மேலும் அறிய

வந்தவாசி அருகே பல்லவர் கால தவளகிரி ஈஸ்வரர் கோயில் கோபுரம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு

வந்தவாசி அருகே ஸ்ரீ தவளகிரி ஈஸ்வரர் மலையில் உள்ள பிள்ளையார் கோயில் கோபுரத்தை இடித்தது மர்ம நபர்களை கைதுசெய்ய கோரி, இந்து அமைப்பினர் சாலை மறியல் நடத்தினர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1400 அடி மலை உள்ளது இந்த மலை உச்சியில் தவளகிரீஸ்வரர் கோயிலும், விநாயகர், அம்பாள், முருகன், சண்டிகேஸ்வரர், அண்ணாமலையாரின் சந்நிதிகளும் அமைந்துள்ளன. திருக்கோயிலில் பிள்ளையார் கோயிலும் உள்ளது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பிள்ளையார் கோயிலின் கோபுரத்தை இடித்துள்ளனர். 

இதையடுத்து தகவல் அறிந்த இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள், பிள்ளையார் கோயில் கோபுரத்தை இடித்த அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்தவாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோபுரத்தை இடித்த நபர்களை உடனடியாக கைது செய்ய ஆவண செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் வந்தவாசி காஞ்சிபுரம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வந்தவாசி அருகே பல்லவர் கால தவளகிரி ஈஸ்வரர் கோயில் கோபுரம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு

 

தவளகிரீஸ்வரர் கோவிலின் சிறப்பு அம்சங்கள்.!

தவளகிரீஸ்வரர் கோயிலில் இரண்டு பழங்கால கல்வெட்டுகள் இங்கு உள்ளன. பல்லவ மன்னன் 3-ஆம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் எட்டாம் நூற்றாண்டின் பல்லவர்கள் காலத்தில் இந்தத் தலம் சிறப்பிடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. இதில் வெண்குன்றம் கிராமத்து சபை பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஒரு பக்கம் தெலுங்கு மொழியிலும், மறுபக்கம் சமஸ்கிருத மொழியிலும், பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டிலிருந்து விஜயநகரப் பேரரசர்கள் காலத்திலும் இத்தலம் சிறப்பாக விளங்கியதையும் திருப்பணிகள் நடந்தேறியதையும் அறிய முடிகிறது.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதைப் போன்று தவளகிரீஸ்வரர் கோயிலும் கார்த்திகை தீபத் திருவிழாவன்று அதிகாலை 4 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பிறகு முருகப்பெருமான் மலையடிவாரத்தில் வழிபடப்படுவார்.


வந்தவாசி அருகே பல்லவர் கால தவளகிரி ஈஸ்வரர் கோயில் கோபுரம் இடிக்கப்பட்டதால் பரபரப்பு

பின்னர் மலைக் கோயிலில் எழுந்தருளியுள்ள தவளகிரீசப் பெருமானுக்கும், ஆறுமுகப் பெருமானுக்கும் இதர மூர்த்திகளின் சிலைகளுக்கும் அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6 மணியளவில் தவளகிரி மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். பெரிய இரும்பு கொப்பரை முழுவதும் நெய் நிரப்பி ஏற்றப்படும் இந்த தீபம் சுற்றுவட்டாரத்தில் 10 கி.மீ. தூரத்துக்குத் தெரியும். மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும் இந்த தீபத்தை தரிசிக்கிறார்கள் பக்தர்கள். இவ்வளவு சிறப்பு அம்சங்களைக் கொண்ட கோவிலின் கோபுரத்தை உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர், அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு ஆகிய வீடியோவை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விநாயகர் கோயில் கோபுரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இடித்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget