மேலும் அறிய

ஆரவல்லி மலைப்பகுதியில் சூட்கேஸில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள்.. ஷ்ரத்தா வழக்குடன் தொடர்புடையதா?

கைவிடப்பட்ட சூட்கேஸ் பற்றிய தகவலைப் பெற்ற இரண்டு குற்றப்பிரிவு குழுக்கள் மற்றும் ஒரு தடயவியல் குழு வியாழக்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

ஹரியானாவின் ஆரவல்லி மலைப் பகுதியில் ஒரு டிராலி பையில் இருந்து மனித உடலின் பாகங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது ஷ்ரத்தா வழக்குடன் தொடர்புடையதாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூட்கேஸில் உடல் பாகங்கள்

கொடூரமான ஷ்ரத்தா கொலை வழக்கின் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நேற்று (நவம்பர் 24), ஃபரிதாபாத்தின் சூரஜ்கண்டில் உள்ள பாலி சாலைக்கு அருகிலுள்ள ஆரவல்லி மலைப் பகுதியில் ஒரு டிராலி பையில் இருந்து மனித உடலின் பாகங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கைவிடப்பட்ட சூட்கேஸ் பற்றிய தகவலைப் பெற்ற இரண்டு குற்றப்பிரிவு குழுக்கள் மற்றும் ஒரு தடயவியல் குழு வியாழக்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

ஆரவல்லி மலைப்பகுதியில் சூட்கேஸில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள்.. ஷ்ரத்தா வழக்குடன் தொடர்புடையதா?

வேறு இடத்தில் செய்யப்பட்ட கொலை

அந்த நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அந்த இடத்தில் சடலத்தின் ஒரு பகுதியை வீசியிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். "பரிதாபாத்தின் சூரஜ்கண்டில் உள்ள வனப்பகுதியில் நேற்று உடல் உறுப்புகளுடன் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. முதல் பார்வையில், ஒரு நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாத வகையில் உடலின் ஒரு பகுதி இங்கு வீசப்பட்டதாகத் தெரிகிறது" என்று ஃபரிதாபாத் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் சுபே சிங் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்: இன்னும் சிங்கிளாக இருப்பது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளித்த அதர்வா!

சுற்றிவளைத்து போலீசார்

சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்ட வனப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் விசாரணையை மேற்கொண்டனர், "உடல் பாகங்கள் பிளாஸ்டிக் பை மற்றும் ஒரு சாக்கு பையில் சுற்றப்பட்டிருந்தன. சூட்கேஸ் அருகே உடைகள் மற்றும் பெல்ட் மீட்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள வனப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது", என சுபே சிங் தெரிவித்தார். தடயவியல் குழு ஆய்வு செய்த பின்னர் சூரஜ்கண்ட் காவல் நிலைய அதிகாரிகள் உடல் உறுப்புகளை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். 

ஷ்ரத்தா கொலை வழக்கில் எந்த தொடர்பில்லை

துணை போலீஸ் கமிஷனர் (பரிதாபாத் என்ஐடி) நரேந்தர் காடியன் கூறுகையில், "உடல் உறுப்புகள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் உடல் உறுப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட டெல்லி காவல்துறையின் குழுவும் சம்பவ இடத்துக்குச் சென்றது. பின்னர், உதவி கமிஷனர் போலீஸ் (மெஹ்ராலி) வினோத் நரங், ஷ்ரத்தா வாக்கர் வழக்குக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிராகரித்தார். இந்த உடல் பாகங்கள் சுமார் இரண்டு மாதங்கள் பழமையானவை என்றும், சடலம் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். தடயவியல் குழு உடல் உறுப்புகளை பரிசோதித்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகு எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Embed widget