மேலும் அறிய

சென்னை: வாடிக்கையாளர் திட்டியதால் பார்ட் டைம் டெலிவரி செய்து படித்துவந்த இளைஞர் தற்கொலை.! நடந்தது என்ன.?

Chennai Food delivery Boy Suicide: சென்னையில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக உணவு டெலிவரி வேலை செய்து வந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Chennai Food delivery Boy Suicide: சென்னையில் வாடிக்கையாளர் திட்டியதால், 19 வயதான உணவு டெலிவரி வேலை பார்த்துவந்த பவித்ரன் எனும் இளைஞர், செப்டம்பர் 11 புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். பி.காம் மாணவரான பவித்ரன், தனது படிப்பையும், டெலிவரி வேலையை பகுதி நேரமாகவும் சேர்த்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரது, இந்த சோக முடிவுக்கு வாடிக்கையாளரைக் குற்றம் சாட்டி தற்கொலைக் குறிப்பில் தெரிவித்துவிட்டு, அவரது இல்லத்தில் இறந்து கிடந்தார்.

டெலிவரிக்கு தாமதம்: 

செப்டம்பர் 11ஆம் தேதி, சென்னை கொரட்டூரில் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்ய பவித்ரன் சென்றுள்ளார். அப்போது பொருட்கள் டெலிவரி செய்ய வேண்டிய வாடிக்கையாளரின் வீட்டைக் கண்டுபிடித்து செல்வதற்கு தாமாதமாகியிருக்கிறது. பொருட்கள் டெலிவரியாவதற்கு தாமதமானதால் விரக்தியடைந்த வாடிக்கையாளர், அவரை கடுமையாக திட்டியதாகவும், டெலிவரி சேவையில் புகாரை அளித்ததாகவும், மேலும் அவரை மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையில் புகார்

இந்த சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரன், டெலிவரி சர்வீஸ் மூலம் கண்டித்ததால் கோபத்தில் வாடிக்கையாளரின் வீட்டின் மீது கல்லை எறிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து வாடிக்கையாளர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து பவித்திரனை அழைத்த காவல்துறையினர், அவரது பெற்றோர் முன்னிலையில் கண்டித்தும், எச்சரிக்கை விடுத்தும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு, பவித்ரன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவரது இறப்பு குறிப்பில் “ என் மரணத்திற்கு காரணம் , என்னை மன உளைச்சளுக்கு ஆளாக்கி, டெலிவரி செய்ய சென்ற இடத்தில் , அவர்கள் என்னை கடுமையாக திட்டியதால் மட்டுமே. இதுபோன்று பெண்கள் உலகில் உள்ளவரை இன்னும் பல மரணங்கள் நிகழும் “ எழுதியிருக்கிறார். 

பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டும் பட்டப்படிப்பு படித்துக்கொண்டும் இருந்த இளைஞரின், யாரும் எடுக்க கூடாத இந்த சோக முடிவானது , சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பு:

யாரேனும் மனநலப் பிரச்னைகளை எதிர்கொள்வது அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருப்பது உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து அவர்களுக்கு அன்பான ஆறுதல்களை தெரிவித்து உதவி செய்யுங்கள். 

தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கக்கூடிய தற்கொலை தடுப்பு அமைப்புகளின் சில ஹெல்ப்லைன் எண்கள் இங்கே உள்ளன.  தற்கொலை தொடர்பான எண்ணங்கள் இருந்தால் , இந்த எண்களை தொடர்பு கொள்ளவும்.

 

மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை உதவி எண்: 104

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.