மேலும் அறிய

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்றவர்களின் செல்போனை திருடிய நபர் அடித்துக் கொலை செய்ததாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றமும் அதனை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருவது வாடிக்கை. இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவில் பங்கேற்க பாதயாத்திரையாக வேளாங்கண்ணி புறப்பட்டு வந்துள்ளனர்.


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

அப்போது அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் கருவிழுந்தநாதபுரம் அருகே ஆக்கூர் முக்கூட்டு சாலை ஓரம் நேற்று முன்தினம் இரவு படுத்து உறங்கியுள்ளனர். அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர்களது பைகளில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஒரு நபர் திருடியிருக்கிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக விழித்துக்கொண்ட ஒருவர் தங்கள் பைகளிலுள்ள செல்போனை திருடுவதை கண்டு நண்பர்களை எழுப்ப அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிய உள்ளார். உடனடியாக தப்பியோடி நபரை விரட்டிப்பிடித்து திருடப்பட்ட செல்போன், பவர் பேங்க் ஆகியவற்றை திரும்ப பெற்றதோடு அந்த நபரை அனைவரும் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

மேலும் இவர்களுக்கு பின்னால் நடந்து வந்துகொண்டிருந்த நண்பர்களுக்கும் போன் செய்து, எங்கள் செல்போனை திருடிய ஒருத்தரை பிடித்து வைத்துள்ளோம் என்று சொல்ல விரைந்து வந்த நண்பர்களும் செல்போன் திருடிய நபரை அவர்கள் பங்குக்கு பலமாக அடித்து உதைத்துள்ளனர். அதை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அடித்ததை மறைத்து "எங்கள் செல்போனை திருடிய நபரை பிடித்துவைத்திருக்கிறோம்" என்று சொல்ல அங்கு விரைந்த செம்பனார் கோயில் காவல்துறையினர் தாக்குதலுக்குள்ளான நபரை விசாரித்தபோது "தனது பெயர் இளங்கோவன் என்றும் கீழத்தெரு, மேலப்பெரும்பள்ளம் கிராமம் தான் எனது சொந்த ஊர் என்றும், தன்னை வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற ஆறு பேர் கொண்ட கும்பல் சேர்ந்து அடித்து உதைத்தனர் என்று சொல்லிவிட்டு மயக்கமடைந்துள்ளார். 


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

மயக்கமடைந்த இளங்கோவனை உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். அடுத்த சில மணி நேரத்தில் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த செம்பனார்கோயில் காவல்துறையினர் இளங்கோவன் உயிரிழந்ததை சொல்லாமல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த அந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து எங்கே இருக்கிறீர்கள்? என்ன நடந்தது? என்று காவல்துறையினர் விபரம் கேட்டுள்ளனர். அவர்களும் இளங்கோவன் உயிரிழந்தது அறியாமல் தாங்கள் இருக்கும் இடத்தை கூறியுள்ளார். 


வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்ற 6 இளைஞர் கொலை வழக்கில் கைது

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் இளங்கோவனை அடித்து கொலை செய்ததாக கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 18 வயதான வெற்றிவேல், 19 வயதான பொன்னிவளவன், 21 வயதான பாலசுப்ரமணியம், 20 வயதான தினேஷ், 19 வயதான சுகுமார் மற்றும் தென்னாம்பாக்கம் 20 வயதான முத்து ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு பாதயாத்திரையாக நடந்து சென்றவர்கள் தங்கள் செல்போனை திருடிய நபரை அடித்து கொலை செய்ததாக கைதாகி சிறை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்போன் திருடி கொலையான இளங்கோவன் திருமணமானவர் என்பதும், ஆடு திருடுவது, செல்போன் திருடுவது தான் அவரது முழுநேர தொழில் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Rahul Gandhi: தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
தேர்தல் சீர்திருத்தம்; கேள்விகளுக்கு பதில் இல்லை; அமித் ஷா மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டு என்ன.?
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Embed widget