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், தகவல் அறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

திருமணமான 6 மாதத்தில் பிரிந்த மனைவி....கணவர் எடுத்த கொடூர முடிவால் அதிர்ச்சி
 
மறைமலைநகர் உதவி ஆய்வாளர் தினேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கைப்பற்றப்பட்ட உடலில் எந்தவித காயங்களும் இல்லாததால், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும், அதே போன்று உடல் அருகே மதுபாட்டில் சோடா உள்ளிட்டவரை இருந்ததால், மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் உயிரிழந்தவர் யார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
மறைமலைநகர் போலீசார் நடத்திய விசாரணையில்,  சிங்கப்பெருமாள் கோவில் குப்பைகாரி அம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் புருஷோத் ( 28 ) என்பதும் இவர் மகேந்திரா சிட்டி பகுதியில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும் புருஷோத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அடுத்த வளையக்கரணை , பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவருடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்கள் இருவரும், 6 மாதமாக சிங்கப்பெருமாள் கோவிலில் வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவி இருவரும் அடிக்கடி சண்டையிட்டும் வந்துள்ளனர்.
maraimalai nagar police station , மறைமலைநகர் காவல் நிலையம்
 
இந்தநிலையில், கணவன், மனைவி இருவரும் வழக்கம் போல கடந்த சனிக்கிழமை அன்று சண்டையிட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த மனைவி பாக்கியலட்சுமி, தனது அம்மா வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். மனைவி சென்றதிலிருந்து கணவன் புருஷோத்தமன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நேற்று நள்ளிரவு 11:45 மணி அளவில் மனைவியின் சித்தப்பா மகன் அருண் என்பவருக்கு போன் செய்த புருஷோத்தமன், மனைவி தன்னை விட்டு பிரிந்தது குறித்து கூறி வருத்தப்பட்டுள்ளார். இந்தநிலையில் தான் புருஷோத் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மனைவி பிரிந்த சோகத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, இது குறித்து மறைமலை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 6 மாதத்திலேயே கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
அடுத்த எம்எல்ஏ நான் தான்.! போட்டி போட்டு அதிமுகவில் குவிந்த விருப்ப மனுக்கள் இவ்வளவா.!!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC: தேர்வர்களே.. நாளை கடைசி- குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
Tamil Cinema Rewind : மொத்தம் 285 படங்கள்...2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல ஆண்டா..இதோ நிலவரம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
லோ பீம் அல்லது ஹை பீம்? - அடர்ந்த மூடுபனியில் வாகனம் ஓட்ட எது சரியானது? - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Embed widget