மேலும் அறிய

Crime: கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்... கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி..!

கணவனின் கால்களை மனைவி ரேவதி பிடித்து கொண்ட போது  ராஜேஷ் வெற்றிவேலின் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன் மகன் வெற்றிவேல் வயது (43). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், வெற்றிவேல் என்பவருக்கும் ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பிரியதஷினி வயது (17) என்ற மகளும், லிங்கேஸ்வரன் வயது (15), நீதர் வயது (10) என்ற 2 மகன்களுடன் ஆரணி டவுன் தேனருவிநகரில் வசித்து வருகின்றனர். மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேல் அவருடைய மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தன்னுடைய அம்மா வீடானஓண்ணுபுரம் கிராமத்தில் ரேவதி தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெற்றிவேல் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மனைவி ரேவதி கணவர் வெற்றிவேலை அழைத்து சென்று சிகிச்சை அளித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

மேலும் நேற்று விடியற்காலை திடீரென ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல் மயக்கநிலையில் உள்ளதாக அவருடைய உறவினர்களுக்கு ரேவதி கூறியுள்ளார். உடனடியாக முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் முன்னாள் ராணுவ வீரர் வெற்றிவேல் ஏற்கனவே இறந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல்துறையினர் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி  வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு சந்தேகத்தின் அடிப்படையில்  ரேவதியை காவல்நிலையத்திற்கு வரவைத்தே அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரேவதி சரியான முறையில் பதில் அளிக்க வில்லையாம், சில மணிநேரம் கழித்து காவல்துறையினர் ரேவதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

 


Crime: கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்... கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி..!

அந்த விசாரணையில்  வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் வயது (41). இவருடன் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக கள்ள தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும் இதனையறிந்த கணவர் வெற்றிவேல் அடிக்கடி தன்னிடம் தகராறு ஈடுபட்டதாகவும், கூலிபடையை ஏவி தனது கணவனை கொலை செய்ய நாங்கள் இருவரும் திட்டமிட்டோம் என்றும், மேலும் கடந்த மார்ச் மாதம் முதலே தன்னுடைய கணவனை கூலி படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜேஷ் வயது (32) என்பவரை அணுகி 10 லட்சம் ரூபாய் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும்  ரேவதி வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார்.

 


Crime: கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்... கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி..!

 

மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கணவன் தன் குடும்பத்துடன் தனியாக இருப்பதை பயன்படுத்தி ரேவதி தன் கள்ளகாதலன் நாகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் ஆகியோரை நேற்று விடியற்காலையில் வீட்டிற்கு வரவழைத்து வெற்றிவேலின் கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தியுள்ளார். பின்னர் கணவனின் கால்களை மனைவி ரேவதி பிடித்து கொண்ட போது  ராஜேஷ் வெற்றிவேலின் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

 



Crime: கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்... கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி..!

இதனையடுத்து, ரேவதி இதற்கு உடந்தையாக இருந்த கள்ளகாதலன் நாகராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னையில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் கலாட்டா: இருவர் கைது!
சென்னையில் இருந்து மலேசியா சென்ற விமானத்தில் கலாட்டா: இருவர் கைது!
வயசு 80..ஆனா வீரம் குறையல !! பாலியல் அத்துமீறல் செய்ய முயன்ற பெயிண்டரை கதறவிட்ட மூதாட்டி
வயசு 80..ஆனா வீரம் குறையல !! பாலியல் அத்துமீறல் செய்ய முயன்ற பெயிண்டரை கதறவிட்ட மூதாட்டி
ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் ; உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேர் கைது
ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமிக்கு பாலியல் கொடூரம் ; உடந்தையாக இருந்த பெண் உட்பட 3 பேர் கைது
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

3 அதிமுக MLA ராஜினாமா ஆட்டத்தை தொடங்கிய தவெக அதிர்ச்சியில் SP வேலுமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate May 26th: நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை இன்று சரிவு; தற்போதைய விலை என்ன.?
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை இன்று சரிவு; தற்போதைய விலை என்ன.?
DMK: கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
கண்றாவிக் காட்சிகளா? ”உங்க அப்பா செய்யும்போது தெரியலையா ஸ்டாலின் சார்?” வரலாற்றை நோண்டும் TVK
Tamilnadu Round Up: குறைந்த தங்கம், உயர்ந்த பெட்ரோல், சிஎம் விஜய் அறிவிப்பு, ஷாக்கில் அதிமுக - தமிழ்நாட்டில் இதுவரை
குறைந்த தங்கம், உயர்ந்த பெட்ரோல், சிஎம் விஜய் அறிவிப்பு, ஷாக்கில் அதிமுக - தமிழ்நாட்டில் இதுவரை
TVK Vijay: எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?
எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
ARUN IPS: தவெகவை சுத்துபோட்டு அடித்த அருண் ஐபிஎஸ்? CM விஜய் பதவி கொடுத்தது ஏன்? திருமா தலையீடு?
Maragatham Kumaravel: அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
அதிமுக - திமுக கூட்டு நடந்துச்சு.. பணத்துக்காக தவெக வரல.. மரகதம் குமரவேல் ஓபன் டாக்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
தவெகவில் அதிமுக MLAக்கள்.. நீங்க ஏன் கதறுறீங்க? .. ஸ்டாலினை விளாசிய மாணிக்கம் தாகூர்!
TN CM VIJAY: இனி எந்த ஒளிவு மறைவும் தேவையில்லை.! டெண்டரில் புதிய நடைமுறை அறிவிப்பு- அசத்தும் CM விஜய்
இனி எந்த ஒளிவு மறைவும் தேவையில்லை.! டெண்டரில் புதிய நடைமுறை அறிவிப்பு- அசத்தும் CM விஜய்
Embed widget