மேலும் அறிய

Chennai : சென்னையில் பரபரப்பு.. பதைபதைத்த சுற்றம்.. 5-வது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறுமி..

பெற்றோரின் அஜாக்கிரதையால் 5வது மாடியில் இருந்து சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 5-வது மாடியில் இருந்து சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி பகுதியை சேர்ந்தவர் ரவி. பூந்தமல்லி நகராட்சியில் வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் இவர் கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 5வது தளத்தில் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு சிந்தியா என்ற மனைவியும், 8 வயதில் ஆரோ என்ற மகனும், 4 வயதில்  வின்சி என்ற மகளும் உள்ளனர்.

தனியாக இருந்த சிறுமி:

இந்நிலையில், நேற்று காலை ரவி கோவிலுக்கும், ஆரோ விளையாட்டுப் பயிற்சிக்கும் சென்றுவிட்டனர். வின்சி மட்டும் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். மகள் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறார். எழுவதற்குள் வந்துவிடலாம் என்று எண்ணி சிந்தியாவும் சிறுமியை வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு நடைபயிற்சிக்குக் கிளம்பிவிட்டார். நடைபயிற்சி முடித்து வந்த சிந்தியா வீட்டிற்குள் வின்சியைத் தேடி பார்த்தபோது அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்த சிந்தியா, அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, வின்சி கீழே இருப்பதாகக் கூறியுள்ளனர். பூட்டியிருந்த வீட்டில் இருந்து கீழே எப்படிச் சென்றார் என்று குழம்பிய சிந்தியா, கீழ் வீட்டிற்கு போனபோது வின்சி மயக்க நிலையில் இருந்துள்ளார்.

சிறுமி உயிரிழப்பு:

இதனையடுத்து, வின்சியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு சிந்தியா உட்பட பலர் கதறி அழுதுள்ளனர். சிறுமி உயிரிழந்தது குறித்து பூந்தமல்லி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி வின்சி 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்தது தெரியவந்தது. சிறுமியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காவல்துறை தகவல்:

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், “3 பேரும் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி மட்டும் தனியாகத் தூங்கியுள்ளார். திடீரென்று கண் விழித்த அவர் வீட்டில் யாரும் இல்லாதது அறிந்து அழுதுள்ளார். பின்னர் வீட்டின் பின்பகுதியில் உள்ள கதவைத் திறந்து பால்கனி வழியாக வந்து அங்கிருந்த நாற்காலி மீது ஏறி நின்று சத்தம் போட்டு அழுதுள்ளார். அப்போது, நிலை தடுமாறிய சிறுமி வின்சி 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் யாரும் இல்லை என்பதால் சிறுமி கீழே விழுந்தது தெரியவில்லை. சிறிதுநேரம் கழித்து அவ்வழியே வந்த காவலாளி சிறுமி மயக்கமாக இருப்பதாக நினைத்து பக்கத்து வீட்டில் ஒப்படைத்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் சிறுமி வின்சி உயிரிழந்துள்ளார்” என்று தெரிவித்தனர்.

பெற்றோரின் அஜாக்கிரதையால் சிறுமி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget