மேலும் அறிய

Crime: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி... ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

திருமணம் செய்து கொள்ள காதலி மறுப்பு தெரிவித்த காரணத்தால் இளைஞர் ஃபேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ளது கவுகாத்தி. கவுகாத்தி அருகே அமைந்துள்ள நகரம் சில்ஷர். இந்த நகரத்தில் வசித்து வந்தவர் ஜெய்தீப்ராய். மருந்து விற்பனை பிரதிநிதியான இவருக்கு 27 வயதாகிறது. இவரது குடும்பத்தினர் கலைன் பகுதியில் வசித்து வருகின்றனர். ஜெய்தீப்ராய் வாடகைக்கு அறை எடுத்து சில்ஷரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததுள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ஜெய்தீப் ராய் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரபரப்புக்கு வந்துள்ளார். அப்போது, தனது நேரலையில் பார்த்துக் கொண்டவர்களிடம், “ நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த பெண்ணிடம் கேட்டேன். ஆனால், அந்த பெண் அனைவருக்கும் முன்பாக என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் அவரது மாமா என்னிடம் வந்து காதலை கைவிடாவிட்டால் அந்த பெண்ணை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார். என்னால் அந்த பெண்ணுக்கு எந்த தொந்தரவும் வர வேண்டாம். நான் இந்த உலகத்தை விட்டே போகிறேன்.


Crime: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி... ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

அம்மா. மாமா, அத்தை. அக்கா, அண்ணா உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஆனால், என் காதலியை நான் அதிகம் நேசிக்கிறேன். அவள் இல்லாமல் என்னால் வாழ இயலாது.” என்று கூறிவிட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த சம்பவம் நிகழ்ந்த உடனே இதுதொடர்பாக காவல்துறையினருக்கு எந்த புகாரும் கிடைக்கப்பெறவில்லை. தற்போது, அந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது ஜெய்தீப் ராய் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


Crime: திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலி... ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

உயிரிழந்த இளைஞரின் அண்ணன் ரூபம் கூறியதாவது, "என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் நாங்கள் புகார் அளிக்காமல் இருந்தோம். அந்த பெண்ணின் குடும்பத்தால் எனது தம்பிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனது தம்பிதான் எங்களது குடும்பத்தை கவனித்து வந்தான். எனது தம்பி நன்றாகவே சம்பாதித்து வந்தான். அதனால், அந்த பெண் குடும்பத்தினர் ஏன் எனது தம்பியை ஏற்கவில்லை என்றும் புரியவில்லை" என்றார்.

காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்த காரணத்தால் காதலன் ஃபேஸ்புக்கில் நேரலையில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget