நெல்லை : கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் மீட்கப்பட்ட பெண் உடல்.. தீவிர விசாரணை
மக்கள் கூறிய தகவலை கேட்டு சுடலைக் கண்ணு அதிர்ச்சி அடைந்துள்ளார்,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலை கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைக் கண்ணு, இவரது மனைவி மாதா, வயது 50, மாதா குளத்து வேலைக்கு செல்வது வழக்கம், இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நீண்ட நேரமாகியும் மாதா வீட்டுக்கு வராதததால் அவரது கணவர் கவலையுடன் பல இடங்களில் தேடி பார்த்து உள்ளார், இரவு முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்துள்ளார், இந்த நிலையில் ஊருக்கு வெளியே குளத்தின் அருகில் முட்புதரின் நடுவே மாதா கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்து உள்ளார், அப்பகுதி மக்கள் கூறிய தகவலை கேட்டு சுடலைக் கண்ணு அதிர்ச்சி அடைந்துள்ளார்,

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல்துறையினர் மாதாவின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், முன்னதாக இறந்து கிடந்த மாதாவின் உடல் நிர்வாண கோலத்தில் கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் கிடந்து உள்ளார், இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாதாவை மர்ம நபர் யாரோ அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது, மேலும் நேற்று வழக்கம்போல் மாதா வேலையை முடித்து விட்டு அருகே உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார்.

குளித்து விட்டு வரும் வழியில், அருகே உள்ள முட்புதரில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் மாதாவை கட்டையால் தாக்கி முட்புதர் உள்ளே இழுத்து சென்றுள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த துணியை கிழித்து கை, கால், வாய்களை கட்டிய நிலையில் நிர்வாண நிலையில் கிடந்து உள்ளார், இவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது கை கால்களை கட்டி கொலை செய்துவிட்டு நிர்வாண நிலையில் போட்டு சென்றனரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், தடயவியல் துறையினரும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்றது.

மோப்ப நாய் சிறிது தூரம் சென்று மீண்டும் அதே இடத்திற்கு திரும்பி வந்தது, கொலை நடந்த இடத்தில் உள்ள பொருட்களைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், கொலை நடந்த இடத்திற்கு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார். இக்கொலை குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண் ஒருவரை கை கால்களை கட்டி மர்மமான முறையில் கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Before You Go
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















