மேலும் அறிய

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் சென்னையைச் சேர்ந்த அட்டோ ஓட்டுனர் குடும்பத்தாருடன் குளித்தப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ ஒட்டுனரின் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான  குமரேசன் 48 மற்றும் அவரது தம்பி சதீஷ்குமார் 44 ஆகியோர் தங்களது குடும்பத்தாருடன் ஆடி மாதத்தையொட்டி தங்களது குல தெய்வமான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவிலுக்கு குமரேசனின் ஆட்டோவில் சென்று விட்டு பின்னர்  ஊர்  திரும்பிய நிலையில்  இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமென்பதினால்  செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த பாலாற்றில் அனைவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
இந்நிலையில் பாலாற்றில் அனைவரும் குதுகலமாக குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக திடீரென ஆட்டோ ஓட்டுனர் குமரேசன் மகள் சிவசங்கரி 16 மற்றும் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீ 11ஆகிய இருவரும் பாலாற்று நீரில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளித்துள்ளனர். இதனைக் கண்டு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் குமரேசனின் உறவினர் ஸ்ரீனிவாசன் 45 என்பவர் நீரில் மூழ்கி தத்தளித்து வந்த இருவரையும் காப்பாற்றச் சென்றப்போது மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
இதனையடுத்து இது குறித்து உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்புத் துறையினர் பாலாற்று நீரில் மூழ்கி உயிரிழந்த மூவரின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் குமரேசனின் தம்பி சதீஷ்யின் மகள் சிவஸ்ரீயின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
 

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
பாலாற்றில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பல லட்சம் கன அடி நீரானது பாலாற்றில் கரைப் புரண்டோடியும்,தற்போது மழை மற்றும் தடுப்பணைகளிலிருந்து திறந்து விடப்பட்டிருந்த நீர் பாலாற்றில் சென்றுக்கொண்டிருப்பதினால் பாலாற்று படுக்கையின் ஆழத்திலுள்ள சேற்றில் உயிரிழந்தவர்களில் மீதமுள்ள இருவரின்   உடல்கள் சிக்கி இருக்க கூடும் என்ற கோணத்தில் தொடர்ந்து அவர்களது உடலை  மீட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் பாலாற்று கரையோரங்களில் இருவரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கண்காணித்து உடலை தேடும் பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.மேலும் இது குறித்து மாமண்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி மாதம் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
 ஆடி மாதத்தையொட்டி குல தெய்வக் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியப்போது விடுமுறை தினத்தில் குடும்பத்தாருடன் குதுகலமாக பாலாற்றில் குளித்தப்போது,எதிர்பாராத விதமாக பாலாற்று நீரில் மூழ்கி மூவர்  பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் மற்றும் அனைவரிடத்திலும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget