மேலும் அறிய

தொழிலதிபரை கட்டிவைத்து சொத்துக்களை எழுதிவாங்கிய போலீஸ்..! 10 பேர் மீது சிபிசிஐடி வழக்கு..!

சினிமாவில்தான் போலீஸ் தாதாக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சொத்துக்களை எழுதி வாங்கும் ரவுடியிஸம் செய்வதையும் பார்த்திருப்போம்.

சினிமாவில் தான் போலீஸ் தாதாக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சொத்துக்களை எழுதி வாங்கும் ரவுடியிஸம் செய்வதையும் பார்த்திருப்போம்.

சினிமாவெல்லாம் வேண்டாம் நிஜ சம்பவமே இருக்கு என்பதுபோல் நடந்து கொண்டிருக்கின்றனர் சென்னை காவல்துறையைச் சேர்ந்த சிலர்.

இதுதாங்க பலே போலீஸின் கதை..

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். நல்ல வருமானம், செல்வாக்கு என்று இருந்துள்ளார். இவரை குறிவைத்து தொழில் போட்டியாளர்கள் சிலர் அண்ணாநகர் காவல்துறையைச் சேர்ந்த சில காவலர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினர். கடந்த 2019ம் ஆண்டு அவரையும், அவரது குடும்பத்தாரையும் செங்குன்றம் அருகேயுள்ள அவருடைய பண்ணை வீட்டிலேயே சிறைபிடித்துள்ளனர். தொழிலதிபரை கட்டிவைத்து மிரட்டி அவரிடம் சில சொத்துக்களை எழுதி வாங்கியிருக்கின்றனர். பெண் என்று பாராமல் கூட அவரது தாயைக் கூட மிரட்டித் தாக்கியுள்ளனர். குடும்பத்தினர் கண் முன்னரே துன்புறுத்தப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ராஜேஷ் போலீஸ் தலைமையிலான மிரட்டல் கும்பல் நீட்டிய பத்திரங்களில் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குடும்பத்துடன் வீடு திரும்பினார்.

வழக்கு பதியவே ஓராண்டு:

ராஜேஷ், உயிர்பிழைத்து தப்பியிருந்தாலும். அவருக்கு இழைக்கப்பட்ட துரோகமும் அநீதியும் அவரை நிம்மதி இழக்கச் செய்தது. இதனால், கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேஷ் புகார் அளித்தார். காவல்துறையினர் மீதே புகார் என்பதால் அந்தப் புகார் ஏற்றுக்கொள்ளப்படவே ஓராண்டானது. இதனால், 2020 ஆம் ஆண்டுதான் வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர், வழக்கு டிஜிபி உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக ஊரடங்குக்கு மத்தியிலும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். திருமங்கலம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 6 போலீஸ் அதிகாரிகள் தொழிலதிபர்கள் வெங்கடேஷ், ஸ்ரீநிவாச ராவ் உட்பட 10 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ பாண்டியராஜன் ஆகிய அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் வந்தது போலீஸேவா! என்று மக்களை ஆச்சர்யப்பட வைத்தது. இந்த 10 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். இந்நிலையில், தற்போது 10 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணை வேகமெடுத்துள்ளதோடு வழக்கு ஊடக வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட ராஜேஷ் குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget