மேலும் அறிய

சிம் கார்டு முடங்கிவிடும்; டாக்குமென்ட்ஸ் கொடுங்க..! உஷார் மக்களே உஷார்

உங்களிடம் யாராவது, சிம் கார்டு முடங்கிவிடும்; டாக்குமென்ட்ஸ் கொடுங்க.. என்று தொலைபேசியில் பேசினால் உஷாராகிவிடுங்கள் மக்களே. இணைய மோசடிக்கு அளவே இல்லை.

உங்களிடம் யாராவது, சிம் கார்டு முடங்கிவிடும்; டாகுமென்ட்ஸ் கொடுங்க.. என்று தொலைபேசியில் பேசினால் உஷாராகிவிடுங்கள் மக்களே. இணைய மோசடிக்கு அளவே இல்லை.

மர்ம கும்பல் உங்களை இப்படித்தான் அணுகும்..

ஹலோ.. உங்க சிம் கார்டுக்கு தேவையான ஆவணங்கள் பற்றாக்குறையாக இருக்கு. போதிய ஆவணங்கள் இல்லாததால் உங்களுடைய சிம் கார்டு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பிளாக்காகிவிடும். இப்படித்தான் அந்த கும்பல் பேச ஆரம்பிக்கும்.

அவர்களின் எச்சரிக்கைக்கு பயப்படும் சிலர், மோசடி கும்பலிடமே தீர்வு என நினைத்து. கேட்டு தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்வர். 
சிம் கார்டு முடங்கிவிடும் என எச்சரிக்கும் அந்த மோசடி கும்பல், தாங்கள் சொல்லும் செயலியில் ஆவணங்களை பதிவேற்றுமாறு சொல்லும். அதை மட்டும் செய்வதுவிட்டால் அவ்வளவுதான் அவர்களின் வலையில் நீங்கள் விழுந்துவிடுவீர்கள்.

அந்தச் செயலியில் நீங்கள் தகவல்களைப் பதிவேற்றும்போது செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் அல்லது பைனான்சியல் தகவல்களை கமுக்கமாக திருடிக் கொள்கின்றனர். இதனை வைத்து வாடிக்கையாளர்களை மிரட்டும் அந்தக் கும்பல், பண மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும், பணம் சார்ந்த தகவல்கள் கிடைத்துவிட்டால் உடனடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை அபகரித்துக் கொள்கின்றனர். 

சைபர் கொள்ளை..

விரல் நுணியில் என்று இணையதளம் சாத்தியமானதோ அன்றே கயவர்களை அதைக் குறுக்கவழிகளுக்குப் பயன்படுத்துவதை அதிகரித்துக் கொண்டனர். இந்தியாவில் இணையக் கொள்ளை அதிகரித்து வருகிறது. அதிலும், சீனாவிலிருந்து இறங்கும் நபர்கள் இந்தக் கொள்ளையில் வெகுவாக ஈடுபடுகின்றனர். இது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.  

எனவே, இதுபோன்ற போலியான அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என சைபர் பிரிவு போலீஸார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 

அதேபோல், ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற செல்போன் நிறுவனங்களும் இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது எனத் தெரிவித்துள்ள செல்லூலார் ஆப்ரேட்டர்ஸ் அசோஷியேசன், ஆதார், பான் கார்டு போன்ற தகவல்களை புதிய செயலி ஒன்றில் அல்லது லிங்கில் பதிவேற்றக்கூறினால், கண்டிப்பாக அது மோசடி என விளக்கமளித்துள்ளது.
இதில் ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுக்கு அருகாமையில் இருக்கும் உங்கள் செல்போன் நிறுவனத்தின் சர்வீஸ் மையத்தில் இது குறித்து விசாரித்துக் கொள்ளுங்கள்.  

முக்கியமான ஐந்து மணி நேரம்..

இணைவழி குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனியார் நெட்வொர்க் நிறுவனங்களின் ஒத்துழைப்பு  அவசியம். 

புகார்களுக்கு சம்பந்தப்பட்ட  நெட்வொர்க் நிறுவனங்களுக்குத் தகவல் அனுப்பி, டவர் லொக்கேசன் பார்க்கவேண்டும். பேசியவர், கேட்டவர் என, இரு டவர்களின் தகவல்களையும் பெறவேண்டும். அப்போதுதான் குற்றம் புரிந்தவர்கள், பாதிக்கப்பட்டோர்  எங்கே இருந்தனர் என்பதை உறுதி செய்ய முடியும்.  

நெட்வொர்க் நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க முடியும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வெட்வொர்க் நிறுவனத்திடம் இருந்து உரிய தவகல் வருவதில்லை.

போலி வங்கிக் கடன் அட்டை, ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடுவோருக்கு அந்தப் பணம் குறைந்தது 5 மணிநேரத்துக்கு பிறகே செல்லும். அதற்குள் துரிதமாக செயல்பட்டால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பணத்தை மீ்ட்டுத் தர முடியும். இதற்கு நெட்வொர்க் நிறுவனம் துரிதமாக செயல்படவேண்டும். இதற்கு நெட்வொர்க் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என சைபர் குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’  வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’  வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Embed widget