மேலும் அறிய

புதுச்சேரியில் வாலிபர் கொடூர கொலை: துண்டிக்கப்பட்ட கை - அதிர்ச்சி தரும் காரணம்

புதுச்சேரி அருகே திருக்கனூரில் சாலையோரம் நிறுத்தி இருந்த வாகனத்தின் மீது அமர்ந்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்து புதரில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே திருக்கனூரில் சாக்குப் பையில் துண்டிக்கப்பட்ட வாலிபரின் 'கை' கிடந்த சம்பவத்தில், வாலிபர் கொடூரமாக வெட்டி கொலை செய்தது அம்பலமானது. இது தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.

சாக்குப் பையில் துண்டிக்கப்பட்ட வாலிபரின் 'கை'

புதுச்சேரி திருக்கனூர் போலீசார் கடந்த 15ம் தேதி நள்ளிரவு, கொடாத்துார் மணவெளி பகுதியில் ரோந்து சென்றனர். அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில்  சென்ற 2 வாலிபர்களை நிறுத்தினர். போலீசாரை கண்டதும், இருசக்கர வாகன் மற்றும் சாக்குமூட்டையை போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சாக்குமூட்டையில் ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட கை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்கள் விட்டு சென்ற பைக் பதிவெண்ணை கொண்டு விசாரித்ததில், கண்டமங்கலம் அருகே எஸ்.ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேரந்த பாஞ்சாச்சரம் மகன் தட்சணாமூர்த்தி (எ) பாபு, (20) திருமங்கலம், வடக்குப்பாளைம் முருகன் மகன் ரோஹித்,( 20) என, தெரிந்தது. இருவரையும், போலீசார் கைது செய்து விசாரித்ததில், கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் வாலிபரை வெட்டி கொலை செய்து, உடலை புதரில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.

தட்டிகேட்டதால் தகராறு

மேலும் விசாரணையில், புதுச்சேரி செல்லிப்பட்டை சேர்ந்தவர் மணி மகன் ஆதிநாராயணன், 33 மது பழக்கம் உடைய ஆதிநாராயணன், கடந்த 15ம் தேதி இரவு 10 மணிக்கு, பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து கண்டமங்கலம் நோக்கி நடந்து சென்றுள்ளார். அப்போது, கண்டமங்கலம்- வானூர் சாலையில், பெரியபாபுசமுத்திரம் அய்யனார்கோவில் அருகே சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தட்சணாமூர்த்தி, அவரது நண்பர் ரோஹித் இருவரும் மது அருந்தியுள்ளனர். அந்த வழியாக வந்த ஆதிநாராயணன் சாலையோரம் நிறுத்தி இருந்த வாகனத்தின் மீது அமர்ந்துள்ளார்.

இதனை, தட்சணா மூர்த்தி, ரோஹித் இருவரும் தட்டிகேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி, ரோஹித் இருவரும் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் ஆதி நாராயணனை சரமாரியாக வெட்டினர். இதில் ஆதிநாராயணன் வலது கை துண்டாகி கிழே விழுந்ததுடன், சம்பவ இடத்திலே இறந்தார். ஆதிநாராயணன் உடலை இழுத்து சென்று, சித்தேரி பகுதியில் அடர்ந்த புதர்களுக்குள் வீசிவிட்டு, செடி கொடிகளை அதன் மீது வைத்து மூடியுள்ளனர்.

இருசக்கர வாகனத்தை  எடுக்க வரும் போது, துண்டிக்கப்பட்டகை மட்டும் அங்கு கிடந்தது. கையை வேறு ஏதேனும் இடத்தில் வீசிவிடலாம் என, அருகில் கிடந்த சாக்கு பையில் வைத்து கொண்டு பைக்கில் புறப்பட்டனர். திருக்கார் கொடாத்துார் மணவெளி அருகே சென்றபோது போலீசார் வருவதை கண்டு பைக் மற்றும் சாக்குபையை வீசி தப்பிச் சென்றது தெரியவந்தது. துண்டான கையில் ஆதி என பச்சை குத்தப்பட்டு இருந்ததால் கொலையானவர் யார் என்பது எளிதில் அடையாளம் காணப்பட்டது.

புதரில் மறைந்து வைத்திருந்த ஆதிநாராயணன் உடல்

கைதான இருவர் அளித்த வாக்குமூலத்தின் படி, நேற்று காலை 10:30 மணிக்கு தட்சணாமூர்தி, ரோஹித் இருவரையும் திருக்கனூர் போலீசார் தமிழக பகுதியான பெரியபாபுசமுத்திரம் அழைத்துச் சென்றனர். புதரில் மறைந்து வைத்திருந்த ஆதிநாராயணன் உடலை அடையாளம் காட்டினர். அப்போது, விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன், கண்டமங்கலம் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் இரு மாநில போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை வழக்கில் துண்டிக்கப்பட்ட கையை கைப்பற்றி வழக்குப் பதிந்து, கொலையாளிகள் இருவரையும் புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத் துவதால், தமிழக பகுதியில் மீட்கப்பட்ட உடலை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இடது மார்பில் 20 முறை கத்தியால் குத்தி சிதைத்து கொடூரமாக கொலை

அதன்படி, புதுச்சேரி தடயவியல் நிபுணர் சினேகா தலைமையிலான குழுவினர் ஆதிநாராயணன் உடலில் இருந்து தடயங்களை சேகரித்தனர். அப்போது ஆதிநாராயணன் வலது கையை துண்டாக வெட்டியதுடன், அவரது முகத்தை சுத்தியால் வெட்டி சிதைத்து, இடது மார்பில் 20 முறை கத்தியால் குத்தி சிதைத்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. திருக்கனூர் காவல் ஆய்வாளர் ராஜகுமார், உதவி ஆய்வாளர் பிரியா ஆகியோர், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை
தவெக மகளிர் அணி நிர்வாகி மிரட்டல் !! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி !! முதியவர் தற்கொலை
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget