மேலும் அறிய

Bomb Threat : பெங்களூர் பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்..! 4 நாட்களில் 15வது பள்ளி..! அதிர்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள்..!

பெங்களூரில் 15வது பள்ளியாக பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்ததால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உடனே பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ள சில பள்ளிகளுக்கு கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரில் உள்ள பிஷப்காட்டன் மகளிர் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ந் தேதி விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை பள்ளி நிர்வாகம் நேற்றுதான் பார்த்துள்ளது.

பள்ளி நிர்வாகத்திற்கு இ-மெயில் மூலமாக இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், பிஷப்காட்டன் மகளிர் பள்ளி வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான 15வது பள்ளி ஆகும்.


Bomb Threat : பெங்களூர் பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்..! 4 நாட்களில் 15வது பள்ளி..! அதிர்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள்..!

இந்த மின்னஞ்சலை கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தது. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் வெளியே தெரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர்.

மேலும், அவர்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால், நேற்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை பிஷப்காட்டன் பள்ளி அமைந்துள்ள ரெசிடன்சி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளிக்கு சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இரண்டு மணி நேரம் தீவிர சோதனை நடத்தினார். ஆனாலும், எந்த மர்மமான மற்றும் வெடிகுண்டு கிடைக்கவில்லை.


Bomb Threat : பெங்களூர் பிஷப்காட்டன் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல்..! 4 நாட்களில் 15வது பள்ளி..! அதிர்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள்..!

ஒரு மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடந்த 4 நாட்களில் மட்டும் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்புவது யார்? என்பது இதுவரை தெரியாத நிலையில் போலீசார் 5 சிறப்பு குழுவை அமைத்துள்ளதாக பெங்களூர் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், பெங்களூர் சைபர் கிரைம் காவல்துறையினர் ஒவ்வொரு பள்ளிக்கும் வந்த மின்னஞ்சல்களின் முகவரி, ஐ.பி. முகவரி, இடம் ஆகியவற்றின் மூலம் குற்றவாளிகளை நெருங்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு மிகவும் அச்சம் கொண்டுள்ளனர்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget