மேலும் அறிய

சிம் கார்டு முடங்கிவிடும்; டாக்குமென்ட்ஸ் கொடுங்க..! உஷார் மக்களே உஷார்

உங்களிடம் யாராவது, சிம் கார்டு முடங்கிவிடும்; டாக்குமென்ட்ஸ் கொடுங்க.. என்று தொலைபேசியில் பேசினால் உஷாராகிவிடுங்கள் மக்களே. இணைய மோசடிக்கு அளவே இல்லை.

உங்களிடம் யாராவது, சிம் கார்டு முடங்கிவிடும்; டாகுமென்ட்ஸ் கொடுங்க.. என்று தொலைபேசியில் பேசினால் உஷாராகிவிடுங்கள் மக்களே. இணைய மோசடிக்கு அளவே இல்லை.

மர்ம கும்பல் உங்களை இப்படித்தான் அணுகும்..

ஹலோ.. உங்க சிம் கார்டுக்கு தேவையான ஆவணங்கள் பற்றாக்குறையாக இருக்கு. போதிய ஆவணங்கள் இல்லாததால் உங்களுடைய சிம் கார்டு இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பிளாக்காகிவிடும். இப்படித்தான் அந்த கும்பல் பேச ஆரம்பிக்கும்.

அவர்களின் எச்சரிக்கைக்கு பயப்படும் சிலர், மோசடி கும்பலிடமே தீர்வு என நினைத்து. கேட்டு தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்வர். 
சிம் கார்டு முடங்கிவிடும் என எச்சரிக்கும் அந்த மோசடி கும்பல், தாங்கள் சொல்லும் செயலியில் ஆவணங்களை பதிவேற்றுமாறு சொல்லும். அதை மட்டும் செய்வதுவிட்டால் அவ்வளவுதான் அவர்களின் வலையில் நீங்கள் விழுந்துவிடுவீர்கள்.

அந்தச் செயலியில் நீங்கள் தகவல்களைப் பதிவேற்றும்போது செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள் அல்லது பைனான்சியல் தகவல்களை கமுக்கமாக திருடிக் கொள்கின்றனர். இதனை வைத்து வாடிக்கையாளர்களை மிரட்டும் அந்தக் கும்பல், பண மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும், பணம் சார்ந்த தகவல்கள் கிடைத்துவிட்டால் உடனடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை அபகரித்துக் கொள்கின்றனர். 

சைபர் கொள்ளை..

விரல் நுணியில் என்று இணையதளம் சாத்தியமானதோ அன்றே கயவர்களை அதைக் குறுக்கவழிகளுக்குப் பயன்படுத்துவதை அதிகரித்துக் கொண்டனர். இந்தியாவில் இணையக் கொள்ளை அதிகரித்து வருகிறது. அதிலும், சீனாவிலிருந்து இறங்கும் நபர்கள் இந்தக் கொள்ளையில் வெகுவாக ஈடுபடுகின்றனர். இது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.  

எனவே, இதுபோன்ற போலியான அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என சைபர் பிரிவு போலீஸார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 

அதேபோல், ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் போன்ற செல்போன் நிறுவனங்களும் இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது எனத் தெரிவித்துள்ள செல்லூலார் ஆப்ரேட்டர்ஸ் அசோஷியேசன், ஆதார், பான் கார்டு போன்ற தகவல்களை புதிய செயலி ஒன்றில் அல்லது லிங்கில் பதிவேற்றக்கூறினால், கண்டிப்பாக அது மோசடி என விளக்கமளித்துள்ளது.
இதில் ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுக்கு அருகாமையில் இருக்கும் உங்கள் செல்போன் நிறுவனத்தின் சர்வீஸ் மையத்தில் இது குறித்து விசாரித்துக் கொள்ளுங்கள்.  

முக்கியமான ஐந்து மணி நேரம்..

இணைவழி குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனியார் நெட்வொர்க் நிறுவனங்களின் ஒத்துழைப்பு  அவசியம். 

புகார்களுக்கு சம்பந்தப்பட்ட  நெட்வொர்க் நிறுவனங்களுக்குத் தகவல் அனுப்பி, டவர் லொக்கேசன் பார்க்கவேண்டும். பேசியவர், கேட்டவர் என, இரு டவர்களின் தகவல்களையும் பெறவேண்டும். அப்போதுதான் குற்றம் புரிந்தவர்கள், பாதிக்கப்பட்டோர்  எங்கே இருந்தனர் என்பதை உறுதி செய்ய முடியும்.  

நெட்வொர்க் நிறுவனம் தரும் தகவல் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தொடங்க முடியும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வெட்வொர்க் நிறுவனத்திடம் இருந்து உரிய தவகல் வருவதில்லை.

போலி வங்கிக் கடன் அட்டை, ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடுவோருக்கு அந்தப் பணம் குறைந்தது 5 மணிநேரத்துக்கு பிறகே செல்லும். அதற்குள் துரிதமாக செயல்பட்டால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பணத்தை மீ்ட்டுத் தர முடியும். இதற்கு நெட்வொர்க் நிறுவனம் துரிதமாக செயல்படவேண்டும். இதற்கு நெட்வொர்க் நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியம் என சைபர் குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

கல்யாணக் கனவு கலைந்தது! பாலத்தின் தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப மரணம்!
கல்யாணக் கனவு கலைந்தது! பாலத்தின் தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப மரணம்!
தாம்பரம் அருகே தலைமை காவலரை வெட்டிய ‘ஏ-பிளஸ்’ ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!
தாம்பரம் அருகே தலைமை காவலரை வெட்டிய ‘ஏ-பிளஸ்’ ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
"திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
விஜய் கொடுத்த ஐடியா.! ஓகே சொன்ன வைகோ- கடைசியில் டிமிக்கி கொடுத்த MLA-க்கள்- நடந்தது என்ன.?
விஜய்யை நம்பி மொத்தத்தையும் இழந்த வைகோ.! டிமிக்கி கொடுத்த எம்எல்ஏக்கள்- நடந்தது என்ன.?
PT Arasakumar: ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
ரூ.100 கோடியை சுருட்டிய திமுக நிர்வாகி..! தனியார் பள்ளிகளுக்கு விபூதி - நடந்தது என்ன? சிக்கியது எப்படி?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Tata Nexon: பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
பஞ்ச் விலையில் 24KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் டீசல் எஸ்யுவி - ரூ.8200 EMI திட்ட முழு விவரங்கள்
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
தமிழகத்தை பற்றி தெரியாதவர் தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதியா.? சிஎம் விஜய்க்கு எதிராக சீறிய CPI
Embed widget