மேலும் அறிய

Gold Smuggling: ஒரே இரவில் 3 விமானங்கள்.!  தங்க கடத்தலில் இறங்கிய 25 பேர்: சுற்றி வளைத்து தூக்கிய அதிகாரிகள்.! நடந்தது எங்கு? 

Chennai Airport Gold Smuggled: சென்னை விமான நிலையத்தில், 20 கிலோ கடத்தல் தங்கத்தை  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் 3 விமானங்களில், 25 பேர் தங்க கடத்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல்:

சென்னையில் உள்ள அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் , தங்கம் கடத்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருக்கிறது. மேலும், சிங்கப்பூரிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. 

இதையடுத்து, நேற்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் , சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வருகை புரிந்து ரகசியமாக கண்காணிப்பில் இறங்கினர். 

3 விமானங்கள்:

அப்போது, நேற்றைய தின இரவில் சுமார் 11 மணியளவில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளிடம், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கு உரிய வகையில் வந்த பயணிகளிடம் தனியாக வைத்து சோதனை நடத்தினர்.

இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்த வந்த இண்டிகோ விமானம் வந்தடைந்தது. அந்த பயணிகளிடமும், சந்தேகத்துக்கிடமான பயணிகளை சோதனை நடத்தினர். 

இதனை தொடர்ந்து , சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ என்ற மற்றொரு விமானமும் வந்தடைந்தது.அதிலும், சந்தேகத்திற்கிடமான சில பயணிகளை சோதனை நடத்தினர். 

25 பேர் கைது:

மூன்று விமானங்களில் வந்த 25 பயணிகளை தனியாக அழைத்து சோதனை நடத்தியதில் , அவர்கள் தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. 25 பேரில் 8 பேர் பெண் பயணிகள் அடங்குவர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. இவர்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. 

மொத்தமாக 20 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் , மொத்தமாக கடத்தி வரும் போது மாட்டி விடக்கூடாது என்பதற்காக , 3 விமானங்களில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

இதையடுத்து , 25 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 25 பேரை குருவிகளாக தங்க கடத்தலில் , சென்னை கடத்தல் கும்பல் சிலர் ஈடுபடுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 

இந்த விவகாரத்தில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா, என்ற கோணத்திலும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், நேற்றைய தினம் ஒரே இரவில் , 3 விமானங்களில் 25 பேர் திட்டம் போட்டு தங்கம் கடத்தலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget