மேலும் அறிய

தொழிலதிபரை கட்டிவைத்து சொத்துக்களை எழுதிவாங்கிய போலீஸ்..! 10 பேர் மீது சிபிசிஐடி வழக்கு..!

சினிமாவில்தான் போலீஸ் தாதாக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சொத்துக்களை எழுதி வாங்கும் ரவுடியிஸம் செய்வதையும் பார்த்திருப்போம்.

சினிமாவில் தான் போலீஸ் தாதாக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சொத்துக்களை எழுதி வாங்கும் ரவுடியிஸம் செய்வதையும் பார்த்திருப்போம்.

சினிமாவெல்லாம் வேண்டாம் நிஜ சம்பவமே இருக்கு என்பதுபோல் நடந்து கொண்டிருக்கின்றனர் சென்னை காவல்துறையைச் சேர்ந்த சிலர்.

இதுதாங்க பலே போலீஸின் கதை..

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். நல்ல வருமானம், செல்வாக்கு என்று இருந்துள்ளார். இவரை குறிவைத்து தொழில் போட்டியாளர்கள் சிலர் அண்ணாநகர் காவல்துறையைச் சேர்ந்த சில காவலர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினர். கடந்த 2019ம் ஆண்டு அவரையும், அவரது குடும்பத்தாரையும் செங்குன்றம் அருகேயுள்ள அவருடைய பண்ணை வீட்டிலேயே சிறைபிடித்துள்ளனர். தொழிலதிபரை கட்டிவைத்து மிரட்டி அவரிடம் சில சொத்துக்களை எழுதி வாங்கியிருக்கின்றனர். பெண் என்று பாராமல் கூட அவரது தாயைக் கூட மிரட்டித் தாக்கியுள்ளனர். குடும்பத்தினர் கண் முன்னரே துன்புறுத்தப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ராஜேஷ் போலீஸ் தலைமையிலான மிரட்டல் கும்பல் நீட்டிய பத்திரங்களில் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குடும்பத்துடன் வீடு திரும்பினார்.

வழக்கு பதியவே ஓராண்டு:

ராஜேஷ், உயிர்பிழைத்து தப்பியிருந்தாலும். அவருக்கு இழைக்கப்பட்ட துரோகமும் அநீதியும் அவரை நிம்மதி இழக்கச் செய்தது. இதனால், கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேஷ் புகார் அளித்தார். காவல்துறையினர் மீதே புகார் என்பதால் அந்தப் புகார் ஏற்றுக்கொள்ளப்படவே ஓராண்டானது. இதனால், 2020 ஆம் ஆண்டுதான் வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர், வழக்கு டிஜிபி உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக ஊரடங்குக்கு மத்தியிலும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். திருமங்கலம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 6 போலீஸ் அதிகாரிகள் தொழிலதிபர்கள் வெங்கடேஷ், ஸ்ரீநிவாச ராவ் உட்பட 10 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ பாண்டியராஜன் ஆகிய அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் வந்தது போலீஸேவா! என்று மக்களை ஆச்சர்யப்பட வைத்தது. இந்த 10 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். இந்நிலையில், தற்போது 10 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணை வேகமெடுத்துள்ளதோடு வழக்கு ஊடக வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட ராஜேஷ் குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD SILVER RATE Apr.1: ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
ஏப்ரல் 1-ம் தேதியே பேரதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி; இவ்வளவு உயர்வா.? தற்போது விலை என்ன.?
Trump Iran War Hormuz: “தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
“தைரியம் இருந்தா நீங்களே போய் எண்ணெய் எடுத்துக்கோங்க“; பிரிட்டனை பொளந்துகட்டிய ட்ரம்ப்
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Cylinder Price Hike: ஒரு பக்கம் தட்டுப்பாடு.. மறுபக்கம் உயர்ந்த சிலிண்டர் விலை.. ஷாக்கான பொதுமக்கள்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Karunas: நான் இல்லை.. எடப்பாடி பழனிசாமி தான் ஒரிஜினல் ரவுடி.. கடுமையாக விமர்சித்த கருணாஸ்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
Aadhav Arjuna: அம்மாவின் தற்கொலை.. மேடையில் கதறி அழுத ஆதவ் அர்ஜூனா.. கண்கலங்கிய தவெக தொண்டர்கள்!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
IPL 2026 PBKS vs GT: ஆட்டம் காட்டிய வெற்றி.. பஞ்சாப்பிற்கு பலே பலே! கடைசி ஓவரில் தோற்ற குஜராத்!
IPL 2026 PBKS vs GT: ஆட்டம் காட்டிய வெற்றி.. பஞ்சாப்பிற்கு பலே பலே! கடைசி ஓவரில் தோற்ற குஜராத்!
Embed widget