மேலும் அறிய

சட்டக்கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. ராகிங் காரணமா ? விசாரணைக்குழு அமைத்த மாவட்ட நிர்வாகம்

செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவியின் தற்கொலைக்கு ராகிங் காரணம் என்று அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக்கல்லூரியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.இந்நிலையில் 2-ம் ஆண்டு பயின்றுவரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பரவது மகள் கவிப்பிரியா வயது(19) என்பவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி விடுதியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும் அவர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி  தனது விடுதி அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சட்டக்கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. ராகிங் காரணமா ? விசாரணைக்குழு அமைத்த மாவட்ட நிர்வாகம்

கவிப்பிரியாவை நீண்டநேரமாக காணவில்லை என்பதால் அவரது அறைக்கு சென்று சக மாணவிகள் பார்த்தபோது அறையின் உள்ளே தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். இதைதொடர்ந்து சக மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவி கவிப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு மிகுந்த மன உளைச்சலை ஏற்பட்டதாகவும் விடுதியை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கே வந்து விடுவதாகவும் தன் தந்தை சிவப்பிரகாசர் இடம் தொலைபேசி வாயிலாக கவிப்பிரியா பேசியிருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்து உள்ளது. இருப்பினும் ஒரு சில நாட்களில் தேர்வு நடைபெற இருப்பதனால் தேர்வு முடியும் வரை பொறுத்து இருக்கும்படி, இவரது நண்பர்கள் தரப்பிலும் பெற்றோர் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் விடுதியில் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இந்நிலையில்தான் கவிப்பிரியா விடுதியிலிருந்து பயந்து நான் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார் என்பது குறித்த தகவல் சக மாணவிகளுக்கு கிடைக்கப் பெற்றதன் காரணமாக மீண்டும் அதே அளவு அவரை சக மாணவிகள் தொடர்ச்சியாக ராகிங் செய்ததாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த கவிப்பிரியா இதனால் மிகுந்த மன வேதனை அடைந்து கவிப்பிரியா தற்போது உயிரிழந்துள்ளார்.


சட்டக்கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. ராகிங் காரணமா ? விசாரணைக்குழு அமைத்த மாவட்ட நிர்வாகம்

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் சிவப்பிரகாசத்தை தொடர்புகொண்டு கேட்கும்பொழுது; 

எனது மகள் தற்கொலைக்கு உரிய நீதி கிடைக்கும் வரை எனது மகளின் சடலத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள மாட்டோம். என் மகள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழையல்ல. எங்களுக்கு எல்லாம் அவ்வளவு தைரியமாக ஆறுதல் சொல்வாள் என கண்கலங்கினார்.

சட்டக்கல்லூரி மாணவி ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் கூறியதாவது?

மாவட்ட ஆட்சியர் மூலமாக கல்வித்துறை சார்ந்த ஒரு குழு அமைத்து மாணவி ராகிங் செய்ததன் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரிக்க தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர் தரப்பில் இருந்து 2 புகார்கள் கொடுத்திருக்கிறார்கள். அதில் முதல் புகாரில் மாணவி ஏதேனும் பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? என்றும், மற்றொரு புகாரில் மாணவி தற்கொலைக்கு ராகிங்தான் காரணமா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் அளித்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு புகார்களை பெற்றுக்கொண்டு முறைப்படி விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முதற்கட்டமாக மாணவியின் பிரேத பரிசோதனையில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு குறித்து எந்தவிதமான அடையாளமும் இல்லை. மேலும் 100% தற்கொலைதான் செய்து கொண்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.  எனவே இறப்பில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இரண்டாவதாக ராகிங் புகார் குறித்து காவலர்கள் விசாரிப்பதை விட கல்வியாளர்கள் தலைமையில் ஏற்படுத்தப்படும் குழுவினர் விசாரிப்பதே மிகச்சிறப்பாக இருக்கும். அதை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பெயரில் தனி குழு ஒன்று அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.


சட்டக்கல்லூரி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. ராகிங் காரணமா ? விசாரணைக்குழு அமைத்த மாவட்ட நிர்வாகம்

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தொடர்புகொண்டு கேட்டபோது.., 

சட்டக்கல்லூரி மாணவிகள் பிரியா ராகிங் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரிக்க சிறப்பு கல்வி குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது அக்குழுவில் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம், அதன் முதல்வர் பேரா. (முனைவர்) கௌரி ரமேஷ் அவர்கள் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உடன் விசாரணை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது. மேலும், காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறைக்கும் கல்லூரி சார்பாக முழு ஒத்துழைப்பு தரப்படும் என தெரிவித்தார்.

 

முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ராகிங் கொடுமையால் கவிப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து முறையான விசாரணை நடத்த மறுக்கும் காவல்துறை, அவரது உடலை தகனம் செய்ய வைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு, கவிப்பிரியாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
RBI Gold Loan: பிரச்னை ஓவர், தாராளமான நகைக்கடன், 85% வரை அள்ளிக் கொடுக்க ஆர்பிஐ அனுமதி - பொதுமக்கள் ஹாப்பி
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Kia First Affordable EV: மலிவு விலை எஸ்யுவி சந்தையை புரட்டி போட தயாரான கியா- லெவல் 2 ADAS, அட்டகாசமான புது கார்
Spl. Train for Girivalam: கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
கிரிவலம் போறீங்களா.? பஸ் கூட்டமா இருக்குமேன்னு யோசிக்காதீங்க, சிறப்பு ரயில்ல போங்க-விவரம் இதோ
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Bangladesh Polls: வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு? பொதுத்தேர்தலை அறிவித்த இடைக்கால அரசு - இந்தியாவிற்கு பிளஸ்?
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Most Expensive ICE SUV: இந்த கார்லா ஓடுமா? பறக்குமா? தாறுமாறான விலை - டாப் 5 ICE எஸ்யுவி கார் மாடல்கள்
Embed widget