மேலும் அறிய

பூட்டிய வீட்டிக்குள் நள்ளிரவு பூஜை... நடுங்கிப் போன அண்டைவாசிகள்... திரண்டு வந்த போலீசார்!

பகலில் வீட்டைச் சுத்தம் செய்யாமல் நள்ளிரவில் ஏன் வீட்டைச் சுத்தம் செய்தீர்கள்? புதையல் எடுப்பதற்காக குழந்தையை நரபலி கொடுக்க ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டதா ? என விசாரணை.

அரக்கோணம் அருகே லாரி ஓட்டுநர் வீட்டில் பள்ளம் தோண்டி நள்ளிரவில்  பூஜை செய்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது . புதையல் எடுப்பதற்காகப்  பூஜை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
 
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் அருகே  உள்ள கிழவனம் பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 57 ) லாரி டிரைவர்  . இவர் கிழவனத்தில் தனக்குச்  சொந்தமான பூர்விக வீட்டைக்  கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு  பூட்டிக்கொண்டு தற்போது வெளியூரில் வசித்து வருகிறார்.
 

பூட்டிய வீட்டிக்குள் நள்ளிரவு பூஜை... நடுங்கிப் போன அண்டைவாசிகள்... திரண்டு வந்த போலீசார்!
 
 இந்த நிலையில் கிழவனம் கிராமத்தில்  பூட்டி கிடந்த வீட்டிற்கு நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத சில நபர்களுடன்  வந்த ஆசீர்வாதம் பூட்டி கிடந்த வீட்டைத் திறந்து உள்ளே சென்று பூஜைகள் செய்தனர். 
இரவு நேரத்தில் திடீரென பூட்டியிருக்கும் வீட்டில் மணி சத்தம் மற்றும் மந்திரம் உச்சரிக்கும் சத்தம் கேட்டு சந்தேகத்தில் அந்த பகுதி மக்கள் ஆசீர்வாதம் வீட்டிற்குச் சென்று பார்த்தனர் .
 
அப்பொழுது  வீட்டிற்குள் 2 அடி ஆழத்திற்குப் பள்ளம் தோண்டப்பட்டது அவர்களுக்குத் தெரிய வந்தது . நள்ளிரவில் பூட்டிக் கிடந்த வீட்டைத் திறந்து பூஜைகள் நடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
 

பூட்டிய வீட்டிக்குள் நள்ளிரவு பூஜை... நடுங்கிப் போன அண்டைவாசிகள்... திரண்டு வந்த போலீசார்!
 
வீட்டிற்குள் புதையல் இருக்கலாம் அதற்காகப்  பள்ளம் தோண்டி பூஜை செய்கிறாரா  ? என்று சந்தேகமடைந்தனர்.
 
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பூஜையில் ஈடுபட்ட ஆசீர்வாதம் அவருடன் இருந்த சாமியார் உள்ளிட்டோரை  போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் .
 
மேலும் அவரது வீட்டிலிருந்த பூஜை சாமான்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர் . அரக்கோணம் தாலுகா போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆசீர்வாதம் தனக்கு மூன்று மகள்கள் உள்ளதாகவும் . அதில் அவரது 3 வது சுலோச்சனாவின்  கணவர் பாண்டியன் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து விட்டார் எனவும் . அதனால் மகளை தனக்குச் சொந்தமான பூர்விக  வீட்டில் தங்க வைப்பதற்காகக் கூலி ஆட்களை வைத்து வீட்டைச் சுத்தம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் வீடு ஆண்டு கணக்கில் பூட்டிக் கிடந்ததால் பேய் இருக்கலாம் என்று மந்திரவாதி ஒருவர் கூறினார் அதனால் நள்ளிரவில் பூஜை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
 
 

பூட்டிய வீட்டிக்குள் நள்ளிரவு பூஜை... நடுங்கிப் போன அண்டைவாசிகள்... திரண்டு வந்த போலீசார்!
பகலில் வீட்டைச் சுத்தம் செய்யாமல் நள்ளிரவில் என் வீட்டைச் சுத்தம் செய்தீர்கள்? புதையல் எடுப்பதற்காகக் குழந்தையை நரபலி கொடுக்க ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டதா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுராத்திரி குழியை தோண்டுனது ஒரு குத்தமா என குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற காத்திருக்கிறார் ஆரோக்கியம். 
 

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
ஒரே சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ்! Numeros Diplos இ ஸ்கூட்டர் விலை, தரம் - எப்படி?
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
Embed widget