மேலும் அறிய

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் சென்னையைச் சேர்ந்த அட்டோ ஓட்டுனர் குடும்பத்தாருடன் குளித்தப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒட்டுனரின் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான  குமரேசன் 48 மற்றும் அவரது தம்பி சதீஷ்குமார் 44 ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஆடி மாதத்தையொட்டி தங்களது குல தெய்வமான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு குமரேசனின் ஆட்டோவில் சென்று விட்டு பின்னர்  ஊர்  திரும்பிய நிலையில்  இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமென்பதினால்  செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் அனைவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
இந்நிலையில் பாலாற்றில் அனைவரும் குதுகலமாக குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் மகள் சிவசங்கரி 16 மற்றும் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீ 11ஆகிய இருவரும் பாலாற்று நீரில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளித்துள்ளனர். இதனைக் கண்டு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசனின் உறவினர் ஸ்ரீனிவாசன் 45 என்பவர் நீரில் மூழ்கி தத்தளித்து வந்த இருவரையும் காப்பாற்றச் சென்றப்போது மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
இதனையடுத்து இது குறித்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறையினர் பாலாற்று நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீயின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
 

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
பாலாற்றில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பல லட்சம் கன அடி நீரானது பாலாற்றில் கரைப் புரண்டோடியும்,தற்போது மழை மற்றும் தடுப்பணைகளிலிருந்து திறந்து விடப்பட்டிருந்த நீர் பாலாற்றில் சென்றுக்கொண்டிருப்பதினால் பாலாற்று படுக்கையின் ஆழத்திலுள்ள சேற்றில் உயிரிழந்தவர்களில் மீதமுள்ள இருவரின்   உடல்கள் சிக்கி இருக்க கூடும் என்ற கோணத்தில் தொடர்ந்து அவர்களது உடலை  மீட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் பாலாற்று கரையோரங்களில் இருவரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கண்காணித்து உடலை தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.மேலும் இது குறித்து மாமண்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
 ஆடி மாதத்தையொட்டி குல தெய்வக் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியப்போது விடுமுறை தினத்தில் குடும்பத்தாருடன் குதுகலமாக பாலாற்றில் குளித்தப்போது,எதிர்பாராத விதமாக பாலாற்று நீரில் மூழ்கி மூவர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் மற்றும் அனைவரிடத்திலும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget