மேலும் அறிய

திருவண்ணாமலை: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

தானிப்பாடி பகுதியில் பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த மோத்தக்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசு பள்ளியில் 608 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் சத்துணவு அமைப்பாளராக ஏழுமலை என்பவர் பணியாற்றி வருகிறார். சத்துணவு அமைப்பாளர் உடல்நலக்குறைவால் விடுமுறையில் உள்ளார். இந்த நிலையில் மதிய உணவை சமையலர் லட்சுமி, சமையல் உதவியாளர் பல்ஹித் ஆகிய இருவரும் சேர்ந்து சமைத்துள்ளனர். பின்னர் மதியம் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறி கொண்டிருந்தனர். மதிய உணவை வாங்கி சாப்பிட்ட மாணவர்களின் உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைகண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் மதிய உணவு சாப்பிட்ட 47 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மற்ற மாணவர்கள் உடனடியாக உணவை சாப்பிடாமல் நிறுத்திவிட்டனர்.

 

 


திருவண்ணாமலை: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

அதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு மாணவர்கள் தானிப்பாடி அருகில் உள்ள ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனையில் பதற்றம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெற்றோர்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அங்கு மருத்துவக்குழு வந்துவிட்டதால் சாலைமறியலை கைவிட்டனர். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வினி, மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் ரெட்டியார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆறுதல் கூறினார்.

 


திருவண்ணாமலை: பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

 

மேலும், பெற்றோர்களிடமும் நலமுடன் இருந்த மாணவ, மாணவிகளிடம் நடந்த சம்பவங்கள் குறித்து அவர் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சமையலர் லட்சுமி, உதவியாளர் பல்ஹித் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் மாணவர்களை கண்காணித்து முழுமையான சிகிச்சைக்கு பின் 100 சதவீத ஆரோக்கியத்தை உறுதி செய்த பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். 6 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை 6-ம் வகுப்பு ரிஷிபாலன், 10-ம் மாணவன் வீரவேல், 7-ம் வகுப்பு மாணவர்கள் பிரகாஷ், போசிக்கண் (14), வினைகுமார் உள்பட 6 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து மருத்துவ குழுவினர் மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். மாணவர்களின் உணவில் பள்ளிவிழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget