மேலும் அறிய

பிரதமர் குறித்து அவதூறு கருத்து.. திடீர் திருப்பமாக 10 வயது சிறுமி வழக்கில் சிக்கிய தஞ்சை வாலிபர்! நடந்தது என்ன?

10 வயது சிறுமி ஆபாச வீடியோ வழக்கில் தஞ்சை வாலிபரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: பிரதமர் குறித்து அவதூறு கருத்து கூறியதாக சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர், திடீர் திருப்பமாக 10 வயது சிறுமியின் ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (35). எம்.காம் பட்டதாரி. தற்போது சுற்றுச்சூழல் குறித்து பி.ஹெச்.டி படித்து வந்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருந்து சிபிஐ டிஎஸ்பி சஞ்சய் கவுதம் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர், கடந்த 15-ம் தேதி காலை 6 மணிக்கு பூண்டி தோப்பு கிராமத்துக்கு வந்து  வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த விக்டர் ஜேம்ஸ் ராஜாவை எழுப்பி விசாரணை நடத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு, அவரை சிபிஐ அதிகாரிகள் காரில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் தஞ்சாவூரில் உள்ள, மத்திய அரசின் கல்வி நிறுவன விருந்தினர் மாளிகையில் வைத்து விக்டர் ஜேம்ஸ் ராஜாவிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதால் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனர் என்ற தகவல் பரவியது. இந்த தகவலை விக்டர் ஜேம்ஸ் ராஜாவின் பெற்றோரும் கூறினர். இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக விக்டர் ஜேம்ஸ் ராஜா, 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் தொடர்ந்து சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார். இதனால்தான் சிபிஐ அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர் என்று தெரிய வந்தது.

இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது 67B IT Act, pocso Act 2012 - sec 4,6,8,10,12,14 and 17, மற்றும் 120b of IPC act ஆகிய பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தஞ்சாவூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

சிபிஐ அதிகாரிகள் மற்றும் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவரை இரு நாட்கள் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைக்கவும், மார்ச் 20ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை சிறையில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து உள்ளூர் போலீசார் தரப்பில் கூறுகையில், சிபிஐ அதிகாரிகள் முதலில் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, பிரதமர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் அவதூறாக தகவல் அனுப்பியதாக கூறி அவரை தனியாக வைத்து விசாரித்தனர். விசாரணை எதற்காக நடைபெறுகிறது என ரகசியமாக வைத்திருந்தனர்.

தற்போது விசாரித்தபோது, விக்டர் ஜேம்ஸ் ராஜா பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுக்கு ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்டர்போல் போலீஸார் மத்திய அரசிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசு இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது.

இதில் இந்தியாவில் 21 மாநிலங்களில் விக்டர் ஜேம்ஸ் ராஜா போன்றவர்கள் ஒரு குழுவாக இணைந்து ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதில் விக்டர் ஜேம்ஸ் ராஜா 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து அனுப்பியதாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ளனர் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.