மேலும் அறிய

காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?

25 வயதான ஏர் இந்தியா விமானி ஒருவர் மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது காதலன் ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

ஏர் இந்தியா நிறுவன பெண் விமானி ஸ்ருஷ்டி துளி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் காதலர் ஆதித்ய பண்டிட் கைது செய்யப்பட்டுள்ளார். 

அசைவ உணவுப் பழக்கத்தை கைவிடுமாறு மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

அந்தேரியின் மரோல் பகுதியில் உள்ள கனகியா மழைக்காடு கட்டிடத்தில் உள்ள அவரது வாடகை குடியிருப்பில் திங்களன்று சிருஷ்டி துலி என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அன்றைய தினம் அவர் டேட்டா கேபிளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. 

இந்நிலையில்தான் அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காதலன் ஆதித்யா பண்டிட் (27) கைது செய்யப்பட்டுள்ளார். 

பொவாய் காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “துலியின் உறவினர் கொடுத்த புகாரில், பண்டிட் துலியை பொது இடங்களில் அடிக்கடி துன்புறுத்தி அவமானப்படுத்தியதாகவும் துலியின் உணவுப் பழக்கத்தை மாற்றவும், அசைவ உணவை உட்கொள்வதை நிறுத்தவும் பண்டிட் அழுத்தம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், “திங்கள் கிழமை துலி பண்டிட்டுக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் துலி தங்கியிருந்த பிளாட்டுக்கு வந்துள்ளார். கதவு பூட்டியிருந்ததை கண்டு அங்கிருந்த செக்யூரிட்டியிடம் மாற்று சாவி வாங்கி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது துலி டேட்டா கேபிளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. 

அதிர்ச்சியடைந்த பண்டிட் அவரை மீட்டு அந்தேரியில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” எனக் கூறினார். 

துலி உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மும்பையில் வசித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பைலட் படிப்பைத் தொடரும் போது இருவரும் சந்தித்து காதலித்தது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில்தான் பண்டிட் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நவம்பர் 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget