மேலும் அறிய

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் சென்னையைச் சேர்ந்த அட்டோ ஓட்டுனர் குடும்பத்தாருடன் குளித்தப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒட்டுனரின் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான  குமரேசன் 48 மற்றும் அவரது தம்பி சதீஷ்குமார் 44 ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஆடி மாதத்தையொட்டி தங்களது குல தெய்வமான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு குமரேசனின் ஆட்டோவில் சென்று விட்டு பின்னர்  ஊர்  திரும்பிய நிலையில்  இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமென்பதினால்  செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் அனைவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
இந்நிலையில் பாலாற்றில் அனைவரும் குதுகலமாக குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் மகள் சிவசங்கரி 16 மற்றும் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீ 11ஆகிய இருவரும் பாலாற்று நீரில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளித்துள்ளனர். இதனைக் கண்டு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசனின் உறவினர் ஸ்ரீனிவாசன் 45 என்பவர் நீரில் மூழ்கி தத்தளித்து வந்த இருவரையும் காப்பாற்றச் சென்றப்போது மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
இதனையடுத்து இது குறித்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறையினர் பாலாற்று நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீயின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
 

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
பாலாற்றில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பல லட்சம் கன அடி நீரானது பாலாற்றில் கரைப் புரண்டோடியும்,தற்போது மழை மற்றும் தடுப்பணைகளிலிருந்து திறந்து விடப்பட்டிருந்த நீர் பாலாற்றில் சென்றுக்கொண்டிருப்பதினால் பாலாற்று படுக்கையின் ஆழத்திலுள்ள சேற்றில் உயிரிழந்தவர்களில் மீதமுள்ள இருவரின்   உடல்கள் சிக்கி இருக்க கூடும் என்ற கோணத்தில் தொடர்ந்து அவர்களது உடலை  மீட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் பாலாற்று கரையோரங்களில் இருவரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கண்காணித்து உடலை தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.மேலும் இது குறித்து மாமண்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
 ஆடி மாதத்தையொட்டி குல தெய்வக் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியப்போது விடுமுறை தினத்தில் குடும்பத்தாருடன் குதுகலமாக பாலாற்றில் குளித்தப்போது,எதிர்பாராத விதமாக பாலாற்று நீரில் மூழ்கி மூவர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் மற்றும் அனைவரிடத்திலும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Budget Hatchbacks: ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
ஹேட்ச்பேக்-னாலே நாங்க தான்.. சிட்டியில் ஆதிக்கம் - குறைஞ்ச விலை, நிறைஞ்ச மைலேஜ் மாடல்கள்
Iran Warns US: 'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
'நசுக்கும் பதிலடி' கொடுப்போம்.! அமெரிக்காவிற்கு ஈரான் வார்னிங்.! மீண்டும் வெடிக்கும் போர்.!?
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget