மேலும் அறிய

Crime: இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து: ஒன்றரை வயது குழந்தை பேருந்து டயரில் சிக்கி பலி

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தை பேருந்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வடக்குபட்டறை பங்காரு நகரை சேர்ந்தவர் குணசீலன் வயது (27). பொக்லைன் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மோனிஷா வயது (23) மகள் மயூரி (1½). இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் குணசீலன், மோனிஷா, மயூரி, குணசீலனின் சகோதரி நீலாவதி ஆகிய 4 நபர்கள் சென்றனர். தூசி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைதடுமாறி 4 நபர்களும் சாலையில் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் சிக்கிய குழந்தை மயூரி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். குணசீலன் உள்பட 3 நபர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

===========================================

 


Crime: இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து: ஒன்றரை வயது குழந்தை பேருந்து டயரில் சிக்கி பலி

 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரி உள்ளேயே கல்லூரி விடுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மகன் கிஷோர்காந்த் வயது (21) இவர் 4-ம் ஆண்டு பி.டெக் பயின்று வருகிறார். கிஷோர்காந்த் நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுள்ளார். பின்னர் வகுப்பறைக்கு சென்ற பிறகு கிஷோர்காந்த் தனக்கு வயிற்றுவலி இருப்பதாக சக மாணவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வகுப்பறையில் இருந்து விடுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிஷோர்காந்த் மதியம் திடீரென விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கல்லூரி நிர்வாகிகள் உடனடியாக வந்தவாசி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

 


Crime: இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து: ஒன்றரை வயது குழந்தை பேருந்து டயரில் சிக்கி பலி

 

தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிஷோர்காந்த் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் கிஷோர்காந்துக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாகவும் காலையில் சக மாணவர்களிடம் வயிற்றுவலி அதிகமாக உள்ளது என கூறியதாக தெரியவந்தது. மேலும் பொன்னூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கல்லூரி வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Embed widget