மேலும் அறிய

Crime: தஞ்சை பகுதியில் இருவேறு இடங்களில் பைக் திருட்டு; மணல் கடத்தி வந்த வாகனம் பறிமுதல்

தஞ்சை பெரியகோயில் பகுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தான் நிறுத்தி வைத்து விட்டு சென்ற பைக்கை காணவில்லை என்று போலீசில் புகார் செய்துள்ளார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சரத் சிவராம் (24). இவர் தஞ்சைக்கு சுற்றுலாவாக வந்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்த பைக்கை தஞ்சை பெரிய கோயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு கோயிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். வாகன நிறுத்துமிடத்தில் வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பல இடங்களில் தேடிப் பார்த்தும் பைக் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு பைக் திருட்டு: தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் அப்துல் சலாம் (35). சம்பவத்தன்று தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு வந்த இவர் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் அப்துல் சலாம் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்: தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூர் ஆலக்குடி சாலையில் கள்ளப்பெரம்பூர் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தனர். அப்போது போலீஸாரை பார்த்ததும் அவ்வழியே லோடு ஆட்டோவில் வந்த நபர் அதில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். லோடு ஆட்டோவை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர் கள்ளப்பெரம்பூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (22 ) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் லோடு ஆட்டோவை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கள்ளப்பெரம்பூர்  போலீசார் வழக்கு பதிவு ஹரிஹரனை கைது செய்தனர்.

கொலை வழக்கில் சரண்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார் கோவிலை சேர்ந்தவர் சாமிநாதன் (40). வழக்கறிஞர். கடந்த 7ம் தேதி சாமிநாதன் ஜெயங்கொண்டம் அடுத்த அணைகூடம் கிராமத்தில் தனது தங்கை திருமணத்திற்காக சென்று இருந்தார்.

அப்போது மூன்று பைக்கில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் சாமிநாதனை சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக கும்பகோணம் திருநறையூர் அய்யம்பாளையம் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குருமூர்த்தி(21), நாச்சியார் கோவிலை சேர்ந்த பாஸ்கர் மகன் தினேஷ்குமார்(23), கும்பகோணம் அய்யம்பாளையம் தெருவை சேர்ந்த செல்வம் மகன் கரன்(33), கும்பகோணம் உள்ளிக்கான் சந்து சேர்ந்த முகமதுரபிக் மகன் தமீம் அன்சாரி(35), நாச்சியார்கோவில் ராமநாதன் நகரை சேர்ந்த பிரபு மகன் தினேஷ்குமார்(27), நாச்சியார்கோவில் ராமநாதன் நகரை சேர்ந்த முருகானந்தம் மகன் விஜய்(20) ஆகிய 6 பேரும் திருவையாறு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர் அவர்களை நீதிபதி ஹரிராம் 6 பேரையும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
BRICS Summit: அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் - ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு
திருவெண்காடு புதன்  கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
திருவெண்காடு புதன்  கோயில் குடமுழுக்கு பெருவிழா: பக்தியில் மெய்சிலிர்க்க தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்..
நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
Embed widget