மேலும் அறிய

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. ராகிங் காரணமா ? விசாரணைக்குழு அமைத்த மாவட்ட நிர்வாகம்

செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு ராகிங் காரணம் என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக்கல்லூரியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் 2-ம் ஆண்டு பயின்றுவரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பரவது மகள் கவிப்பிரியா வயது(19) என்பவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும் அவர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி  தனது விடுதி அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சட்டக்கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. ராகிங் காரணமா ? விசாரணைக்குழு அமைத்த மாவட்ட நிர்வாகம்

கவிப்பிரியாவை நீண்டநேரமாக காணவில்லை என்பதால் அவரது அறைக்கு சென்று சக மாணவிகள் பார்த்தபோது அறையின் உள்ளே தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். இதைதொடர்ந்து சக மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி கவிப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு மிகுந்த மன உளைச்சலை ஏற்பட்டதாகவும் விடுதியை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கே வந்து விடுவதாகவும் தன் தந்தை சிவப்பிரகாசர் இடம் தொலைபேசி வாயிலாக கவிப்பிரியா பேசியிருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இருப்பினும் ஒரு சில நாட்களில் தேர்வு நடைபெற இருப்பதனால் தேர்வு முடியும் வரை பொறுத்து இருக்கும்படி, இவரது நண்பர்கள் தரப்பிலும் பெற்றோர் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் விடுதியில் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்நிலையில்தான் கவிப்பிரியா விடுதியிலிருந்து பயந்து நான் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார் என்பது குறித்த தகவல் சக மாணவிகளுக்கு கிடைக்கப் பெற்றதன் காரணமாக மீண்டும் அதே அளவு அவரை சக மாணவிகள் தொடர்ச்சியாக ராகிங் செய்ததாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த கவிப்பிரியா இதனால் மிகுந்த மன வேதனை அடைந்து கவிப்பிரியா தற்போது உயிரிழந்துள்ளார்.


சட்டக்கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. ராகிங் காரணமா ? விசாரணைக்குழு அமைத்த மாவட்ட நிர்வாகம்

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சிவப்பிரகாசத்தை தொடர்புகொண்டு கேட்கும்பொழுது; 

எனது மகள் தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்கும் வரை எனது மகளின் சடலத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள மாட்டோம். என் மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழையல்ல. எங்களுக்கு எல்லாம் அவ்வளவு தைரியமாக ஆறுதல் சொல்வாள் என கண்கலங்கினார்.

சட்டக்கல்லூரி மாணவி ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் கூறியதாவது?

மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்வித்துறை சார்ந்த ஒரு குழு அமைத்து மாணவி ராகிங் செய்ததன் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரிக்க தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர் தரப்பில் இருந்து 2 புகார்கள் கொடுத்திருக்கிறார்கள். அதில் முதல் புகாரில் மாணவி ஏதேனும் பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? என்றும், மற்றொரு புகாரில் மாணவி தற்கொலைக்கு ராகிங்தான் காரணமா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு புகார்களை பெற்றுக்கொண்டு முறைப்படி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக மாணவியின் பிரேத பரிசோதனையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு குறித்து எந்தவிதமான அடையாளமும் இல்லை. மேலும் 100% தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.  எனவே இறப்பில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இரண்டாவதாக ராகிங் புகார் குறித்து காவலர்கள் விசாரிப்பதை விட கல்வியாளர்கள் தலைமையில் ஏற்படுத்தப்படும் குழுவினர் விசாரிப்பதே மிகச்சிறப்பாக இருக்கும். அதை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பெயரில் தனி குழு ஒன்று அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.


சட்டக்கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. ராகிங் காரணமா ? விசாரணைக்குழு அமைத்த மாவட்ட நிர்வாகம்

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடர்புகொண்டு கேட்டபோது.., 

சட்டக்கல்லூரி மாணவிகள் பிரியா ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரிக்க சிறப்பு கல்வி குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது அக்குழுவில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம், அதன் முதல்வர் பேரா. (முனைவர்) கௌரி ரமேஷ் அவர்கள் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உடன் விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறைக்கும் கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தரப்படும் என தெரிவித்தார்.

 

முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ராகிங் கொடுமையால் கவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து முறையான விசாரணை நடத்த மறுக்கும் காவல்துறை, அவரது உடலை தகனம் செய்ய வைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
21 வயது இளைஞர் - 52 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு !! இறுதியில் நடந்த சோகம்
21 வயது இளைஞர் - 52 வயது பெண்ணுடன் திருமணம் மீறிய உறவு !! இறுதியில் நடந்த சோகம்
Tiruvallur ; காதலித்து திருமணம் !! ஒரே மாதத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tiruvallur ; காதலித்து திருமணம் !! ஒரே மாதத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Embed widget