மேலும் அறிய

வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள்; மன உளைச்சலில் தற்கொலை செய்த முதியவர்!

வங்கியில் வாங்கிய கடனுக்கான அசல் மற்றும் வட்டியைச் செலுத்தாமல் இருந்ததால், வங்கி நிர்வாகம் நவநீதம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார் கஜபதி.

சென்னை மாதாவரத்தில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச்செலுத்தவில்லை எனக்கூறி வங்கி அதிகாரிகள் சீல் வைத்ததால் மனமுடைந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கந்துவட்டியில் ஏற்படும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால் சென்னையில் நிகழ்ந்துள்ள சம்பவம் சற்று வித்தியாசமானது என்று தான் கூற வேண்டும். கந்துவட்டிக்காரர் வட்டிக்கு பணம் கொடுக்கும் போது கையெழுத்திட்டு வாங்கிய பத்திரத்தை வங்கியில் வைத்துக் கடன் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவரம் பஜார் தெருவைச்சேர்ந்தவர் 64 வயதான கஜபதி. இவர் தனது மனைவி சண்முக சுந்தரி மற்றும் தன்னுடைய தாய் நவநீதம்மாளுடன் வசித்துவந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் வித்யா என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றார் நவநீதம்மாள். அப்போது தன்னுடைய வீட்டை அடமானம் வைப்பது போல்  கடன் கொடுத்த  ஒரு பத்திரத்தில் நவநீதம்மாளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் கொடுத்துள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக கடனைத்திருப்பி செலுத்தி வந்த நிலையிலும் கடன் கொடுத்த வித்யா, கஜபதியின் வீட்டுப்பத்திரத்தை நவநீதம்மாளுக்கு தெரியாமல் தாட்கோ வங்கியில் வைத்து ரூபாய் 9.5 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

  • வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள்; மன உளைச்சலில் தற்கொலை செய்த முதியவர்!

இந்நிலையில் தான் கடந்த 2009 ஆம் ஆண்டு இதுப்பற்றி தெரிந்துக்கொண்ட  கஜபதி, தன் தாயை ஏமாற்றி கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதோடு, வங்கியிலும் கடன் பெற்றுள்ளார் என வித்யா மீது மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தாார். இதனையடுத்து வழக்கை விசாரித்த போலீசார், வித்யா மீது மோசடி வழக்குப்பதிவு செய்ததோடு, கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் வீத்யா வீட்டுப்பத்திரத்தை வாங்கி வங்கியில் வாங்கிய கடனுக்கான அசல் மற்றும் வட்டியைச் செலுத்தாமல் இருந்தமையால், வங்கி நிர்வாகம் நவநீதம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார் கஜபதி.

இதனையடுத்து தான்  வங்கி அதிகாரிகள் நேற்று முன்தினம் கஜபதிக்கு சொந்தமான கடை மற்றும் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதனால் மனமுடைந்த கஜபதி நேற்று காலை தீடிரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த மாதவரம் காவல்நிலைய போலீசார் தற்கொலை செய்து கொண்ட கஜபதியின் உடலைக் கைப்பற்றியதோடு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

  • வீட்டிற்கு சீல் வைத்த வங்கி அதிகாரிகள்; மன உளைச்சலில் தற்கொலை செய்த முதியவர்!

ஆனால் அதற்கு முன்னதாக உயிரிழந்த கஜபதியின் உறவினர்கள், ஏற்கனவே வங்கியில் மோசடி வழக்கு விசாரணையில் இருக்கும் போது, எப்படி வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும் என கஜபதியின் உடலை எடுக்க விடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
Rs.2000 for TN Women: மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்; வாக்குறுதிகளை அள்ளி வீசிய EPS; இன்னும் என்னென்ன.?
மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்; வாக்குறுதிகளை அள்ளி வீசிய EPS; இன்னும் என்னென்ன.?
ABP Premium

வீடியோ

ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
Rs.2000 for TN Women: மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்; வாக்குறுதிகளை அள்ளி வீசிய EPS; இன்னும் என்னென்ன.?
மகளிருக்கு ரூ.2,000, ஆண்களுக்கு இலவச பயணம்; வாக்குறுதிகளை அள்ளி வீசிய EPS; இன்னும் என்னென்ன.?
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
காளைகளை அடக்குங்க.. அரசு வேலையில் சேருங்க- ஜல்லிக்கட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு
DMK CONGRESS TVK: தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
தவெகவிற்கு பல்டியா.? டெல்லியில் திடீர் ட்விஸ்ட்- திமுகவிற்கு கெடு விதிக்க தயாராகும் ராகுல்.?
Gold And Silver Rate Today: மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
மீண்டும் அதிகரித்த தங்கம், வெள்ளி விலை.! ஒரே நாளில் ரூ.4000 உயர்வு- நகைப்பிரியர்களுக்கு ஷாக்
Chennai Power Cut: சென்னையில திங்கட்கிழமை(19.01.2026) எந்தெந்த ஏரியால பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னையில திங்கட்கிழமை(19.01.2026) எந்தெந்த ஏரியால பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget