![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maharashtra Violence: கூடவே இருந்து குழி பறித்த நண்பர்கள்: கணவர் இல்லாத போது மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
கணவரின் கொடூர நண்பர்களால் நேர்ந்த கொடூரத்தை நினைத்து அதிர்ச்சியில் உறைந்திருந்த அப்பெண், உடனே தனது கணவருக்கு கால் செய்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.
![Maharashtra Violence: கூடவே இருந்து குழி பறித்த நண்பர்கள்: கணவர் இல்லாத போது மனைவிக்கு நேர்ந்த கொடூரம்! 2 held for Sexual Harassment friend's wife in maharastra Maharashtra Violence: கூடவே இருந்து குழி பறித்த நண்பர்கள்: கணவர் இல்லாத போது மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/11/e67aa962d6dcaccdda26d35b7ebba0f4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பேரை போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வசாய் என்ற பகுதியில் 30 வயதுடைய நபர் தந்து 27 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். கணவரின் நண்பர்கள் தானே வீட்டுக்கு வருகிறார்களே என்று அப்பெண் உணர்ந்து, அவர்கள் அடிக்கடி வருவதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால், அவர்கள்தான் தனது வாழ்க்கையில் கொடூரமான சம்பவத்தை செய்யப்போகிறார்கள் என்று அப்பெண் நினைத்திருக்கமாட்டார்.
சம்பவத்து அன்று, கணவர் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். அப்போது, இதனை அறிந்துகொண்ட நண்பர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, அப்பெண் கணவர் வீட்டில் இல்லை, வெளியே சென்றிருக்கிறார் என்று அவர்களிடம் கூறினார். ஆனால், உனது கணவர் வீட்டில் இல்லை தெரிந்துக்கொண்டுதான், வந்தோம் என்று கூறியது. அப்பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதே, அப்பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய வந்துள்ளார்கள் என கணித்தப் பெண், அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த கொடூர மனிதர்கள் அப்பெண்ணை அடித்து உடைத்து கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள்.
கணவரின் கொடூர நண்பர்களால் நேர்ந்த கொடூரத்தை நினைத்து அதிர்ச்சியில் உறைந்திருந்த அப்பெண், உடனே தனது கணவருக்கு கால் செய்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த கணவர், உடனே இதுகுறித்து போலீசாரிடம் புகார் கூறினார்கள்.
அதன்பிறகு, ஒரே நாளில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை பெல்ஹார் காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை நவம்பர் 13ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க : Tamil Nadu Rain : ட்விட்டரில் லீவா எனக் கேட்ட ஸ்கூல் பையன்.. ஸ்கூல் போகச் சொல்லி ரிப்ளை செய்த கலெக்டர்!
Watch Video | நடு இரவு..! கொட்டும் மழை! நிற்காத பணி! நெகிழ வைக்கும் சென்னையின் தூய்மை பணியாளர்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)