மேலும் அறிய

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றவர்களின் செல்போனை திருடிய நபர் அடித்துக் கொலை செய்ததாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றமும் அதனை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருவது வாடிக்கை. இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவில் பங்கேற்க பாதயாத்திரையாக வேளாங்கண்ணி புறப்பட்டு வந்துள்ளனர்.


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

அப்போது அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் கருவிழுந்தநாதபுரம் அருகே ஆக்கூர் முக்கூட்டு சாலை ஓரம் நேற்று முன்தினம் இரவு படுத்து உறங்கியுள்ளனர். அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர்களது பைகளில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஒரு நபர் திருடியிருக்கிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விழித்துக்கொண்ட ஒருவர் தங்கள் பைகளிலுள்ள செல்போனை திருடுவதை கண்டு நண்பர்களை எழுப்ப அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிய உள்ளார். உடனடியாக தப்பியோடி நபரை விரட்டிப்பிடித்து திருடப்பட்ட செல்போன், பவர் பேங்க் ஆகியவற்றை திரும்ப பெற்றதோடு அந்த நபரை அனைவரும் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

மேலும் இவர்களுக்கு பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த நண்பர்களுக்கும் போன் செய்து, எங்கள் செல்போனை திருடிய ஒருத்தரை பிடித்து வைத்துள்ளோம் என்று சொல்ல விரைந்து வந்த நண்பர்களும் செல்போன் திருடிய நபரை அவர்கள் பங்குக்கு பலமாக அடித்து உதைத்துள்ளனர். அதை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அடித்ததை மறைத்து "எங்கள் செல்போனை திருடிய நபரை பிடித்துவைத்திருக்கிறோம்" என்று சொல்ல அங்கு விரைந்த செம்பனார் கோயில் காவல்துறையினர் தாக்குதலுக்குள்ளான நபரை விசாரித்தபோது "தனது பெயர் இளங்கோவன் என்றும் கீழத்தெரு, மேலப்பெரும்பள்ளம் கிராமம் தான் எனது சொந்த ஊர் என்றும், தன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல் சேர்ந்து அடித்து உதைத்தனர் என்று சொல்லிவிட்டு மயக்கமடைந்துள்ளார். 


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

மயக்கமடைந்த இளங்கோவனை உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த செம்பனார்கோயில் காவல்துறையினர் இளங்கோவன் உயிரிழந்ததை சொல்லாமல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த அந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன நடந்தது? என்று காவல்துறையினர் விபரம் கேட்டுள்ளனர். அவர்களும் இளங்கோவன் உயிரிழந்தது அறியாமல் தாங்கள் இருக்கும் இடத்தை கூறியுள்ளார். 


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் இளங்கோவனை அடித்து கொலை செய்ததாக கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 18 வயதான வெற்றிவேல், 19 வயதான பொன்னிவளவன், 21 வயதான பாலசுப்ரமணியம், 20 வயதான தினேஷ், 19 வயதான சுகுமார் மற்றும் தென்னாம்பாக்கம் 20 வயதான முத்து ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பாதயாத்திரையாக நடந்து சென்றவர்கள் தங்கள் செல்போனை திருடிய நபரை அடித்து கொலை செய்ததாக கைதாகி சிறை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்போன் திருடி கொலையான இளங்கோவன் திருமணமானவர் என்பதும், ஆடு திருடுவது, செல்போன் திருடுவது தான் அவரது முழுநேர தொழில் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget