மேலும் அறிய

கும்பமேளாவுக்கு சென்ற கார் டயர் வெடித்து விபத்து: 8 பேர் பலி ; எங்கே? எப்படி?

இந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

 

ஜெய்ப்பூரில் தடுப்புச் சுவரைத் தாண்டிச் சென்ற கார், பேருந்து மீது மோதியதில் கும்பமேளாவுக்குச் சென்ற 8 பக்தர்கள் உயிரிழந்தனர்.

பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

கார் ஒன்றில் 8 பேர் கும்பமேளாவில் நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது ஜெய்ப்பூரில் உள்ள மோகம்பூரா அருகே தேசிய நெடுஞ்சாலை 48ல் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் திடீரென வெடித்தது.

இதில் நிலை தடுமாறிய கார் தடுப்புச்சுவரை தாண்டி அங்கு வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

இதனிடையே மவுனி அமாவாசை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

இந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதற்கு காரணம் உத்தரப்பிரதேச அரசின் நிர்வாகமின்மையே என எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகின்றன.

பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக அரசு தவறிவிட்டது எனவும் குற்றம் சாட்டுகின்றன.

ஆனால் கும்பமேளா நிகழ்வு அவ்வளவு பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி காண்பிக்கின்றனர் எனவும் பாஜக தரப்பு விளக்கம் அளிக்கிறது.

இத்தகைய சூழல் நடைபெற்று வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கும்பமேளாவில் பினித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி நீராடினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது! - மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து அன்புமணி ஆவேசம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget