மேலும் அறிய

கணவன் வேண்டாம்.. பழைய காதலனே போதும்.. மகளுடன், மாயமான பெண் தற்கொலை

கணவனை விட்டு பிரிந்து பழைய காதலுடன் வாழ்ந்துவந்த பெண் தூக்கிட்டு தற்கொலை.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது ஒரே மகள் பவித்ரா (25).  இவர் பொத்தேரி பகுதியில் தமிழ்வாணன் என்பவரை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பவித்ராவின் குடும்பத்தாருக்கு தெரிய வர  பவித்ராவிடம் எடுத்துக்கூறி கண்டித்துள்ளனர். அதையும் மீறி தனது காதலை தொடர்ந்துள்ளார். நாளடைவில் தமிழ்வாணனுக்கும் பவித்ராவிற்கும் இடையே உரசல் ஏற்பட்டு காதல் பாதியிலேயே முறிந்ததாக கூறப்படுகிறது.

பழைய  காதலன் தமிழ்வாணன் 

இந்த நிலையில் பவித்ராவின் பெற்றோர் சென்னை வண்ணாரப் பேட்டையில் உள்ள தனது சகோதரியின் மகன்  புருஷோத்தமனுக்கும் பவித்ராவிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்தை முறையாக பதிவும் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் வண்ணாரப் பேட்டையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த பவித்ராவின் வாழ்க்கையில் பழைய  காதலன் தமிழ்வாணன் மீண்டும் வந்துள்ளார். பவித்ரா தமிழ்வாணன் காதல் தொடர்ந்துள்ளது.

அடிக்கடி தமிழ்வாணனுடன் பேசுவதும் அவரை ரகசியமாகவும் சந்தித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பவித்ராவின் கணவர் புருஷோத்தமனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து பவித்ராவிடம் எடுத்து சொல்லி அவரோடு வாழ விரும்பியுள்ளார். அதையும் மீறி பழைய காதலுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதம் முன்பு புருஷோத்தமன் குடும்பத்தினர் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். பவித்ராவை திருவிழாவிற்கு அழைத்தும் அவர்களுடன் செல்லாமல் வீட்டிலேயே தங்கிவிட்டார். கணவரின் குடும்பம் திருவிழாவிற்கு சென்ற அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பவித்ரா வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தனது குழந்தையுடன் அங்கிருந்து புறப்பட்டு பொத்தேரியில் தனது பழைய காதலன் தமிழ்வாணனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

மூன்று மாதத்தில் தினமும் சண்டை

பவித்ரா தமிழ்வாணனோடு மூன்று மாதத்தில் தினமும் சண்டை சச்சரவில்தான் வாழ்ந்து வந்துள்ளனர். முதலில் பொத்தேரியில் இரண்டு மாதங்கள் வசித்து வந்த நிலையில் திடீரென இடத்தை மாற்றி தைலாவரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ஒரு வீட்டில் வாடகைக்கு, வந்து 2 வாரங்களில் மீண்டும் பிரச்சினை வலுத்து ஏற்கனவே பவித்ரா கொண்டு வந்த நகையை வாங்கி காலி பண்ணிவிட்டு, தொழில் செய்வதற்கு உன் அப்பாவிடம் இருந்து 10 லட்சரூபாய் வாங்கித்தர சொல்லி தினமும் பவித்ராவை அடித்து தொந்தரவு செய்துள்ளார்.

அப்பாவிடம் 10 லட்ச ரூபாய் பணம் 

இதற்கிடையில் பவித்ரா அவரது அப்பாவிடம் 10 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். அவரது அப்பா பணம் தர மறுத்து விட்டார். ஒருகட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பவித்ரா தனது அப்பாவிடம்  விரைவில் குழந்தையுடன் நான் உங்களோடு வந்து விடுகிறேன் என போனில் பேசியுள்ளார். திடீரென பவித்ரா  குழந்தையை எதிர் வீட்டில் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Embed widget