மேலும் அறிய

Crime: ஒரு வருடத்திற்கு மேலாக லிவ்-இங் டு கெதர்..! காதலி மீது தீராத சந்தேகம்... அடித்தே கொன்ற காதலன்..!

பெங்களூரில் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் தன்னுடன் இருந்த  பெண்ணை காதலர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரில் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் தன்னுடன் இருந்த பெண்ணை காதலர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லிவ் இங் டு கெதர்:

பெங்களூரில் சந்தோஷ் சுமி என்ற நபர் கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ண குமாரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருட காலமாக இருவரும் தனியாக வீடு எடுத்து லிவ்-இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனியார் ஸ்பா ஒன்றில் வேலை பார்த்து வந்த சந்தோஷ் தமி, அழகு சாதன நிலையத்தில் ஒன்றில் வேலை பார்த்து வரும் கிருஷ்ண குமாரி மீது காதல் கொண்டுள்ளார். இருவரும் ஒரே துறையில் வேலை செய்து வந்தததால் நட்பாக பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி தற்போது லிவ்-இன் டுகெதர் முறையில் இருந்து வந்துள்ளனர். 

பல பெண்களுடன் தொடர்பு:

இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த போதிலும் சந்தோஷ் தமி பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், பல பெண்களின் செல்போன் நம்பர்களை பெற்றுகொண்டு அவர்களுடன் காதல் ரீதியாகவும், ஆபாச ரீதியாகவும் நெருங்கி பழகியுள்ளார். அதிலும், குறிப்பாக கிருஷ்ண குமாரியின் நெருங்கிய தோழிக்கு கடந்த சில நாட்களாக சந்தோஷ் தொடர்ந்து தனது செல்போனிலிருந்து காதல் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.

ரத்த வெள்ளத்தில் காதலி:

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்த கையோடு தனது அறையில் சந்தோஷ் மது அருந்தி, கிருஷ்ண குமாரியின்  தோழிக்கு பல மெசேஜ்கள் அனுப்பிவிட்டு வீடியோ கால் அட்டெண்ட் செய்யும்படி தொந்தரவு செய்துள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண் அருகில் கிருஷ்ண குமாரி உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து கோவமடைந்த கிருஷ்ண குமாரி தனது காதலனின் இவ்வாறான செயல்களை கண்டு பணியில் இருந்து வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார். 

வீட்டுக்கு சென்ற சில மணி நேரத்திலேயே சந்தோஷ் தொலைபேசியில் இருந்து கிருஷ்ணகுமாரி தோழிக்கு வீடியோ கால் ஒன்று சென்றுள்ளது. அந்த வீடியோ காலை ஆன் செய்து பார்த்தபோது கிருஷ்ணகுமாரியை சந்தோஷ் கடுமையாக தாக்கியது தெரியவந்தது. மேலும், கிருஷ்ணகுமாரியில் தலையை சந்தோஷ் கொடூரமாக இடித்துள்ளார். சில வினாடிகளில் வீடியோ கால் துண்டிக்கப்பட, பதறிப்போன அந்த பெண் தனது நண்பர்களுடன் கிருஷ்ண குமாரி நிலையை சொல்லி அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த அறையில் கிருஷ்ணகுமாரி ரத்த வெள்ளத்தில் படுக்கையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். 

சந்தேக காதலன்:

கொடூரமாக தாக்கிவிட்டு இதை எதையும் கண்டுகொள்ளாமல் சந்தோஷ் மது குடித்துள்ளார். எதற்காக இப்படி செய்தாய் என்று கேள்வி கேட்டபோது, கிருஷ்ணகுமாரி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தால் அது குறித்து கேட்டபோது எனக்கு ஒழுங்கான பதில் எதுவும் சொல்லவில்லை. கோவத்தில் இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இரத்த வெள்ளத்தில் இருந்த கிருஷ்ணகுமாரியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரத்தப்போக்கு அதிகளவில் வெளியேறியதால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் பீமாசங்கர் தெரிவிக்கையில், “கொலை செய்யப்படுவதற்கு முன்பு, கிருஷ்ணகுமாரி இரவு 9.45 மணியளவில் தனது தோழிக்கு போன் செய்து சண்டை பற்றி தெரிவித்தார். அரை மணி நேரம் கழித்து அவர் நண்பருக்கு வீடியோ கால் செய்தார், அங்கு அவர் தனது காதலன் கிருஷ்ணகுமாரியைத் தாக்குவதைப் பார்த்தார். நண்பர் ஒருவர் வந்து பார்த்தபோது, ​​கிருஷ்ணகுமாரி ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்தார். எதிர்ப்பட்ட போது, ​​சந்தோஷ் தன்னுடன் உறவில் இருந்தும் அவள் வேறு ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்ததால் தான் அவளை அடித்ததாகக் கூறியுள்ளார். நேபாளத்தில் உள்ள கிருஷ்ணகுமாரியின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget