மேலும் அறிய

Andhra Pradesh: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பள்ளிச் சிறுவர்கள் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஆந்திராவில் சோகம்

ஆந்திராவில் கிருஷ்ணா நதியின் கால்வாயில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணா மாவட்டம். இந்த மாவட்டத்தில் சந்தர்லபடு மண்டல் பகுதியில்
எத்துரூ என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள  மக்ளூரி சன்னி ( வயது 12) கர்லாபாலா யேசு (வயது 12) ஜத்தி அஜய்( வயது 12) மயிலா ராகேஷ் ( வயது 11)  மற்றும் குராஜாலா சரண் ( வயது 14) ஆகிய 5 பேரும் கடந்த திங்கள்கிழமை மதியம் அவரவர் வீடுகளில் இருந்து 2 மணியளவில் வெளியில் சென்றுள்ளனர்.

மாலையை கடந்து இரவு நேரமாகியும் இவர்கள் 5 பேரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பவில்லை. இதனால், பதற்றமடைந்த அவர்களது பெற்றோர்கள் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போதுதான் 5 சிறுவர்களும் மாயமாகி இருப்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக, அவர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


Andhra Pradesh: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பள்ளிச் சிறுவர்கள் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஆந்திராவில் சோகம்

மேலும், அந்த கிராமத்தில் உள்ள முக்கிய நீர் ஆதாரமான கால்வாயில் அந்த 5 சிறுவர்களின் ஆடைகளையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கால்வாயில் அதிகளவில் நீர் சென்றதால் மாணவர்கள் நீரில் மூழ்கி இருப்பார்களோ, அல்லது கால்வாயில் அடித்துச் சென்றிருப்பார்களோ என்ற அச்சத்தில் அப்பகுதியைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உள்பட பலரும் கால்வாய் நீரில் இறங்கி தீவிரமாக தேடினர்.  

இந்த நிலையில், நேற்று எத்துரூ கிராமத்தில் உள்ள முன்னெரு கால்வாயில் சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசாரின் விசாரணையில் முன்னேரு கால்வாயில் மிதந்த சடலங்கள் காணாமல் போன 5 சிறுவர்களின் உடல் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சடலங்களை மீட்ட போலீசார் 5 சிறுவர்களின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்த மக்ளூரி சன்னி, யேசு மற்றும் அஜய் இருவரும் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். ராகேஷ் ஆறாம் வகுப்பும், சரண் 9ம் வகுப்பும் படிக்கின்றனர்.


Andhra Pradesh: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பள்ளிச் சிறுவர்கள் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு - ஆந்திராவில் சோகம்

உயிரிழந்த 5 சிறுவர்களின் பெற்றோர்களும் அப்பகுதியில் விவசாய கூலிகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ. மோண்டிதொகா ஜெகன் மோகன ராவ் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்து, இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அவரவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 ஆயிரம் இழப்பீடு வழங்கினார். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget