மேலும் அறிய

தஞ்சாவூர் : ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி, பணம் பறிக்க நூதன முயற்சி செய்த கும்பல் : பெண் ஒருவர் கைது!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற  பெண் கைது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற கும்பலைச் சேர்ந்த பெண் ஒருவரை சைபர் க்ரைம் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான அப்பெண்ணின் கணவர் தலைமறைவாக உள்ளார்.  போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்கள் சிலரை கடந்த இருவாரங்களுக்கு முன்னர் ஃபோனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் தன்னை தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். அதன் பின்னர், அவர்களை ஒரு சில அரசு திட்டங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும், மேற்படி திட்டத்திற்காக தலா ரூ50,000 அனுப்புமாறும் கூறி மேற்படி நபர்களுக்கு வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை அனுப்பியுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த டாக்டர்கள் இதுபற்றி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அத்தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் இதுபற்றி விசாரணை நடத்தி சம்பந்தபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.


தஞ்சாவூர் : ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி, பணம் பறிக்க நூதன முயற்சி செய்த கும்பல் : பெண் ஒருவர் கைது!

மேற்படி நபர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டு மொபைல் எண்கள், ஒரு வங்கி கணக்கு எண் ஆகியவற்றை போலீஸாரிடம் கொடுத்த மாவட்ட ஆட்சியர், இதுபற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அவரது புகாரின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (40) என்பவரின் வங்கிக் கணக்கு என்பதும், அதே பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அத் தனிப்படை போலீஸார் கோயம்புத்தூருக்கு விரைந்து ரெஜினாவை பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட ரெஜினா அதே பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருவதும், மோசடி கும்பலால் அவர் இச்சம்பவத்தில், பகடைக் காயாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது .தஞ்சாவூர் : ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி, பணம் பறிக்க நூதன முயற்சி செய்த கும்பல் : பெண் ஒருவர் கைது!

போலீஸாரின் தொடர் புலன் விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருவள்ளுர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் (எ) சந்தான பாரதி (65) மற்றும் அவரது மனைவி ரீட்டா பபியா (50) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, ரீட்டா பபியாவை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீஸார் மடக்கிப் பிடித்து, அவரை ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல், கூட்டுச் சதி ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66டி ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சியில் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.  காவல்துறையின் விசாரணையில் ரீட்டாவும் அவரது கணவர் சந்தான பாரதியும் சேர்ந்து திருச்சி, நாமக்கல், வேலூர், நீலகிரி, கரூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களின் பெயரை பயன்படுத்தி அம்மாவட்டங்களில் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர் என்பதும், சந்தான பாரதி ஏற்கெனவே இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள சந்தான பாரதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவரை கைது செய்யப்படுவார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget