மேலும் அறிய

Crime: திருச்சியில் கள்ளக்காதலால் கொலை செய்யபட்ட வழக்கு - 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் குத்தி கொலை செய்யபட்ட வழக்கில் 3 பேர் கைது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சின்னராசு(வயது 35). டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்டார். இதேபோல் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் புல்லட் ராஜா என்ற நளராஜா(41). இவர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி ஆவார். கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரான சதீஷ்குமார்(32) என்பவரை கொலை செய்த வழக்கில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நளராஜா கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நளராஜாவின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சின்னராசுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் நளராஜா வெளியே வந்தார். இதையடுத்து அவர் தனது மனைவிக்கும், சின்னராசுக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ளத்தொடர்பை தொடர்ந் தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணவேணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சின்னராசு சென்றார். இதனை அறிந்த நளராஜா அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே நின்று கிருஷ்ணவேணியுடன் சின்னராசு பேசிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட நளராஜா அவர்களை கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நளராஜா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நளராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நளராஜாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த நளராஜா மற்றும் அவரது நண்பர்களான சமயபுரம் பெரியார் நகர் இந்திரா காலனியை சேர்ந்த ஷேக் அப்துல்லா(45), சமயபுரம் இந்திரா காலனி வள்ளுவர் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமானின் மகன் அப்துல்கனி(26) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் நளராஜா வாக்குமூலத்தில் தெரிவித்தது.. கடந்த 3 மாதங்களாக ஆட்டோ டிரைவர் சின்னராசு எனது மனைவியிடம் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த நான், உறவினர்கள் மூலம் பஞ்சாயத்து செய்து, இனி இருவரும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தோம். அதையும் மீறி தொடர்ந்து எனது மனைவிக்கு சின்னராசு தொல்லை கொடுத்து வந்தார்.


Crime: திருச்சியில் கள்ளக்காதலால் கொலை செய்யபட்ட வழக்கு - 3 பேர் கைது

மேலும் கடந்த வாரம் எனது வீட்டுக்கு ஆட்டோவில் வந்த அவர் தகாத வார்த்தைகளால் என்னை திட்டி, ஏளனமாக பேசினார். இதனால், ஆத்திரமடைந்த நான் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்கிடையே எனது மனைவியும், தன்னை சின்னராசு எப்படியோ மயக்கி விட்டதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறும் அடிக்கடி என்னிடம் கூறினார். இதனால் சின்னராசுவை கொலை செய்ய திட்டமிட்டு நேற்று முன்தினம் அவரை பின்தொடர்ந்து சமயபுரத்திற்கு வந்தேன். எனது திட்டத்திற்கு உதவியாக சமயபுரத்தை சேர்ந்த எனது நண்பர்களான ஷேக் அப்துல்லா, அப்துல்கனியும் வந்தனர். சமயபுரத்தில் உள்ள ஒரு கடையில் புதிதாக கத்தியை வாங்கி வைத்துக்கொண்டேன். 

இதையடுத்து முடி காணிக்கை மண்டபம் அருகே நின்ற சின்னராசுவிடம் சென்று, கட்டுப்பாடு விதித்ததை மீறி எனது மனைவியிடம் பேசியது குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சின்னராசுவை கத்தியால் குத்திக்கொன்றேன். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று சமயபுரம் பகுதியில் புதரில் மறைந்திருந்த என்னை போலீசார் பிடித்துவிட்டனர். இவ்வாறு நளராஜா வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்படி 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். கொலை நடந்த சில மணி நேரத்தில் துரிதமாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை விரைவாக பிடித்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget