மேலும் அறிய

சென்னை: காப்பாத்துங்க!! நடுரோட்டில் அலறியபடி ஓடிய ரவுடி.. துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்!

சென்னை அருகே பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அடுத்த அயப்பாக்கத்தில் பிரபல ரவுடி நடுரோட்டில் ஓட ஓட வெட்டிக்கொலை செய்த சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் 30 வயதான பிரபல ரவுடி சந்தீப்குமார். இவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இவர், நேற்று மாலை 4.30 மணி அளவில் அண்ணாநகர், மடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோ ஓட்டியபடி வந்தார். அங்கு, உறவினர்களிடம் பொதுவாக பேசிவிட்டு தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். 

அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை வழிமறித்து அரிவாள், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பொதுமக்களிடம் தன்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று அலறி கூச்சலிட்டு நடுரோட்டில் ஓடியுள்ளார். ஆனால், அவ்வளவு கூச்சலிட்டும் யாரும் உதவிக்கு வராததால் அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.

அதில், படுகாயமடைந்த சந்தீப் குமார் ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து அந்த மர்ம கும்பல் இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

தகவலறிந்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தீப் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த 2018ம் ஆண்டு ரவுடி ஆதித்யா என்பவரை அண்ணாநகரில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப்குமார் சிறையில் இருந்து வெளியே வந்து ஆட்டோ ஒட்டிவந்ததும், நேற்று இந்த கொலை நடந்ததாகவும் தெரியவந்தது.

இந்த வழக்கு சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மடுவாங்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் பேசிவிட்டு, தனது வீட்டிற்கு செல்லும்போது படுகொலை செய்யப்பட்டது. 

கொலைக்கான காரணம் :

மேலும் நண்பர்களுடன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதாகவும், அதனால், அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆதித்யாவை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததா, நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்து நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
"மாதம் தோறும் உதவித்தொகை வேண்டுமா? விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!"
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
Embed widget