மேலும் அறிய

வாணியம்பாடி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண்

’’கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 6 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்த நிலையில் முக்கிய குற்றவாளி இம்தியாஸ் தலைமறைவு’’

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்தவர் வசீம்அக்ரம் (40). சமூக ஆர்வலரான இவர்  மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளராக இருந்தார். கடந்த 10 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு ஜீவா நகரில் உளள மசூதியில் தொழுகை நடத்தி விட்டு அவரது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கத்தி, அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையும், கொலை நடந்த போது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி, கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு நடத்தினர்.


வாணியம்பாடி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண்

அதில் கொலை நடந்த காட்சிகள் தெளிவாக இருந்தது. கொலையாளிகள் இண்டிகா காரில் வந்து,  வசீம் அக்ரமை 6 பேர் கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பாலு செட்டி சத்திரம் அருகே உள்ள சோதனை சாவடியில் வந்த  காரை, போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் கூலிப்படையை சேர்ந்த பிரசாந்த் (23), தில்லிகுமார் (25), ஆகிய இருவர்  கைது செய்தனர்.  மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி இம்தியாஷ் குறித்து வசீம் அக்ரம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததுள்ளார். இதில் 3 பேர் கைது செய்து, அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சா, 10 கத்தி, 10 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. 


வாணியம்பாடி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண்

இதனால் இம்தியாசுக்கு, வசீம்அக்ரமுக்கும் முன் விரேதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரி இம்தியாஸ், மனித நேய ஜனநாக கட்சி மாநில துணை தலைவர் வசீம்அக்ரமை கொலை செய்ய முடிவு செய்தால், இக்கொலை நடந்தது என விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து வசீம் அக்ரம் கொலை வழக்கில் போலீசாரால், தேடப்பட்ட வந்த, காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தை சேர்ந்த ஜான்தாஸ் மகன் அகஸ்டின் (19), பாஸ்கர் மகன் சத்தியசீலன் (20), வண்டலுார் ஒட்டோரி விரிவாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரவீன்குமார் (20), நாகு மகன் முனீஸ்வரன் (20), மோகனசுந்தரம் மகன் செல்வக்குமார் (21), சென்னை ஊரப்பாக்கம் எபினேசர் மகன் அஜய் (21)  ஆகிய ஆறு பேரும் நேற்று மதியம் தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற எண்.3ல் நீதிபதி பாரதி முன்பாக, வழக்கறிஞர் மூலம் சரணடைந்தனர். இதையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டதால், திருச்சி சிறைக்கு பலத்த போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகியை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 6 பேர் தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முக்கிய குற்றவாளி இம்தியாஸ் தலைமறைவாக இருந்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget