மேலும் அறிய

Crime: காதலர் தினத்தில் சோகம்.. வீட்டுக்கு தெரியாமல் கோவா சென்ற ஜோடி.. கடலில் மூழ்கி பலி..

உலகம் முழுக்க காதலர் தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் காதலன்/காதலிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிஃப்ட்கள் உள்ளிட்ட பல சர்ப்ரைஸ்களை கொடுத்தனர்

காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதலர்கள் கடலில் மூழ்கி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுக்க காதலர் தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பலரும் தங்கள் காதலன்/காதலிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக கிஃப்ட்கள் உள்ளிட்ட பல சர்ப்ரைஸ்களை கொடுத்தனர். மேலும் காதலின் அடையாளமாக கருதப்படும் ரோஜாப்பூவின் விலையும் கடுமையாக உயர்ந்தது. கோயில்கள், கடற்கரை, தியேட்டர்கள், மால்கள் என எங்கு பார்த்தாலும் காதலர்களின் கூட்டம் தான் காண முடிந்தது. 

இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த காதலர் தின கொண்டாட்டத்தில் சோகமான சம்பவம் ஒன்று கோவாவில் நிகழ்ந்துள்ளது. வெளியூர்களில் பணிபுரியும் காதலர்கள், காதலர் தினத்தை கொண்டாட பல்வேறு வெளியிடங்களுக்கு செல்வது போல, உத்தரபிரதேசத்தை  சேர்ந்த காதல் ஜோடி  கோவாவிற்கு சென்றுள்ளனர். விபு சர்மா என்ற அந்த இளைஞர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா என்ற பெண்  பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே காதலர் தினம் கொண்டாட விபு சர்மா, சுப்ரியா இருவரும் கோவா சென்றுள்ளனர். அங்கு பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றிப்பார்த்த அவர்கள் நேற்று  காதலர் தினம் என்பதால் 13 ஆம் தேதி நள்ளிரவு  முதல் கோவாவின் பலோலம் கடற்கரையில் சுற்றி திரிந்துள்ளனர். மேலும் அங்கு கடலில் இறங்கி விளையாடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.

இதனைத் தொடர்ந்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், கடலில் மூழ்கிய இருவரையும் மயங்கிய நிலையில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சுப்ரியாவும் விபுவும் உறவினர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரும் குடும்பத்தினருக்குத் தெரியாமல் கோவா வந்ததும் விசாரணையில் வெளிவந்தது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget