மேலும் அறிய

Crime: திருச்சியில் கள்ளக்காதலால் கொலை செய்யபட்ட வழக்கு - 3 பேர் கைது

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் குத்தி கொலை செய்யபட்ட வழக்கில் 3 பேர் கைது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சின்னராசு(வயது 35). டிரைவரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்டார். இதேபோல் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் புல்லட் ராஜா என்ற நளராஜா(41). இவர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகனின் தம்பி ஆவார். கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரான சதீஷ்குமார்(32) என்பவரை கொலை செய்த வழக்கில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நளராஜா கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நளராஜாவின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சின்னராசுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் நளராஜா வெளியே வந்தார். இதையடுத்து அவர் தனது மனைவிக்கும், சின்னராசுக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பை அறிந்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் இருவரும் கள்ளத்தொடர்பை தொடர்ந் தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணவேணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சின்னராசு சென்றார். இதனை அறிந்த நளராஜா அவர்களை பின்தொடர்ந்து சமயபுரம் சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் முடி காணிக்கை மண்டபம் அருகே நின்று கிருஷ்ணவேணியுடன் சின்னராசு பேசிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட நளராஜா அவர்களை கண்டித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த நளராஜா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சின்னராசுவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நளராஜா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நளராஜாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த நளராஜா மற்றும் அவரது நண்பர்களான சமயபுரம் பெரியார் நகர் இந்திரா காலனியை சேர்ந்த ஷேக் அப்துல்லா(45), சமயபுரம் இந்திரா காலனி வள்ளுவர் தெருவை சேர்ந்த அப்துல் ரகுமானின் மகன் அப்துல்கனி(26) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் நளராஜா வாக்குமூலத்தில் தெரிவித்தது.. கடந்த 3 மாதங்களாக ஆட்டோ டிரைவர் சின்னராசு எனது மனைவியிடம் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த நான், உறவினர்கள் மூலம் பஞ்சாயத்து செய்து, இனி இருவரும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தோம். அதையும் மீறி தொடர்ந்து எனது மனைவிக்கு சின்னராசு தொல்லை கொடுத்து வந்தார்.


Crime: திருச்சியில் கள்ளக்காதலால் கொலை செய்யபட்ட வழக்கு - 3 பேர் கைது

மேலும் கடந்த வாரம் எனது வீட்டுக்கு ஆட்டோவில் வந்த அவர் தகாத வார்த்தைகளால் என்னை திட்டி, ஏளனமாக பேசினார். இதனால், ஆத்திரமடைந்த நான் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்கிடையே எனது மனைவியும், தன்னை சின்னராசு எப்படியோ மயக்கி விட்டதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறும் அடிக்கடி என்னிடம் கூறினார். இதனால் சின்னராசுவை கொலை செய்ய திட்டமிட்டு நேற்று முன்தினம் அவரை பின்தொடர்ந்து சமயபுரத்திற்கு வந்தேன். எனது திட்டத்திற்கு உதவியாக சமயபுரத்தை சேர்ந்த எனது நண்பர்களான ஷேக் அப்துல்லா, அப்துல்கனியும் வந்தனர். சமயபுரத்தில் உள்ள ஒரு கடையில் புதிதாக கத்தியை வாங்கி வைத்துக்கொண்டேன். 

இதையடுத்து முடி காணிக்கை மண்டபம் அருகே நின்ற சின்னராசுவிடம் சென்று, கட்டுப்பாடு விதித்ததை மீறி எனது மனைவியிடம் பேசியது குறித்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சின்னராசுவை கத்தியால் குத்திக்கொன்றேன். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்று சமயபுரம் பகுதியில் புதரில் மறைந்திருந்த என்னை போலீசார் பிடித்துவிட்டனர். இவ்வாறு நளராஜா வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்படி 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். கொலை நடந்த சில மணி நேரத்தில் துரிதமாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை விரைவாக பிடித்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

தலைப்பு செய்திகள்

கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget